Tuesday 26 November 2019

பிரபாகரன்னா யாரு

பிரபாகரன்னா யாரு?

பிரபாகரன் அப்டின்னா யாருன்னே தெரியாத தமிழ்நாட்டு பசங்க இப்பவும் உண்டு.

அவங்க இத படிங்க..

4 பேர் சேந்தாலும் ஒருத்தன அடிக்கமுடியாதுன்னா அவன் எவ்வளவு பெரிய வீரன்?

அருவாளோட 10 ரவுடிங்க போனாலும் ஒருத்தன அடிக்க முடியாதுனா அவன் எவ்வளவு பெரிய வீரன்?

துப்பாக்கியோட போலீஸ் வந்தாலும் அடிக்க முடியாதுன்னா அவன் எவ்வளவு பெரிய வீரன்?

பீரங்கியோட ராணுவமே வந்தாலும் அடிக்கமுடியாதுன்னா அவன் எவ்வளவு பெரிய வீரன்?

அவ்வளவு பெரிய வீரன்தான் பிரபாகரன்.

டானுக்கெல்லாம் டான்!

ஒரு லட்சம் இந்திய ராணுவ வீரர்கள் போய் ஒதை வாங்கிட்டு வந்த மாவீரன்.

அப்பிடி ஒரு மாஸ் ஹீரோ நம்ம தமிழினத்துல பொறந்திருக்கான்.

இது நமக்கு பெரும இல்லையா?!

தமிழனா பொறந்துட்டு பிரபாகரன் யார்னு தெரியாது னு சொல்றதும் ஒண்ணுதான்
எனக்கு அப்பன் பேரு தெரியாது னு சொல்றதும் ஒண்ணுதான்.

அவரென்ன நமக்கு அப்பா மாதிரியா?!

ஆமாப்பா! அப்பனுக்கு மேல!
தலைவன்!

புரியுற மாதிரி சொல்லுறேன்.
இந்தியாவுல தெற்க கடைசியா தமிழ்நாடு இருக்கு.
அப்பறம் ஆழமில்லாத கடல்.
அதுல படகு போற அளவு பக்கத்துல இலங்கை அதாவது ஸ்ரீலங்கா இருக்கு.

இது நாலுபக்கமும் கடல் சூழ்ந்த வலது உள்ளங்கை வடிவம் மாதிரி ஒரு தீவு.
இந்த உள்ளங்கைல  விரல்கள் அளவுக்கு தமிழர் வாழ்ற பகுதி.
மீதி சிங்களம் பேசுற வேற ஒரு மக்கள் வாழுற பகுதி.

1947 ல இந்தியாவுக்கு சுதந்திரம் கெடச்ச எட்டு மாசம் கழிச்சு இலங்கைக்கு சுதந்திரம் கெடைச்சு தனிநாடா ஆகுது.

நாம பண்ணுன ஒரே தப்பு என்னன்னா அப்பவே இலங்கைல வடக்கு கிழக்கா அதோட அளவுல மூணுல ஒரு பங்கு தமிழர்கள் வாழுற பகுதியயும் தமிழ்நாட்டோட சேக்கறத பத்தி யோசிக்காம விட்டதுதான்.

இலங்கைல 70% சிங்களவர்களும் 30% தமிழர்களும் இருந்தாங்க.

பெரும்பான்மையா இருக்குற சிங்களர்கள் வேலை வாய்ப்பு, கல்வி, அரசியல் பதவி எல்லாத்தையும் முழுக்க ஆக்கிரமிச்சிக்க தொடங்குனாங்க.

இப்போ இந்தியாவுல 60% இருக்குற ஹிந்தி மக்கள் மத்திய அரச கைபற்றி
இந்திபேசாத மாநிலங்களுக்கு சலுகைகள் கொடுக்காததோட
வடயிந்தியர்கள பெரிய அளவுல குடிபோக வச்சு அந்த மாநிலத்தோட வேலைவாய்ப்பை குறுக்கு வழியில பறிக்கிறாங்களே அதேமாதிரி
அங்க சிங்களர்கள் எல்லாத்தயும் பறிச்சிக்க நினைச்சாங்க.

70% சிங்களர்ல எல்லாருமே புத்த மதத்த சேந்தவங்க

  30% தமிழர்கள்ல இந்து, கிறிஸ்டின், முஸ்லீம் னு 3 மதங்கள சேந்தவங்க இருந்தாங்க.
இதுபோக தமிழ்நாட்டுல இருந்து தேயிலை தோட்ட வேலைக்கு வெள்ளக்காரங்க கூட்டிட்டு போன தமிழர்கள் இலங்கை தீவு நட்டநடுவுல இருக்குற மலைகள்ல சிங்களர் மத்தியில இருந்தாங்க.

தமிழர்கள் படிச்சவங்களா முன்னேறிய சமூகமாக இருந்தாங்க.
அரசாங்க அதிகாரிகள்ல 60% தமிழர்களா இருந்தாங்க.

சிங்களவர்கள் அப்படி இல்ல.
அவங்க நம்ம பீகார் மாதிரி.
அவங்க வாழ்ந்த பகுதி அதாவது இலங்கை தீவோட நடுப்பகுதி தெற்கு மற்றும் மேற்கு ல அவங்க மக்கட்தொகை நெருக்கம் ரொம்ப அதிகம்.
படிப்பறிவில்லாம வறுமைல வாடினாங்க.

சிங்களர்கள் பெரும்பான்மை பலத்த வச்சு ஆட்சிய புடிச்சாங்க.

முதல் வேலையா தமிழ்நாட்டுல இருந்து போன மலைநாட்டு தமிழர்கள ரேசன்காடு குடுக்காம இந்தியாவுக்கே வெரட்டி அடிச்சாங்க.

தேசிய மொழியா சிங்களத்த கொண்டுவந்தாங்க.
சிங்களம் தெரிஞ்சா மட்டும்தான் வேலை கிடைக்கும்னு சட்டத்த மாத்தினாங்க.

இப்படி தமிழர்கள் படிப்படியா கொறஞ்சு சிங்களர்கள் 90% அரசாங்க வேலைகள்ல நிறைஞ்சிட்டாங்க.
போலீஸ், ராணுவம் எல்லாத்துலயும் சிங்களம் தெரிஞ்சவங்க மட்டுமே சேரமுடிஞ்சதால 99% அவங்களே நிரம்பிட்டாங்க.

தமிழ் பகுதிகள்ல இருக்குற கல்லூரிகள்லயும் சிங்கள மாணவர்களுக்கு இடம் அதிகமா ஒதுக்கீடு பண்ணாங்க.

மக்கட்தொகை கம்மியா இருக்குற தமிழர் பகுதிகளுக்கு அரசாங்க ஆதரவோட நிலத்த பத்திரம் எழுதி வாங்கி கூட்டம்கூட்டமா குடிவந்து புதுபுது சிங்கள கிராமங்கள உருவாக்கினாங்க.

  பிக்குகள் ன்ற புத்த மத சாமியார்கள் இந்து முஸ்லீம் பகுதிகள் புத்தருக்கு பெரிய பெரிய கோவில் கட்ட ஆரம்பிச்சாங்க.

தமிழர்கள் உருவாக்கி வச்சிருந்த ஆசியாவிலேயே பெரிய நூலகம் ஒன்ன நெருப்பு வச்சி கொளுத்தினாங்க.

தமிழர்கள் செல்வநாயகம் ன்ற தலைவர் தலைமைல ஜனநாயக வழியில எவ்வளவோ போராடி பாத்தாங்க.
ஆனா சிறுபான்மையான தமிழர்களால ஜனநாயக வழியில எதையும் தடுத்து நிறுத்த முடியல

செல்வநாயகம் தமிழ்நாடு மாதிரி தனி போலீஸ் கொண்ட மாநிலம் கேட்டுபாத்தாரு.
கெடைக்கல.
கடைசியா 'எங்கள விட்டுடுங்க நாங்க தனிநாடா இருக்கறோம்' னு சொல்லி தேர்தல்ல நின்னாரு.
தமிழர்கள் மொத்த ஓட்டும் அவருக்கு விழுந்தது.

சிங்கள தலைவர்கள் செல்வாவுக்கு தந்த வாக்குறுதிகள நிறைவேற்றல.
அவங்க நாடாளுமன்றத்துல போட்ட  ஒப்பந்தத்தையே கிழிச்சு போட்டுட்டாங்க.

போலீஸ், ராணுவம், அதிகாரிகள், அரசியல்வாதிகள் எல்லாருமே சிங்களர் ன்றதால தெருவுல போற எந்த சிங்களவனும் எந்த தமிழன் வீட்டுலயும் புகுந்து அவன் பொண்ண தூக்கிட்டு போகலாம்ன்ற நெலமை.

இதனால தமிழ் இளைஞர்கள் ஆயுதத்த கையில எடுத்தாங்க.
சிங்களர்கள தட்டி கேட்டாங்க.
அப்ப பிரபாகரன் சின்ன குழந்தைதான்.

சிங்களர்கள் நிறைஞ்சு இருக்குற போலீஸ் ஸ்டேசன் ராணுவ முகாம் இதையெல்லாம் தமிழ் இளைஞர்கள் தாக்கினாங்க.

பதிலுக்கு அரசாங்க ஆதரவோட சிங்கள போலீசும் ராணுவமும் ரவுடிகளும் தமிழ் பொதுமக்கள் மீது கலவரம் பண்ணி கொள்ளையடிச்சு குழந்தைங்க வயசானவங்கனு பல பேர கொன்னாங்க.
பல தமிழ் பெண்கள கற்பழிச்சாங்க.
ஆயுதம் தூக்கி பதிலடி குடுத்த தமிழ் கைதிகள ஜெயிலுக்குள்ளயே போய் கொடூரமா கொல பண்ணாங்க.

பிரபாகரனுக்கு 16 வயசு ஆச்சு.
கண்முன்னாடி நடக்குற கொடுமைகள பாத்து அவரும் தன்னோட இனத்துக்காக ஆயுத குழுவுல இணைஞ்சாரு.

13 வருசம் காடுகள்ல தலைமறைவா இருந்து பல இளைஞர்கள சேத்தாரு.

அவரே ஒரு துப்பாக்கி செஞ்சிக்கிட்டாரு.
போலீஸ அடிச்சு துப்பாக்கிய புடுங்கினாரு.
பேங்க்க கொள்ளையடிச்சு பணம் சேத்தாரு.
அத வெச்சு தமிழ்நாட்டுல ஆயுதம் வாங்குனாரு.
காட்டிக்கொடுக்குற தமிழர்களயும் கொன்னாரு.

தமிழர் பகுதிகள் அட்டகாசம் பண்ற இராணுவத்த கொன்னாரு.
அவங்க ஆயுதங்கள எடுத்துகிட்டாரு.

1980 ல அவர் கீழ ஒரு சின்ன படை உருவாகிடுச்சு.
அவங்கதா விடுதலைப் புலிகள்.

சீனாவும் ஒரு புத்தமத நாடு அது இலங்கைக்கு ஆயுதம் வித்துச்சு.
இந்திரா காந்தி காலத்துல இதுக்கு பதிலடியா இந்தியா இலங்கைய அடக்க தமிழ் குழுக்களுக்கு ஆயுதம் கொடுத்து பயிற்சி கொடுத்துச்சு.

ராஜீவ் காந்தி காலம் வர தமிழ்நாட்டுல தங்கி புலிகள் பயிற்சி பண்ணினாங்க.
தமிழ்நாட்டுல பிரபாகரனுக்கு இருக்குற மரியாதைய பாத்துட்டு எம்.ஜி.ஆர் அவங்கள ஆதரிச்சாரு.

இந்த காலத்துல புலிகள் பெண்களையும் சேர்த்துகிட்டு பெரிசா ஆச்சு.
அவங்க ராணுவத்தோட சண்டபோட்டு அவங்க ஆயுதங்கள பறிச்சு பெரிய ராணுவமா உருவாகிட்டாங்க.

காட்டுக்குள்ள மறைஞ்சி அடிச்ச காலம் போய் ஊரையே தன்னோட படைபலத்தால பாதுகாப்பு போட்டு ராணுவம் போலீச இல்லாம பண்ணி தனி அரசாங்கம் நடத்துனாரு பிரபாகரன்.
தமிழ் மக்களும் முழு ஆதரவு தந்தாங்க.

அப்பறம் ராஜீவ் காந்தி பிரதமராகி போபர்ஸ் பீரங்கி ஊழல் செஞ்சு மாட்டிக்கிட்டாரு.
இத திசைதிருப்பி நல்லபேர் வாங்க இலங்கையில சமாதானம் கொண்டுவரேன்னு எறங்கறாரு.
பிரபாகரன கூப்பிட்டு பணிஞ்சு போக சொல்லி மிரட்டுறாரு.

நம்ம தலைவர் பணியல.
இலங்கைக்கு இந்திய ராணுவத்த அனுப்புறாரு.
சும்மா இல்ல ஒரு லட்சம் பேரு பீரங்கி விமானம் கப்பல் னு பெரிய படை.
புலிப்படைல அப்போ பத்தாயிரம் பேர்தான் இருந்தாங்க.
புலிகளோட மூணு வருசம் சண்ட போட்டு பெரிய உயிரிழப்போட உதை வாங்கி திரும்புச்சு இந்திய ராணுவம்.

ஆனாலும் இந்திய ராணுவம் அங்க நெறய கொல பண்ணிருக்கு.
பத்தாயிரம் பேர்வர செத்துருக்காங்க.
தன்னோட மக்கள கொன்னவன ஒரு உண்மையான தலைவர் சும்மாவாவிடுவாரு?!
அதான் ராஜீவ் காந்திய மனித வெடிகுண்டு அனுப்பி போட்டுத் தள்ளிட்டாரு பிரபாகரன்.

இந்திய ராணுவம் அங்குட்டு போனதும் இங்க சிங்கள ராணுவம் தாக்குச்சு.
அதையும் தோற்கடிச்சாரு பிரபாகரன்.

வலது உள்ளங்கைல நடுவிரல் நகம் போக மீதி விரல்கள் புலிகள் கட்டுப்பாட்டுக்கு வந்தாச்சு.

ஆமா! எவனாலயும் எந்த கொம்பாதி கொம்பனாலயும் உள்ள நுழைய முடியல.
பிரபாகரன்தான் அரசாங்கம் நடத்துனாரு.
மக்கள்ட்ட வரி வாங்கி உலகத்துல இருக்குற தமிழர்கள்ட்ட நிதி வாங்கி தரைப்படை கப்பல் படை மட்டுமில்லாம விமானப்படையே உருவாக்கிட்டாரு.

ஒருத்தன் கத்தி வச்சிருந்தா பெரிய ஆளு.

துப்பாக்கி வச்சிருந்தா அத விட பெரிய ஆளு.

பீரங்கி வச்சிருந்தா அதவிட பெரிய ஆளு.

விமானப்படை வச்சிருந்தா....

அவ்வளவு பெரிய ஆளுதான் பிரபாகரன்.

விஜய், அஜித் மாதிரி டூப் ஹீரோ இல்ல.
நிஜமான ஹீரோ!

தமிழ்நாட்டு இளைஞர்கள் நிறைய பேர் போய் அவர் படைல சேந்தாங்க.
உலகம் முழுக்க தமிழர்கள் "தலைவா"னு அவர தலைல தூக்கிவச்சிட்டு ஆடுனாங்க.

அவர் தன்னோட நாட்டு வளங்கல எந்த கார்ப்பரேட்டுக்கும் விக்கல.
அவர் யாருக்குமே பணியல.

உலக நாடுகள் இலங்கைக்கு கடனுக்கு ஆயுதம் வித்து நல்ல லாபம் பாத்தாங்க.
எவ்வளவோ பண்ணியும் இலங்கை அரசாங்கத்துக்கு தோல்வி மேல தோல்வி.

2002 ல மிகப்பெரிய ராணுவ முகாம் இருந்த ஆனையிறவு முகாம புடிச்சாரு பிரபாகரன்.
இதுக்கு மேல முடியாதுனு இலங்கை பணிஞ்சது.
ஐ.நா சபை பேச்சுவார்த்தை நடத்தி போர்நிறுத்தம் அறிவிச்சாங்க.

பிரபாகரன் அரசாங்கம் அப்ப நல்ல முன்னேற்றம் அடைஞ்சது.
டிவி எல்லாம் நடத்தினாங்க.
தமிழ்நாட்டுல இருந்து சீமான் அண்ணன வரவச்சு படமெல்லாம் எடுத்தாங்க.

  2006 க்கு பிறகு  இலங்கை மறுபடி இராணுவத்த பலப்படுத்தி சண்டைக்கு வந்தது.
விமானம் மூலமா பொதுமக்கள் மேல குண்டு மழ பொழிஞ்சாங்க.

பிரபாகரன் அவரோட தற்கொலை படைய அனுப்பி விமான நிலையத்தையே  காலிபண்ணிட்டாரு.
இலங்கை நாட்டோட 90% விமானங்கள் எல்லாம் அதுல போச்சு.

உலக நாடுகள் பிரபாகரன வளரவிட்டா இதேமாதிரி சிறந்த தலைவர்கள் ஒவ்வொரு இனத்துலயும் உருவாகிருவாங்க.
அப்பறம் மண்ணயும் மக்களயும் கொள்ளையடிக்க முடியாதுனு அவர ஒழிக்க முடிவு கட்டினாங்க.

குறிப்பா இந்தியா இத முன்ன நின்னு செஞ்சது.

27 நாடுகள் ஆயுத உதவி செஞ்சு இலங்கை புலிகள எதிர்த்து போர் நடத்துச்சு.

பிரபாகரன் அப்பவும் அசரலயே!

ஒத்தையாளா உலகத்த எதுத்து நின்னாரு அந்த மாவீரன்.

2008 ல போர் உச்சம் அடைஞ்சது.
தடைசெய்யப்பட்ட ஆயுதங்கள பயன்படுத்தி பொதுமக்கள கொன்னு குறுக்கு வழியில கோழைத்தனமா தோற்கடிச்சாங்க அவர்படைய.

அவரோட ரெண்டு மகனும் ஒரு மகளும் கூட போர்ல இறந்தாங்க.

அவருக்கு என்னாச்சுனு தெரில.
அவர் உயிரோட இருக்க வாய்ப்பில்ல.

அப்போ நடந்த போர்ல ரெண்டு லட்சம் தமிழர்கள் கொடூரமா கொல்லப்பட்டாங்க.

உலகமே வேடிக்கை பாத்துச்சு.
எவ்வளவோ ஆதாரம் இருந்தும் இப்பவர அத செஞ்ச ராஜபக்ச குடும்பத்துக்கு தண்டன கிடைக்கல.

இப்போ தமிழர்கள ஊருக்கு வெளிய கொட்டக போட்டு குடிவச்சிட்டு தமிழர்களோட வீடு நெலத்தயெல்லாம் சிங்களர் எடுத்துகிட்டாங்க.

தமிழர்கள் வெளியபோனா வீடுவந்து சேர்றது நிச்சமில்ல.

உலகத்துலயே புலிகளுக்கு உதவி செஞ்சது தமிழ்நாடு மட்டும்தான்.
அங்க கொல நடந்தப்போ தமிழ்நாடு மட்டும்தா கதறுச்சு.
17 பேர் தீக்குளிச்சாங்க.

புலிகள் விழுந்த பிறகு இலங்கை கடற்படை நம்ம ராமேஸ்வரம் வர வந்து மீனவர்கள கொல்றான்.
இதுவர 800 பேர் வர தமிழ்நாட்டு மீனவர்கள கொன்னுருக்கான்.

நாம தப்பா ஒண்ணும் கேட்கலயே?!
வெள்ளக்காரன் வர்ற வர தமிழர்கள் தனி அரசாங்கம்.
அத கேட்குறோம்.

இலங்கைல தமிழர் பகுதிக்கு ஈழம் னு பேரு.
5 லட்சம் பேர் உயிர குடுத்து 50 வருசம் போராடியும் அத மீட்க முடியலதான்.

பிரபாகரனுக்கு வெற்றி கிடைக்கலனாலும் வெற்றிக்கு கிட்ட நெருங்கிட்டாரு.

அதனாலதான் அவர் வழில நடக்கணும்னு சொல்றேன்.

தமிழ்நாடும் இதே மாதிரி பிரச்சனைகள சந்திக்கிது.

ஏதோ நாம இந்தி திணிப்ப எதிர்த்து போராடி 700 பேர் உயிரக் குடுத்து தடுத்திட்டோம்.
இல்லன்னா நாமளும் ஈழம் மாதிரி ஆயிருப்போம்.

கோடிகோடியா நம்ம வரி மத்திய அரசுக்கு போகுது.
ஆனா நாம புயல் வெள்ளத்துல கெடந்தாலும் நயா பைசா தரமாட்றானுக.
ஒரு ரூவா போனா 30 பைசா கூட நமக்கு நிதி ஒதுக்கி வர்றதில்ல.

மத்திய அரசாங்க வேலை எல்லாம் இந்திக்காரன்.

தமிழ்நாடு அரசு வேலையையும் இப்ப எந்த மாநிலத்தானும் எழுதலாம்னு ஆக்கிட்டானுக.

அரசியல்வாதி எல்லாம் தெலுங்கன்.

நீட் னு மத்திய அரசு பாடத்திட்டத்த புகுத்தி நம்ம தமிழக அரசு நடத்துற கல்லூரிகள்ல பங்கு கேக்குறானுக.

கன்னடன் தண்ணி தராம நம்ம மாநில விவசாயம் 40% அழிஞ்சே போச்சு.

கேரளா பத்தி கேக்கவே வேண்டாம்.

நாமளும் ஈழமும் சேந்து தனிநாடா ஆகணும்.

ஏன்னா தமிழர்களுக்கு தனி நாடு பெற தகுதி இல்லன்னா வேற யாருக்கும் அந்த தகுதி இல்ல.

இப்போ இருக்கிற இங்கிலாந்து அளவு பெரிய நாடு நமக்கு இருக்கு.
அத தனிநாடு ஆக்கணும்.

அதுக்கு ஒவ்வொரு தமிழனும் பிரபாகரனா மாறணும்.

அப்பதான் ஒவ்வோரு இனத்திலயும் ஒரு பிரபாகரன் உருவாவான்.

- ஆதி பேரொளி

#மேதகு65
#HBDPrabhakaran65
#HBDTamilLeader
#HBDPrabhakaranLTTE

Friday 15 November 2019

ஒரு தற்கொலைக்கு எத்தனை சாயங்கள்




















ஒரு தற்கொலைக்கு எத்தனை சாயங்கள்

 பிற மாநிலங்களில் நேர்காணலில் நீங்கள் BC என்று கூறினால் அவனுக்கு புரியாது.
 OBC என்று கூறவேண்டும்.
ஏனென்றால் தமிழகத்தில் மட்டுமே 69% இடவொதுக்கீடு.

 மற்றபடி எல்லா மாநிலங்களிலும் 50% மட்டுமே!

 இதில் OC (other castes) என்பது 50%.
 இது இடவொதுக்கீடு என்று ஆகாது.

 அதாவது ஒரு கல்லூரியில் 100 சீட் இருக்கிறது என்றால்
 50 சீட் வரை மதிப்பெண் அடிப்படையில் நிரப்பபடும்.
 இதில் போதுமான மதிப்பெண் எடுத்த SC, ST யும் கூட இடம்பெறுவர்.

 மீதி 50% இடவொதுக்கீடு அடிப்படையில் நிரப்பப்படும்.
 அதாவது குறைந்த மதிப்பெண்  OBC, SC, ST இதில் இடம்பெறுவர்.

 மத்திய அரசு பின்பற்றும் இடவொதுக்கீடு
Scheduled Castes (SCs): 15%
Scheduled Tribes (STs): 7.5%
Other Backward Castes (OBCs): 27%
இது போக
புதிதாக 10% Reservation for Economically Weaker Sections (EWS)

 ஓசி என்று எந்த ஒதுக்கீடும் கிடையாது.
 இங்கே OC என்றாலே பார்ப்பனர் என்று பிரச்சாரம் செய்யப்படுகிறது.

 ஐஐடி யில் இந்த இடவொதுக்கீடு சரியாக பின்பற்றப்படவில்லை.
 இது விதிமீறல்தான்.

 ஆனால் இதில் தமிழக அரசுக்கோ, தமிழக குடிமக்களுக்கோ, தமிழக பார்ப்பனருக்கோ எந்த தொடர்பும் இல்லை.

 தமிழகத்தின் கட்டுப்பாட்டிலேயே இல்லாத IIT முழுக்க மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்குகிறது.
 பல மாநிலத்து மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் பணியாற்றுகிறார்கள்.

 அங்கே நடக்கும் கொடுமைக்கு நாம் எப்படி பொறுப்பாக முடியும்?!

 பாத்திமா லத்தீப் விடயத்தில் "தமிழகத்தை நம்பிதானே அனுப்பினோம்?" என்று பெற்றோர் புலம்புவது அப்பாவித்தனமா அல்லது உள்நோக்கமுடையதா என்று புரியவில்லை.

 இதுவே தமிழகத்தில் ஒரு பொது இடத்தில் பாத்திமா பாதிக்கப்பட்டிருந்தால் தமிழகம் பொறுப்பு.
 மற்றபடி பாத்திமா தற்கொலைக்கு தனிமனிதர்கள் தான் காரணம்.

தன் சாவுக்கு காரணமென அந்த மாணவி குறிப்பிட்ட மூன்று பேருமே வெவ்வேறு பின்னணி கொண்டவர்கள்

 1. சுதர்ஷன் பத்பநாபன், ஆரியத்துவ ஆதரவாளர்.
 (அறப்போர் இயக்கத்தை சார்ந்தவர் அல்ல என்று அந்த அமைப்பு மறுத்திருக்கிறது. )

2.ஹேமசந்திர காரா,
மாற்றுத்திறனாளி.

3. மிலிந்த் ப்ராமே,
அம்பேத்கர் பெரியார் வாசக வட்ட ஆலோசகர்.
 தலித்திய திராவிட ஆதரவாளர்.

 இந்த தற்கொலைக்கு இசுலாமிய இயக்கங்கள் மதச் சாயம் பூசி,
திராவிட இயக்கங்கள் சாதிச் சாயம் பூசி,
கேரள அரசு இனச் சாயமும் பூசி அரசியல் ஆதாயம் பார்க்கிறார்கள்.

 தனிமனிதர் மட்டுமன்றி கல்வி முறையும் கூட ஒரு முக்கிய காரணம்.
 இந்தியாவில் மாணவர்கள் தற்கொலை மிக அதிக அளவில் உள்ளது.
  3 இடியட்ஸ் (நண்பன்) மாதிரி சில படங்கள் கூட வெளிவந்துள்ளன.

 தற்கொலை கூட கோழைத்தனம்.
 ஆனால் தமிழகத்திலிருந்து இதே போல மத்திய அரசு நடத்தும் கல்வி நிறுவனங்களுக்கு சென்ற தமிழகத்து மாணவர்கள் 4 பேர் கொலை செய்யப்பட்டு அது தற்கொலையாக மாற்றப்பட்டுள்ளது
 (தேடுக: தமிழக மாணவர்களைக் காவுவாங்கும் டெல்லி வேட்டொலி).

 தற்கொலைக்கு உண்மையான காரணத்தை ஆராய்ந்து தொடர்புள்ளோரை தண்டிக்கவேண்டும்.

 கல்விமுறையில் மாற்றம் கொண்டுவரவேண்டும்.

 பாத்திமா லதீப் விடயத்தில் இதற்கு அரசியல் சாயம் பூசி திசைமாற்றி அந்த மாணவிக்கு மேலும் அநீதி இழைக்க வேண்டாம்.

Wednesday 6 November 2019

குறளை

குறளை

குறள் வேறு! குறளை வேறு!

கோதை (அதாவது ஆண்டாள்) "திருக்குறள் ஓதமாட்டோம்" என்று சொல்ல நினைத்திருந்தால்

"தீக்குறளை ஓதோம்" என்று மட்டும் கூறியிருக்கலாம்.
அதென்ன 'சென்று' ஓதுவது?!

ஒருவேளை அக்காலத்து பாடசாலை படிப்பு சொல்லிக் கொடுக்கும்போது திருக்குறளையும் கற்றுக் கொடுத்திருக்கலாம் இல்லையா?!
அங்கு 'சென்று' ஓதமாட்டோம் என்று கூறியிருக்கலாம் இல்லையா?!

அப்படியே சொல்ல நினைத்திருந்தால் "தீக்குறளைச் சென்றோதோம்" என்று 'ச்' போட்டு சொல்லியிருக்க வேண்டும்.

என்றால் கோதை கூறிய பொருள் என்ன?!

அவள் கூறவந்ததோ "தீக்குறளையைச் சென்றோதோம்" என்றுதான்.

ஆனால் இரண்டாம் வேற்றுமைத் தொகையில் கூறிவிட்டால் அதாவது 'யை' தொக்கிவிட்டது.
அதாவது மறைந்துவிட்டது.

குறளை என்றால் என்ன?!

"குறளை ஓதுதல்" என்றால் "கோல் மூட்டுதல்" அல்லது "புறம் பேசுதல்" என்று பொருள்.

ஒருவரிடம் கேட்டதை அவருக்கு தெரியாமல் இன்னொருவரிடம் 'சென்று' கூறி கோள் மூட்டமாட்டோம் என்கிறாள் கோதை.

பொதுவாக புறங்கூறுதல் பெண்களின் குணம் என்பார்கள்.
கோதையும்
"நாட்காலே நீராடி மையிட் டெழுதோம்;
மலரிட்டுநாம் முடியோம்;
செய்யா தனசெய்யோம்;
தீக்குறளை சென்றோதோம்"
என்று பெண்கள் செய்வதை தொடர்ச்சியாகக் கூறும்போதுதான் இதையும் சொல்கிறாள்.

'குறளை' பற்றி பெருஞ்சித்திரனார் தனது "திருக்குறள் மெய்ப்பொருளுரை" யில் எழுதியுள்ளார்...

‘கடுக்கி ஒருவன் கடுங்குறளை பேசி'
- நாலடியார் 1891

‘பொய்யே குறளை கடுஞ்சொல் பயனில் சொல்லென'
- மணிமேகலை 30:68

‘குறளையுள் நட்பளவு தோன்றும்’
- திரிகடுகம் 371

‘பொய்குறளை வெளவல் அழுக்காறு இவைநான்கும்
ஐயந்தீர் காட்சியார் சிந்தியார்’
- ஆசாரக்கோவை 381

‘கடையாயார் முன்னின்று கூறும்
குறளை தெரிதலால்
பின்னின்னா பேதையார் நட்பு'
- பழமொழி நாற்பது 13.34

‘பொருளல்லார் கூறிய பொய்குறளை’
- பழமொழி நாற்பது 1471

‘காப்பாரே போன்றுரைத்த பொய்குறளை’
- பழமொழி நாற்பது 1932

‘குறளை வெய்யோர்க்கு மறைவிரி எளிது'
- முதுமொழிக்காஞ்சி 74

‘பொய்யே குறளை கடுஞ்சொல் பயனில்சொல் நான்கும்
மறலையின் வாயின வாம்’
- ஏலாதி 28:3-4

'கொள்ளிவாய்ப் பேய்களும் குறளைப் பேய்களும்'
- கந்த சஷ்டி கவசம்

குறள் என்றால் குறுகிய என்று பொருள் உண்டு.
திருக்குறள் குறுகத் தரித்ததால் அப்பெயர் பெற்றது.

குறளை என்பது வேறு!

"ஆண்டாள் ஒரு பாப்பாத்தி!
அவள் தமிழர் வேதமான திருக்குறளை ஓதமுடியாது என்று கூறிவிட்டாள்"
என்று ஒரு சிலர் பார்ப்பனரை தமிழர் இல்லை என்று திரித்துக் கூற முற்படுகின்றனர்.

அந்த சதிகாரர்கள் பேச்சை நம்பவேண்டாம்.

பார்ப்பனர் தமிழரே!