Wednesday 18 September 2019

மதுரை ரயில்வே பணியிடங்கள் 572 இல் 10 தமிழர்!

மதுரை ரயில்வே பணியிடங்கள் 572 இல் 10 தமிழர்!

தொடரும் அயலார் ஆக்கிரமிப்பு!

இது நான்காவது முறை!

மதுரை ரயில்வே பணியாளர் தேர்வில் வேலைபெற்ற 572 பேரில் 10 பேர் கூட தமிழகத்தார் இல்லை!

90% ஹிந்தியர்!
8% தென்னிந்தியர்!
2% மட்டுமே தமிழகத்தவர்!
---------
(தினமணி செய்தி)

மதுரை கோட்டத்தில் நடந்த ரயில்வே தேர்வில் தேர்வானவர்களில் 90 சதவீதம் பேர் வெளிமாநிலத்தவர்கள்

By DIN  |
18th September 2019 04:44 PM  |

மதுரை கோட்டத்தில் நடந்த ரயில்வே தேர்வில், தேர்வானவர்களில் 90 சதவீதம் பேர் வெளிமாநிலத்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

நாடுமுழுவதும் ரயில்வே காலிப்பணியிடங்களுக்கான குரூப் டி தேர்வு கடந்த ஆண்டு செப்டம்பர் 17 ஆம் தேதி முதல் டிசம்பர் 17 ஆம் தேதி வரை நடைபெற்றதது.

அதில் மதுரை கோட்டத்தில் நடந்த ரயில்வே தேர்வில்,
தேர்வானவர்களில் 90 சதவீதம் பேர் வெளிமாநிலத்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
572 பணியிடங்களுக்கு நடந்த இந்த தேர்வில் தமிழகத்தைச் சேர்ந்த 10க்கும் குறைவானவர்களே வெற்றி பெற்றுள்ளனர்.

இவ்விவகாரம் மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
ஆனால் தமிழகத்தை சேர்ந்தவர்கள், அதிகளவில், பங்கேற்காததே இதற்கு காரணம் என ரயில்வே துறை விளக்கம் அளித்துள்ளது.
----
பாத்தீங்களா மக்களே?!

காரணமாவது ஒழுங்கா சொல்றானுகளானு...?!

Thursday 12 September 2019

ஈ.வே.ரா ஒரு கம்யூனிஸ்டாம்

ஈ.வே.ரா ஒரு கம்யூனிஸ்டாம்

வந்தேறி:-
உங்களுக்கு தெரியாது தோழர்!
ஈ.வே.ரா மாதிரி ஒரு கம்யூனிஸ்ட்ட பாக்கவே முடியாது.
அவரு ஆங்கிலேயர் ஆட்சியை முழுமையா ஆதரிச்சாரு.
அவங்களும் அவர மதிச்சாங்க.
ஆனா பாருங்க! அவர் வாழ்நாள்லயே ஒரே ஒரு தடவ அவருக்கும் பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கும் பிரச்சன வந்தது.
அது ஏன்னா கம்யூனிச ஆதரவு பேசினப்பதான்.
அப்பறம் 26.02.1966 ல "ரஷ்யப் படையெடுப்பை வரவேற்கிறேன்" அப்டின்ற தலைப்புல புரட்சிகரமா ஒரு கட்டுரை எழுதிருக்காரு பாருங்க.
"இந்தியா மீது ரஷ்யா படையெடுத்து வருமானால், அதை நான் எதிர்க்க மாட்டேன்; வரவேற்பேன்!
ஏனென்றால், நானே ரஷ்யா சென்றிருந்தபோது, கம்யூனிஸ்ட் உறுப்பினர் ஆனவன்தான்!" அப்டினு எழுதிருக்கார்.

தமிழன்:-
டேய்! டேய்! ரொம்ப பூ சுத்தாதீங்கடா!
அந்த ஆளு வெள்ளக்காரனுக்கு விசுவாசமா கடைசிவரைக்கும் இருந்தாரு!
நல்ல வருமானம் சேந்துச்சு!
என்ஜாய் பண்ண வெளிநாடெல்லாம் சுத்திபாத்தாரு.
அப்படி உலக பயணம் போனப்ப ரஷ்யாவுக்கு போய் எட்டிபாத்துட்டு வந்தாரு.
அதுக்கே மூணாங்கிளாஸ் தாண்டாத அவர ரஷ்யாக்காரன் ஆலத்தி எடுத்து வரவேற்று 3000 பேர் கூடி சொற்பொழிவு ஆத்த சொன்னாங்கனு ஏற்கனவே ஒரு முழம் பூவ காதுல சுத்திட்டிங்க.

அவரு சுற்றுலா முடிஞ்சி திரும்பி வந்து அந்த அறுபவத்த எழுதறப்போ கம்யூனிசம் பத்தி ஏதோ கிறுக்கினாரு.
கம்யூனிசம் புடிக்காத வெள்ளக்காரன் தன் அடிமைனு கூட பாக்காம தன்னோட கைப்பாவை அரசான ஜஸ்டிஸ் கட்சியை விட்டு அந்தாள உள்ள தூக்கி போட்டுட்டான்.
வெளிய வந்து பேசாம இருக்கலாம்னா ஜீவானந்தம் வந்து உண்மையான கம்யூனிஸ்ட்டான பகத் சிங் எழுதின "நான் ஏன் நாத்திகன்" புத்தகத்த வெளியிட கூப்டுறாரு.
ஈ.வே.ரா பயந்துகிட்டு தான் போகாம தன் பத்திரிக்கை ஆசிரியரான தன்னோட சகோதரன அனுப்புறாரு.
அவரும் போய் மேடைல ஓரமா உக்காந்துட்டு வந்துடுறாரு.
பகத் சிங் பேர கேட்டதும் கொலவெறியான வெள்ளைக்காரன் அத வெளியிட்ட அத்தனபேரயும் புடிச்சுட்டு போய் தேசதுரோகம் பண்ணதா கேஸ் போட்டு நொங்க பிதுக்கிட்டான்.
ரெண்டுபேரும் "தெரியாம பண்ணிட்டோம்" னு கெஞ்சி மன்னிப்பு கேட்டாங்க.
  அத எழுதி வாங்கின வெள்ளக்காரன் பத்திரிக்கைல இத போடணும்னு கட்டளை போட்டான்.

அதுபடி 24.03.1935 அன்னக்கி ஈ.வே.ரா பத்திரிக்கைல மன்னிப்பு கேட்ட செய்திய வெளியிட்டாரு.
அப்பறம் கம்யூனிசம் பத்தி மூச்சு கூட விடலயே!
வெள்ளக்காரன் போயி 20 வருசம் கழிச்சுதான் மறுபடி வாயத் தொறக்கறாரு.

அதுவும் ஏன்?!
சீனாவோட போர்ல இந்தியா தோத்துருது.
திராவிட இயக்கங்கள் இத வச்சிகிட்டு நேருவ நக்கல் பண்றானுக.
கடுப்பான நேரு தனிநாடு பேசுறவங்க தேர்தல்ல போட்டிபோட முடியாதபடி பிரிவினைவாத தடுப்பு சட்டம் போடுறாரு.

அண்ணாதுரை உடனடியா "திராவிட நாடு" கோரிக்கையை கைவிடுறோம் னு அறிக்கை விட்டுட்டு நேரு கால்ல விழுறாரு.

ஈ.வே.ரா ஒடனே "பாக்கிஸ்தானோ, சீனாவோ இந்தியாமீது படையெடுத்தால், முறியடித்துத் துரத்திடவே நான் விரும்புகிறேன்;
அதற்காக ஒத்துழைக் கிறேன்.
ஆனால் இந்தியாமீது ரஷ்யா படையெடுத்து வருமானால், அதை நான் எதிர்க்க மாட்டேன்; வரவேற்பேன்!" அப்டினு எழுதுறாரு.

அதாவது "நா அடுத்தவனுக்கு அடிமையா இருப்பேன் ஆனா தனிநாடு கேட்கமாட்டேன்"னு சுத்திவளைச்சு சொல்றாரு.

நேரு காலடில அண்ணாதுரை ஸ்ட்ரெயிட்டா சம்மர் சால்ட் அடிச்சாருன்னா
ஈவேரா தலைகீழா சம்மர் சால்ட் அடிச்சிருக்கார்.
அவ்ளதான்.

புகைப்படத்திற்கு நன்றி: கதிர் நிலவன்