Thursday 26 December 2019

பாலக்காடு தமிழர்களுக்கு மலையாளி செய்யும் அநீதி

பாலக்காடு தமிழர்களுக்கு மலையாளி செய்யும் அநீதி

 பாலக்காட்டில் டிசம்பா் 27, 28இல் தமிழ் மொழிச் சிறுபான்மை ஆணையம் விசாரணை

 பாலக்காட்டில் தமிழ் மொழிச் சிறுபான்மை ஆணைய விசாரணை வரும் 27, 28 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.
 இது குறித்து
கேரள மாநிலத் தமிழ்ப் பாதுகாப்பு இயக்கத்தின்
மாநிலச் செயலாளா் மா.பேச்சிமுத்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
 கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டத்தில் ஹிந்து, இஸ்லாம், கிறிஸ்துவ மதத்தைச் சாா்ந்த தமிழ் பேசும் மக்கள் மற்றும் தமிழ் மரபினா்கள் என 10 லட்சம் போ் வாழ்கின்றனா்.
 இதில், ஹிந்துக்களில் பல ஜாதியினா் உள்ளனா்.
 தமிழக எல்லையோர கேரள மாநிலத்தில் பாலக்காடு, மூணாறு, குமுளி ,தேவிகுளம், திருவனந்தபுரத்தில் வாழும் தமிழா்கள் யாருமே கேரள
பிற்படுத்தப்பட்டோா் மற்றும் தாழ்த்தப்பட்டோா் பட்டியலில் சோ்க்கப்படவில்லை.
 இங்குள்ள தமிழா்களுக்கு ஜாதி சான்றிதழ் இன்றும் மறுக்கப்படுகிறது.
 முற்போக்கு ஜாதியனரான பிராமணா், நாயா், நம்பூதிரி இன மக்களுக்கு இணையாக இங்குள்ள தமிழா்கள் கருதப்படுகிறாா்கள்.
 அட்டப்பாடித் தமிழா்களுக்கு உரிமையுடைய நிலங்களுக்கு அரசு பட்டா வழங்குவதில்லை.
 கேரள மாநிலத் தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம் இவற்றையெல்லாம் சுட்டிக்காட்டி, கேரளத் தமிழா்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்குத் தீா்வுகாண வேண்டும் என்று கேரள முதல்வா் பிணராயி விஜயனிடம் முறையிட்டது.
 இதையடுத்து, அம்மாநில முதல்வா் இது தொடா்பாக கேரளத்தில் தமிழா்கள் வாழும் திருவனந்தபுரம், வட்டியூா்காவு, நேமம் இடுக்கி மாவட்டம், தேவிகுளம், பீா்மேடு, உடும்பன் சோலை, பாலக்காடு, சித்தூா், நெம்மாறை பகுதிகளை உள்ளட்டக்கிய சட்டப் பேரவைத் தொகுதிகளின் எம்.எல்.ஏ.க்களை அழைத்துப் பேசினாா்.
 இதைத் தொடா்ந்து கேரளத் தமிழா்களின் பிரச்னைகளுக்குத் தீா்வுகாண டாக்டா் நடுவட்டம் கோபாலகிருஷ்ணன் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது.
 இந்த ஆணையத்தின் விசாரணை பாலக்காடு குடிமக்கள் நிலையத்தில் (சிவில் ஸ்டே ஷன்) ஆட்சியா் கருத்தரங்கு அரங்கில் டிசம்பா் 27, 28 ஆகிய தேதிகளில் காலை 10 மணி முதல் மாலை 4 வரை நடைபெற உள்ளது.
  எனவே, பாலக்காடு மாவட்டத்தில் உள்ள தமிழா்கள் தங்கள் கோரிக்கைகளை ஆணையத்திடம் அளிக்குமாறு தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம் கேட்டுக் கொள்கிறது.
 மேலும் தகவல்களுக்கு 9388197671 எண்ணில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி: தினமணி
25.12.2019

பதிவர்: வெ.பார்கவன் தமிழன்





Wednesday 18 December 2019

ஆந்திரா கோவில்களில் தமிழ்






















ஆந்திரா கோவில்களில் தமிழ்

 "திருச்சிற்றம்பல மேடை மீது ஏறி பாடக் கூடாது" என்று தீட்சிதர்கள் கூறியதை நியாயப்படி சாதிப் பிரச்சனை ஆக்காமல்
 அப்படியே திசைதிருப்பி "தமிழை நீசபாசை என்றுவிட்டான் பார்ப்பான்" என்று மொழிப் பிரச்சனை ஆக்கி பொய்ப் பிரச்சாரம் செய்தே அரசியல் செய்தனர் வந்தேறிகள்.

 இதன்மூலம் தினமும் தமிழில் ஓதும் தில்லை அந்தணர்களான தீட்சிதர்களை தமிழுக்கு எதிரானவர்களாக காட்டிவிட்டனர்.

 ஆனால்
 தமிழர் பகுதியாக இருந்து ஆந்திராவுக்கு போய்விட்ட எல்லை மாவட்டங்களில்
 தமிழர்களால் கட்டப்பட்டு தெலுங்கர் கைக்கு போய் முழுக்க சமஸ்கிருத மயமாகிவிட்ட வைணவக் கோவில்களில்
 இன்றும் விடாமல் தமிழில் ஓதிவரும் பார்ப்பனர் பற்றி ஏன் யாரும் பேசுவதில்லை?


 திருப்பதி உட்பட
அப்லாயகுண்டா பிரசன்ன வெங்கடேஸ்வர சுவாமி கோவில்,
 சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி கோவில்,
 நாராயணவனம் கல்யாண வெங்கடேஸ்வர கோவில்,
 நாகலாபுரம் வேத நாராயண சுவாமி கோவில்,
 தாலப்பாக்கம் சென்னகேசவ சுவாமி கோவில்,
 தேவுணிகடப்பா சித்தீஸ்வர கோவில் மற்றும் லட்சுமி வெங்கடேஸ்வர சுவாமி கோவில்,
 ஜம்மலமகுடு வெங்கடேஸ்வர சுவாமி கோவில்,
 பித்தாபுரம் பத்மாவதி சமேத வெங்கடேஸ்வர சுவாமி கோவில்,
 ஆகிய 10 கோவில்களில் மார்கழி மாதம் முழுவதும் சுப்ரபாதம் ரத்து செய்யப்பட்டு ஆண்டாள் எழுதிய தமிழ்ப் பாசுரங்கள் ஓதப்படும்.

 தெலுங்கர் வருகைக்கு முன் தாய்லாந்து சென்ற பார்ப்பனர்கள் இன்றுவரை தமிழில்தான் ஓதுகின்றனர்.

 தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட தமிழினப் பார்ப்பனர் தமிழுக்கு எதிரி இல்லை!

 படம் உதவி: Karthikeyan Rathinavelu

Tuesday 10 December 2019

தமிழரில் என்ன தனியே போர்க்குடி?!

தமிழரில் என்ன தனியே போர்க்குடி?!

இந்திய ராணுவம்,
பெருமளவு ராணுவ தளவாடங்களுடன்,
ஒரு லட்சம் போர்வீரர்களுடன் ஈழத்தில் இறங்கி,
  3 ஆண்டுகள் போராடியும்
புலிகளை வெல்லமுடியாத காரணம் என்ன என்று கேட்டால் பலரும் பல்வேறு காரணங்களைக் கூறுவர்.

ஸ்டீபன் கோஹென் (Dr. Stephen P. Cohen) என்கிற புகழ்பெற்ற இராணுவ ஆய்வாளர் இந்திய ராணுவத்தை ஆராய்ந்து ஒரு புத்தகம் எழுதியுள்ளார்.
அதன் தலைப்பு,
Indian Army : Its Contribution to the Development of a Nation
என்பதாகும்.

அதில்,
"தமிழீழ விடுதலைப் புலிகள் போரியல் கல்வி கற்றவர்களை பெருமளவு கொண்டிருந்தது.
இதுவே இந்திய ராணுவம் இலங்கையில் தோல்வியை தழுவியதற்கு முக்கிய காரணம்"
என்று கூறியுள்ளார்.

என்றால் இந்திய ராணுவத்தில் உள்ள பல்வேறு பிரிவுகளில் புலிகள் போன்ற போரியல் கற்ற யாருமே இல்லையா?!

ஏனில்லை?
இருக்கிறார்கள்.
அதையும் ஸ்டீபன் கூறியுள்ளார்.

அது மதராஸ் ரெஜிமென்ட்.

(இராணுவ ஆய்வாளர் தராகி சிவராம் அவர்கள் தலைவரின் பிறந்தநாள் அன்று அளித்த பேட்டியிலிருந்து எடுக்கப்பட்ட தகவல்)

தமிழர் வீரம் என்றவுடன் புறநானூறு தொடங்கி பூலித்தேவன்  வரை மட்டுமே பேசுகிறோம்.

ஏதோ அதன்பிறகு நாம் கோழைகளாகி விட்டதுபோல!

Sunday 1 December 2019

15 ஆண்டுகளுக்கு முன்பே புலிகள் பேட்டி கண்ட சீமான்

15 ஆண்டுகளுக்கு முன்பே புலிகள் பேட்டி கண்ட சீமான்

2004 லேயே சீமான் அண்ணன் புலிகளுடன் தொடர்பில் இருந்துள்ளார்.

புலிகளுக்காக அவர் அளித்த பேட்டியை இங்கே இணைத்துள்ளேன்.

ஆம்.

தமிழினத் தலைவர் மேதகு.வே.பிரபாகரன் அவர்களின் 50 வது பிறந்தநாளை முன்னிட்டு
புலிகள் நடத்திவந்த "நிதர்சனம்" தொலைக்காட்சி 2 மணிநேரம் நீளமுள்ள ஒரு ஆவணப் படத்தை வெளியிட்டது.
(அதன் தலைப்பு "தலைநிமிர்வு" என்பது.
இணையத்தில் அது Prabhakaran undying symbol of tamil resistance என்ற பெயரில் இருந்தது.
தற்போது நீக்கப்பட்டுவிட்டது.
ஆனால் என்னிடம் உள்ளது.)

இந்த ஆவணப் படம் பல அரிய புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் மூலம்
ஈழத்தமிழர் போராட்ட வரலாற்றையும்
தலைவரது வாழ்க்கை வரலாற்றையும்
எடுத்துரைக்கிறது.

அப்போது புலிகளுக்கும் இலங்கைக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்து போர் ஓய்ந்திருந்த காலம்.

புலிகள் இலங்கை அரசுக்கு சமமான பலத்துடன் உலக நாடுகள் ஏறத்தாழ அங்கீகரித்துவிட்ட ஒரு அரசாங்கத்தை நடத்தி வந்தனர்.

அப்போது வெளியிடப்பட்ட இந்த ஆவணப் படத்தில் தலைவரை வாழ்த்தி 2 சிங்களவர் உட்பட 36 பேர் பேசியிருக்கின்றனர்.
அதில் 13 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்.
அண்ணன் சீமானும் அதில் பேசியிருக்கிறார்.

இந்த 13 பேரில் தலைவரை ஈழத்திற்கு சென்று நேரடியாகச் சந்தித்தோர் பழ.நெடுமாறன், வைகோ, திருமாவளவன், சீமான் ஆகிய நால்வர் மட்டுமே!

அதில் பேட்டி அளித்தோர் முழுப் பட்டியல் வருமாறு

1. மறவன்புலவு திரு.சச்சிதானந்தம் (தமிழகம்)

2. திருமதி. தாமரைச் செல்வி
எழுத்தாளர்

3. திரு. மருசலீன்
மாவீரர் லெப்.கேணல் விக்டரின் தந்தை

4. ஜனாப். சலீம்
பத்திரிக்கையாளர்

5. திரு. தர்மலிங்கம்
மூத்த பத்திரிக்கையாளர்

6. திரு. காசி ஆனந்தன்
உணர்ச்சிக் கவிஞர்

7. திரு. புகழேந்தி
கவிஞர் (தமிழகம்)

8. திரு.வேணுகோபால்
ஆசிரியர்

9. திரு.வை.கோபாலசாமி
பொதுச் செயலாளர் - ம.தி.மு.க (தமிழகம்)

10. திரு.முல்லைமணி
எழுத்தாளர்

11. திரு.சதாசிவம்
மாவீரர் லெப். அருச்சுனாவின் தந்தை

12. இன்குலாப்
கவிஞர் (தமிழகம்)

13. திரு.சீமான்
திரைப்பட இயக்குனர் (தமிழகம்)

14. வைத்தியர். ஜெயகுலராசா
வைத்திய அதிகாரி

15.திரு.கனகரவி
ஊடகவியலாளர்

16. திருமதி. மனோன்மணி சண்முகதாஸ்
விரிவுரையாளர் - யாழ் பல்கலை

17. திரு. சூரியதீபன்
(தமிழகம்)

18. மோகனதாஸ்
துணைவேந்தர் - யாழ் பல்கலை

19. திருமதி. யோகம்மா

20. திரு. சித்தி.அமரசிங்கம்
எழுத்தாளர்

21. திரு. அறிவுமதி
கவிஞர் (தமிழகம்)

22. ஜனாப். அப்துல் சயான்

23. திரு. டி.சிவராம்
இராணுவ ஆய்வாளர்

24. திரு. சுப. வீரபாண்டியன்
தமிழ் தமிழர் தேசிய இயக்கம் (தமிழகம்)

25. திரு. கலாநிதி விக்கிரபாகு குணரட்ண

26. திரு. தணிகாசலம்
கவிஞர்

27. ஆண்டகை. இராயப்புஜோசப்
ஆயர். மன்னார்

28. பாஷண அபேய குணவர்த்தன
பத்திரிக்கை ஆசிரியர்

29. திரு.தியாகு
தமிழ் தமிழர் இயக்கம் (தமிழகம்)

30. திரு. திலகவதி
எழுத்தாளர்

31. திரு. சந்திரசேகரன்

32.திரு. மனோ கணேசன்

33. திரு. பழ.நெடுமாறன்
தலைவர் - தமிழ் தமிழர் இயக்கம் (தமிழகம்)

34. திரு. ராமதாஸ்
தலைவர். பா.ம.க (தமிழகம்)

35. திரு. திருமாவளவன்
தலைவர் வி.சி. (தமிழகம்)

36. திரு. மணியரசன்
தமிழ் தேசிய பொதுவுடைமை கட்சி (தமிழகம்)

இதற்கு நான்கு ஆண்டுகள் கழித்து 2008 இல் புலிகள் திரைப்படம் எடுத்த போது சீமான் அங்கு சென்றார்.
அப்போது தலைவரையும் சந்தித்தார்.

புலிகளின் முப்படையில் ஒன்றான கடற்படையின் தலைவர் திரு. சூசை அவர்கள் கடைசி குரல்பதிவில் "சீமானை முன்னெடுக்க சொல்லு" என்று கூறியுள்ளார்.

இந்த பதிவு இப்போது ஏனென்றால்
சீமான் பற்றி புலிகளுக்கு எதுவுமே தெரியாது என்றும்
  அவர் ஏதோ கேமரா பிடிக்க போனபோது தற்செயலாக தலைவரை சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்டது போலவும் பதிவுகள் வருகின்றன.

சீமான் அண்ணனை தர்க்க ரீதியாக எதிர்கொள்ள முடியாமல்
வெறும் நக்கல் நையாண்டி செய்தே வீழ்த்திவிடலாம் என்கிற எண்ணத்தில் சிலர் அலைகின்றனர்.

சீமான் மீது வைக்கப்படும் உருப்படியான விமர்சனங்களை விரல்விட்டு எண்ணிவிடலாம் மற்றபடி எல்லாமே நக்கல் நையாண்டி பதிவுகள்தான்.

அவர்களுக்கு உரைக்கவே இந்த பதிவு.

சீமான் புலிகளின் ஆள்தான்!

https://m.facebook.com/story.php?story_fbid=2024288354341474&id=100002809860739

Tuesday 26 November 2019

பிரபாகரன்னா யாரு

பிரபாகரன்னா யாரு?

பிரபாகரன் அப்டின்னா யாருன்னே தெரியாத தமிழ்நாட்டு பசங்க இப்பவும் உண்டு.

அவங்க இத படிங்க..

4 பேர் சேந்தாலும் ஒருத்தன அடிக்கமுடியாதுன்னா அவன் எவ்வளவு பெரிய வீரன்?

அருவாளோட 10 ரவுடிங்க போனாலும் ஒருத்தன அடிக்க முடியாதுனா அவன் எவ்வளவு பெரிய வீரன்?

துப்பாக்கியோட போலீஸ் வந்தாலும் அடிக்க முடியாதுன்னா அவன் எவ்வளவு பெரிய வீரன்?

பீரங்கியோட ராணுவமே வந்தாலும் அடிக்கமுடியாதுன்னா அவன் எவ்வளவு பெரிய வீரன்?

அவ்வளவு பெரிய வீரன்தான் பிரபாகரன்.

டானுக்கெல்லாம் டான்!

ஒரு லட்சம் இந்திய ராணுவ வீரர்கள் போய் ஒதை வாங்கிட்டு வந்த மாவீரன்.

அப்பிடி ஒரு மாஸ் ஹீரோ நம்ம தமிழினத்துல பொறந்திருக்கான்.

இது நமக்கு பெரும இல்லையா?!

தமிழனா பொறந்துட்டு பிரபாகரன் யார்னு தெரியாது னு சொல்றதும் ஒண்ணுதான்
எனக்கு அப்பன் பேரு தெரியாது னு சொல்றதும் ஒண்ணுதான்.

அவரென்ன நமக்கு அப்பா மாதிரியா?!

ஆமாப்பா! அப்பனுக்கு மேல!
தலைவன்!

புரியுற மாதிரி சொல்லுறேன்.
இந்தியாவுல தெற்க கடைசியா தமிழ்நாடு இருக்கு.
அப்பறம் ஆழமில்லாத கடல்.
அதுல படகு போற அளவு பக்கத்துல இலங்கை அதாவது ஸ்ரீலங்கா இருக்கு.

இது நாலுபக்கமும் கடல் சூழ்ந்த வலது உள்ளங்கை வடிவம் மாதிரி ஒரு தீவு.
இந்த உள்ளங்கைல  விரல்கள் அளவுக்கு தமிழர் வாழ்ற பகுதி.
மீதி சிங்களம் பேசுற வேற ஒரு மக்கள் வாழுற பகுதி.

1947 ல இந்தியாவுக்கு சுதந்திரம் கெடச்ச எட்டு மாசம் கழிச்சு இலங்கைக்கு சுதந்திரம் கெடைச்சு தனிநாடா ஆகுது.

நாம பண்ணுன ஒரே தப்பு என்னன்னா அப்பவே இலங்கைல வடக்கு கிழக்கா அதோட அளவுல மூணுல ஒரு பங்கு தமிழர்கள் வாழுற பகுதியயும் தமிழ்நாட்டோட சேக்கறத பத்தி யோசிக்காம விட்டதுதான்.

இலங்கைல 70% சிங்களவர்களும் 30% தமிழர்களும் இருந்தாங்க.

பெரும்பான்மையா இருக்குற சிங்களர்கள் வேலை வாய்ப்பு, கல்வி, அரசியல் பதவி எல்லாத்தையும் முழுக்க ஆக்கிரமிச்சிக்க தொடங்குனாங்க.

இப்போ இந்தியாவுல 60% இருக்குற ஹிந்தி மக்கள் மத்திய அரச கைபற்றி
இந்திபேசாத மாநிலங்களுக்கு சலுகைகள் கொடுக்காததோட
வடயிந்தியர்கள பெரிய அளவுல குடிபோக வச்சு அந்த மாநிலத்தோட வேலைவாய்ப்பை குறுக்கு வழியில பறிக்கிறாங்களே அதேமாதிரி
அங்க சிங்களர்கள் எல்லாத்தயும் பறிச்சிக்க நினைச்சாங்க.

70% சிங்களர்ல எல்லாருமே புத்த மதத்த சேந்தவங்க

  30% தமிழர்கள்ல இந்து, கிறிஸ்டின், முஸ்லீம் னு 3 மதங்கள சேந்தவங்க இருந்தாங்க.
இதுபோக தமிழ்நாட்டுல இருந்து தேயிலை தோட்ட வேலைக்கு வெள்ளக்காரங்க கூட்டிட்டு போன தமிழர்கள் இலங்கை தீவு நட்டநடுவுல இருக்குற மலைகள்ல சிங்களர் மத்தியில இருந்தாங்க.

தமிழர்கள் படிச்சவங்களா முன்னேறிய சமூகமாக இருந்தாங்க.
அரசாங்க அதிகாரிகள்ல 60% தமிழர்களா இருந்தாங்க.

சிங்களவர்கள் அப்படி இல்ல.
அவங்க நம்ம பீகார் மாதிரி.
அவங்க வாழ்ந்த பகுதி அதாவது இலங்கை தீவோட நடுப்பகுதி தெற்கு மற்றும் மேற்கு ல அவங்க மக்கட்தொகை நெருக்கம் ரொம்ப அதிகம்.
படிப்பறிவில்லாம வறுமைல வாடினாங்க.

சிங்களர்கள் பெரும்பான்மை பலத்த வச்சு ஆட்சிய புடிச்சாங்க.

முதல் வேலையா தமிழ்நாட்டுல இருந்து போன மலைநாட்டு தமிழர்கள ரேசன்காடு குடுக்காம இந்தியாவுக்கே வெரட்டி அடிச்சாங்க.

தேசிய மொழியா சிங்களத்த கொண்டுவந்தாங்க.
சிங்களம் தெரிஞ்சா மட்டும்தான் வேலை கிடைக்கும்னு சட்டத்த மாத்தினாங்க.

இப்படி தமிழர்கள் படிப்படியா கொறஞ்சு சிங்களர்கள் 90% அரசாங்க வேலைகள்ல நிறைஞ்சிட்டாங்க.
போலீஸ், ராணுவம் எல்லாத்துலயும் சிங்களம் தெரிஞ்சவங்க மட்டுமே சேரமுடிஞ்சதால 99% அவங்களே நிரம்பிட்டாங்க.

தமிழ் பகுதிகள்ல இருக்குற கல்லூரிகள்லயும் சிங்கள மாணவர்களுக்கு இடம் அதிகமா ஒதுக்கீடு பண்ணாங்க.

மக்கட்தொகை கம்மியா இருக்குற தமிழர் பகுதிகளுக்கு அரசாங்க ஆதரவோட நிலத்த பத்திரம் எழுதி வாங்கி கூட்டம்கூட்டமா குடிவந்து புதுபுது சிங்கள கிராமங்கள உருவாக்கினாங்க.

  பிக்குகள் ன்ற புத்த மத சாமியார்கள் இந்து முஸ்லீம் பகுதிகள் புத்தருக்கு பெரிய பெரிய கோவில் கட்ட ஆரம்பிச்சாங்க.

தமிழர்கள் உருவாக்கி வச்சிருந்த ஆசியாவிலேயே பெரிய நூலகம் ஒன்ன நெருப்பு வச்சி கொளுத்தினாங்க.

தமிழர்கள் செல்வநாயகம் ன்ற தலைவர் தலைமைல ஜனநாயக வழியில எவ்வளவோ போராடி பாத்தாங்க.
ஆனா சிறுபான்மையான தமிழர்களால ஜனநாயக வழியில எதையும் தடுத்து நிறுத்த முடியல

செல்வநாயகம் தமிழ்நாடு மாதிரி தனி போலீஸ் கொண்ட மாநிலம் கேட்டுபாத்தாரு.
கெடைக்கல.
கடைசியா 'எங்கள விட்டுடுங்க நாங்க தனிநாடா இருக்கறோம்' னு சொல்லி தேர்தல்ல நின்னாரு.
தமிழர்கள் மொத்த ஓட்டும் அவருக்கு விழுந்தது.

சிங்கள தலைவர்கள் செல்வாவுக்கு தந்த வாக்குறுதிகள நிறைவேற்றல.
அவங்க நாடாளுமன்றத்துல போட்ட  ஒப்பந்தத்தையே கிழிச்சு போட்டுட்டாங்க.

போலீஸ், ராணுவம், அதிகாரிகள், அரசியல்வாதிகள் எல்லாருமே சிங்களர் ன்றதால தெருவுல போற எந்த சிங்களவனும் எந்த தமிழன் வீட்டுலயும் புகுந்து அவன் பொண்ண தூக்கிட்டு போகலாம்ன்ற நெலமை.

இதனால தமிழ் இளைஞர்கள் ஆயுதத்த கையில எடுத்தாங்க.
சிங்களர்கள தட்டி கேட்டாங்க.
அப்ப பிரபாகரன் சின்ன குழந்தைதான்.

சிங்களர்கள் நிறைஞ்சு இருக்குற போலீஸ் ஸ்டேசன் ராணுவ முகாம் இதையெல்லாம் தமிழ் இளைஞர்கள் தாக்கினாங்க.

பதிலுக்கு அரசாங்க ஆதரவோட சிங்கள போலீசும் ராணுவமும் ரவுடிகளும் தமிழ் பொதுமக்கள் மீது கலவரம் பண்ணி கொள்ளையடிச்சு குழந்தைங்க வயசானவங்கனு பல பேர கொன்னாங்க.
பல தமிழ் பெண்கள கற்பழிச்சாங்க.
ஆயுதம் தூக்கி பதிலடி குடுத்த தமிழ் கைதிகள ஜெயிலுக்குள்ளயே போய் கொடூரமா கொல பண்ணாங்க.

பிரபாகரனுக்கு 16 வயசு ஆச்சு.
கண்முன்னாடி நடக்குற கொடுமைகள பாத்து அவரும் தன்னோட இனத்துக்காக ஆயுத குழுவுல இணைஞ்சாரு.

13 வருசம் காடுகள்ல தலைமறைவா இருந்து பல இளைஞர்கள சேத்தாரு.

அவரே ஒரு துப்பாக்கி செஞ்சிக்கிட்டாரு.
போலீஸ அடிச்சு துப்பாக்கிய புடுங்கினாரு.
பேங்க்க கொள்ளையடிச்சு பணம் சேத்தாரு.
அத வெச்சு தமிழ்நாட்டுல ஆயுதம் வாங்குனாரு.
காட்டிக்கொடுக்குற தமிழர்களயும் கொன்னாரு.

தமிழர் பகுதிகள் அட்டகாசம் பண்ற இராணுவத்த கொன்னாரு.
அவங்க ஆயுதங்கள எடுத்துகிட்டாரு.

1980 ல அவர் கீழ ஒரு சின்ன படை உருவாகிடுச்சு.
அவங்கதா விடுதலைப் புலிகள்.

சீனாவும் ஒரு புத்தமத நாடு அது இலங்கைக்கு ஆயுதம் வித்துச்சு.
இந்திரா காந்தி காலத்துல இதுக்கு பதிலடியா இந்தியா இலங்கைய அடக்க தமிழ் குழுக்களுக்கு ஆயுதம் கொடுத்து பயிற்சி கொடுத்துச்சு.

ராஜீவ் காந்தி காலம் வர தமிழ்நாட்டுல தங்கி புலிகள் பயிற்சி பண்ணினாங்க.
தமிழ்நாட்டுல பிரபாகரனுக்கு இருக்குற மரியாதைய பாத்துட்டு எம்.ஜி.ஆர் அவங்கள ஆதரிச்சாரு.

இந்த காலத்துல புலிகள் பெண்களையும் சேர்த்துகிட்டு பெரிசா ஆச்சு.
அவங்க ராணுவத்தோட சண்டபோட்டு அவங்க ஆயுதங்கள பறிச்சு பெரிய ராணுவமா உருவாகிட்டாங்க.

காட்டுக்குள்ள மறைஞ்சி அடிச்ச காலம் போய் ஊரையே தன்னோட படைபலத்தால பாதுகாப்பு போட்டு ராணுவம் போலீச இல்லாம பண்ணி தனி அரசாங்கம் நடத்துனாரு பிரபாகரன்.
தமிழ் மக்களும் முழு ஆதரவு தந்தாங்க.

அப்பறம் ராஜீவ் காந்தி பிரதமராகி போபர்ஸ் பீரங்கி ஊழல் செஞ்சு மாட்டிக்கிட்டாரு.
இத திசைதிருப்பி நல்லபேர் வாங்க இலங்கையில சமாதானம் கொண்டுவரேன்னு எறங்கறாரு.
பிரபாகரன கூப்பிட்டு பணிஞ்சு போக சொல்லி மிரட்டுறாரு.

நம்ம தலைவர் பணியல.
இலங்கைக்கு இந்திய ராணுவத்த அனுப்புறாரு.
சும்மா இல்ல ஒரு லட்சம் பேரு பீரங்கி விமானம் கப்பல் னு பெரிய படை.
புலிப்படைல அப்போ பத்தாயிரம் பேர்தான் இருந்தாங்க.
புலிகளோட மூணு வருசம் சண்ட போட்டு பெரிய உயிரிழப்போட உதை வாங்கி திரும்புச்சு இந்திய ராணுவம்.

ஆனாலும் இந்திய ராணுவம் அங்க நெறய கொல பண்ணிருக்கு.
பத்தாயிரம் பேர்வர செத்துருக்காங்க.
தன்னோட மக்கள கொன்னவன ஒரு உண்மையான தலைவர் சும்மாவாவிடுவாரு?!
அதான் ராஜீவ் காந்திய மனித வெடிகுண்டு அனுப்பி போட்டுத் தள்ளிட்டாரு பிரபாகரன்.

இந்திய ராணுவம் அங்குட்டு போனதும் இங்க சிங்கள ராணுவம் தாக்குச்சு.
அதையும் தோற்கடிச்சாரு பிரபாகரன்.

வலது உள்ளங்கைல நடுவிரல் நகம் போக மீதி விரல்கள் புலிகள் கட்டுப்பாட்டுக்கு வந்தாச்சு.

ஆமா! எவனாலயும் எந்த கொம்பாதி கொம்பனாலயும் உள்ள நுழைய முடியல.
பிரபாகரன்தான் அரசாங்கம் நடத்துனாரு.
மக்கள்ட்ட வரி வாங்கி உலகத்துல இருக்குற தமிழர்கள்ட்ட நிதி வாங்கி தரைப்படை கப்பல் படை மட்டுமில்லாம விமானப்படையே உருவாக்கிட்டாரு.

ஒருத்தன் கத்தி வச்சிருந்தா பெரிய ஆளு.

துப்பாக்கி வச்சிருந்தா அத விட பெரிய ஆளு.

பீரங்கி வச்சிருந்தா அதவிட பெரிய ஆளு.

விமானப்படை வச்சிருந்தா....

அவ்வளவு பெரிய ஆளுதான் பிரபாகரன்.

விஜய், அஜித் மாதிரி டூப் ஹீரோ இல்ல.
நிஜமான ஹீரோ!

தமிழ்நாட்டு இளைஞர்கள் நிறைய பேர் போய் அவர் படைல சேந்தாங்க.
உலகம் முழுக்க தமிழர்கள் "தலைவா"னு அவர தலைல தூக்கிவச்சிட்டு ஆடுனாங்க.

அவர் தன்னோட நாட்டு வளங்கல எந்த கார்ப்பரேட்டுக்கும் விக்கல.
அவர் யாருக்குமே பணியல.

உலக நாடுகள் இலங்கைக்கு கடனுக்கு ஆயுதம் வித்து நல்ல லாபம் பாத்தாங்க.
எவ்வளவோ பண்ணியும் இலங்கை அரசாங்கத்துக்கு தோல்வி மேல தோல்வி.

2002 ல மிகப்பெரிய ராணுவ முகாம் இருந்த ஆனையிறவு முகாம புடிச்சாரு பிரபாகரன்.
இதுக்கு மேல முடியாதுனு இலங்கை பணிஞ்சது.
ஐ.நா சபை பேச்சுவார்த்தை நடத்தி போர்நிறுத்தம் அறிவிச்சாங்க.

பிரபாகரன் அரசாங்கம் அப்ப நல்ல முன்னேற்றம் அடைஞ்சது.
டிவி எல்லாம் நடத்தினாங்க.
தமிழ்நாட்டுல இருந்து சீமான் அண்ணன வரவச்சு படமெல்லாம் எடுத்தாங்க.

  2006 க்கு பிறகு  இலங்கை மறுபடி இராணுவத்த பலப்படுத்தி சண்டைக்கு வந்தது.
விமானம் மூலமா பொதுமக்கள் மேல குண்டு மழ பொழிஞ்சாங்க.

பிரபாகரன் அவரோட தற்கொலை படைய அனுப்பி விமான நிலையத்தையே  காலிபண்ணிட்டாரு.
இலங்கை நாட்டோட 90% விமானங்கள் எல்லாம் அதுல போச்சு.

உலக நாடுகள் பிரபாகரன வளரவிட்டா இதேமாதிரி சிறந்த தலைவர்கள் ஒவ்வொரு இனத்துலயும் உருவாகிருவாங்க.
அப்பறம் மண்ணயும் மக்களயும் கொள்ளையடிக்க முடியாதுனு அவர ஒழிக்க முடிவு கட்டினாங்க.

குறிப்பா இந்தியா இத முன்ன நின்னு செஞ்சது.

27 நாடுகள் ஆயுத உதவி செஞ்சு இலங்கை புலிகள எதிர்த்து போர் நடத்துச்சு.

பிரபாகரன் அப்பவும் அசரலயே!

ஒத்தையாளா உலகத்த எதுத்து நின்னாரு அந்த மாவீரன்.

2008 ல போர் உச்சம் அடைஞ்சது.
தடைசெய்யப்பட்ட ஆயுதங்கள பயன்படுத்தி பொதுமக்கள கொன்னு குறுக்கு வழியில கோழைத்தனமா தோற்கடிச்சாங்க அவர்படைய.

அவரோட ரெண்டு மகனும் ஒரு மகளும் கூட போர்ல இறந்தாங்க.

அவருக்கு என்னாச்சுனு தெரில.
அவர் உயிரோட இருக்க வாய்ப்பில்ல.

அப்போ நடந்த போர்ல ரெண்டு லட்சம் தமிழர்கள் கொடூரமா கொல்லப்பட்டாங்க.

உலகமே வேடிக்கை பாத்துச்சு.
எவ்வளவோ ஆதாரம் இருந்தும் இப்பவர அத செஞ்ச ராஜபக்ச குடும்பத்துக்கு தண்டன கிடைக்கல.

இப்போ தமிழர்கள ஊருக்கு வெளிய கொட்டக போட்டு குடிவச்சிட்டு தமிழர்களோட வீடு நெலத்தயெல்லாம் சிங்களர் எடுத்துகிட்டாங்க.

தமிழர்கள் வெளியபோனா வீடுவந்து சேர்றது நிச்சமில்ல.

உலகத்துலயே புலிகளுக்கு உதவி செஞ்சது தமிழ்நாடு மட்டும்தான்.
அங்க கொல நடந்தப்போ தமிழ்நாடு மட்டும்தா கதறுச்சு.
17 பேர் தீக்குளிச்சாங்க.

புலிகள் விழுந்த பிறகு இலங்கை கடற்படை நம்ம ராமேஸ்வரம் வர வந்து மீனவர்கள கொல்றான்.
இதுவர 800 பேர் வர தமிழ்நாட்டு மீனவர்கள கொன்னுருக்கான்.

நாம தப்பா ஒண்ணும் கேட்கலயே?!
வெள்ளக்காரன் வர்ற வர தமிழர்கள் தனி அரசாங்கம்.
அத கேட்குறோம்.

இலங்கைல தமிழர் பகுதிக்கு ஈழம் னு பேரு.
5 லட்சம் பேர் உயிர குடுத்து 50 வருசம் போராடியும் அத மீட்க முடியலதான்.

பிரபாகரனுக்கு வெற்றி கிடைக்கலனாலும் வெற்றிக்கு கிட்ட நெருங்கிட்டாரு.

அதனாலதான் அவர் வழில நடக்கணும்னு சொல்றேன்.

தமிழ்நாடும் இதே மாதிரி பிரச்சனைகள சந்திக்கிது.

ஏதோ நாம இந்தி திணிப்ப எதிர்த்து போராடி 700 பேர் உயிரக் குடுத்து தடுத்திட்டோம்.
இல்லன்னா நாமளும் ஈழம் மாதிரி ஆயிருப்போம்.

கோடிகோடியா நம்ம வரி மத்திய அரசுக்கு போகுது.
ஆனா நாம புயல் வெள்ளத்துல கெடந்தாலும் நயா பைசா தரமாட்றானுக.
ஒரு ரூவா போனா 30 பைசா கூட நமக்கு நிதி ஒதுக்கி வர்றதில்ல.

மத்திய அரசாங்க வேலை எல்லாம் இந்திக்காரன்.

தமிழ்நாடு அரசு வேலையையும் இப்ப எந்த மாநிலத்தானும் எழுதலாம்னு ஆக்கிட்டானுக.

அரசியல்வாதி எல்லாம் தெலுங்கன்.

நீட் னு மத்திய அரசு பாடத்திட்டத்த புகுத்தி நம்ம தமிழக அரசு நடத்துற கல்லூரிகள்ல பங்கு கேக்குறானுக.

கன்னடன் தண்ணி தராம நம்ம மாநில விவசாயம் 40% அழிஞ்சே போச்சு.

கேரளா பத்தி கேக்கவே வேண்டாம்.

நாமளும் ஈழமும் சேந்து தனிநாடா ஆகணும்.

ஏன்னா தமிழர்களுக்கு தனி நாடு பெற தகுதி இல்லன்னா வேற யாருக்கும் அந்த தகுதி இல்ல.

இப்போ இருக்கிற இங்கிலாந்து அளவு பெரிய நாடு நமக்கு இருக்கு.
அத தனிநாடு ஆக்கணும்.

அதுக்கு ஒவ்வொரு தமிழனும் பிரபாகரனா மாறணும்.

அப்பதான் ஒவ்வோரு இனத்திலயும் ஒரு பிரபாகரன் உருவாவான்.

- ஆதி பேரொளி

#மேதகு65
#HBDPrabhakaran65
#HBDTamilLeader
#HBDPrabhakaranLTTE

Friday 15 November 2019

ஒரு தற்கொலைக்கு எத்தனை சாயங்கள்




















ஒரு தற்கொலைக்கு எத்தனை சாயங்கள்

 பிற மாநிலங்களில் நேர்காணலில் நீங்கள் BC என்று கூறினால் அவனுக்கு புரியாது.
 OBC என்று கூறவேண்டும்.
ஏனென்றால் தமிழகத்தில் மட்டுமே 69% இடவொதுக்கீடு.

 மற்றபடி எல்லா மாநிலங்களிலும் 50% மட்டுமே!

 இதில் OC (other castes) என்பது 50%.
 இது இடவொதுக்கீடு என்று ஆகாது.

 அதாவது ஒரு கல்லூரியில் 100 சீட் இருக்கிறது என்றால்
 50 சீட் வரை மதிப்பெண் அடிப்படையில் நிரப்பபடும்.
 இதில் போதுமான மதிப்பெண் எடுத்த SC, ST யும் கூட இடம்பெறுவர்.

 மீதி 50% இடவொதுக்கீடு அடிப்படையில் நிரப்பப்படும்.
 அதாவது குறைந்த மதிப்பெண்  OBC, SC, ST இதில் இடம்பெறுவர்.

 மத்திய அரசு பின்பற்றும் இடவொதுக்கீடு
Scheduled Castes (SCs): 15%
Scheduled Tribes (STs): 7.5%
Other Backward Castes (OBCs): 27%
இது போக
புதிதாக 10% Reservation for Economically Weaker Sections (EWS)

 ஓசி என்று எந்த ஒதுக்கீடும் கிடையாது.
 இங்கே OC என்றாலே பார்ப்பனர் என்று பிரச்சாரம் செய்யப்படுகிறது.

 ஐஐடி யில் இந்த இடவொதுக்கீடு சரியாக பின்பற்றப்படவில்லை.
 இது விதிமீறல்தான்.

 ஆனால் இதில் தமிழக அரசுக்கோ, தமிழக குடிமக்களுக்கோ, தமிழக பார்ப்பனருக்கோ எந்த தொடர்பும் இல்லை.

 தமிழகத்தின் கட்டுப்பாட்டிலேயே இல்லாத IIT முழுக்க மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்குகிறது.
 பல மாநிலத்து மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் பணியாற்றுகிறார்கள்.

 அங்கே நடக்கும் கொடுமைக்கு நாம் எப்படி பொறுப்பாக முடியும்?!

 பாத்திமா லத்தீப் விடயத்தில் "தமிழகத்தை நம்பிதானே அனுப்பினோம்?" என்று பெற்றோர் புலம்புவது அப்பாவித்தனமா அல்லது உள்நோக்கமுடையதா என்று புரியவில்லை.

 இதுவே தமிழகத்தில் ஒரு பொது இடத்தில் பாத்திமா பாதிக்கப்பட்டிருந்தால் தமிழகம் பொறுப்பு.
 மற்றபடி பாத்திமா தற்கொலைக்கு தனிமனிதர்கள் தான் காரணம்.

தன் சாவுக்கு காரணமென அந்த மாணவி குறிப்பிட்ட மூன்று பேருமே வெவ்வேறு பின்னணி கொண்டவர்கள்

 1. சுதர்ஷன் பத்பநாபன், ஆரியத்துவ ஆதரவாளர்.
 (அறப்போர் இயக்கத்தை சார்ந்தவர் அல்ல என்று அந்த அமைப்பு மறுத்திருக்கிறது. )

2.ஹேமசந்திர காரா,
மாற்றுத்திறனாளி.

3. மிலிந்த் ப்ராமே,
அம்பேத்கர் பெரியார் வாசக வட்ட ஆலோசகர்.
 தலித்திய திராவிட ஆதரவாளர்.

 இந்த தற்கொலைக்கு இசுலாமிய இயக்கங்கள் மதச் சாயம் பூசி,
திராவிட இயக்கங்கள் சாதிச் சாயம் பூசி,
கேரள அரசு இனச் சாயமும் பூசி அரசியல் ஆதாயம் பார்க்கிறார்கள்.

 தனிமனிதர் மட்டுமன்றி கல்வி முறையும் கூட ஒரு முக்கிய காரணம்.
 இந்தியாவில் மாணவர்கள் தற்கொலை மிக அதிக அளவில் உள்ளது.
  3 இடியட்ஸ் (நண்பன்) மாதிரி சில படங்கள் கூட வெளிவந்துள்ளன.

 தற்கொலை கூட கோழைத்தனம்.
 ஆனால் தமிழகத்திலிருந்து இதே போல மத்திய அரசு நடத்தும் கல்வி நிறுவனங்களுக்கு சென்ற தமிழகத்து மாணவர்கள் 4 பேர் கொலை செய்யப்பட்டு அது தற்கொலையாக மாற்றப்பட்டுள்ளது
 (தேடுக: தமிழக மாணவர்களைக் காவுவாங்கும் டெல்லி வேட்டொலி).

 தற்கொலைக்கு உண்மையான காரணத்தை ஆராய்ந்து தொடர்புள்ளோரை தண்டிக்கவேண்டும்.

 கல்விமுறையில் மாற்றம் கொண்டுவரவேண்டும்.

 பாத்திமா லதீப் விடயத்தில் இதற்கு அரசியல் சாயம் பூசி திசைமாற்றி அந்த மாணவிக்கு மேலும் அநீதி இழைக்க வேண்டாம்.