Friday 30 November 2018

புயல் பாதுகாப்பு கட்டிடங்கள் - தமிழகம் முற்றிலும் புறக்கணிப்பு

புயல் பாதுகாப்பு கட்டிடங்கள் - தமிழகம் முற்றிலும் புறக்கணிப்பு

  மத்திய அரசு இதுவரை கட்டியுள்ள மொத்த
"புயல் பாதுகாப்பு கட்டிடங்கள்" = 567

இதில் தமிழகத்தில் கட்டப்பட்டவை = 0

ஆம். இது உண்மை.

ஒரிசா = 312
ஆந்திரா = 218
குஜராத் = 22
மேற்கு வங்கம் = 15

என பிற மாநிலங்களில் கட்டப்பட்டவையுடன் ஒப்பிடும்போது தமிழகத்தைத் திட்டமிட்டு புறக்கணித்திருப்பது புரிகிறது.

இதுமட்டுமல்ல.
இரண்டாம் கட்டமாக அறிவிக்கப்பட்டுள்ள கட்டிடங்கள் 353.

மாநில வாரியாக கீழ் வருமாறு,

மேற்கு வங்கம் = 150
குஜராத் = 112
கோவா = 40
கேரளா = 27
கர்நாடகா = 11
மகாராஷ்டிரா = 13
தமிழகம் = 0

தகவல்களுக்கு நன்றி:
விகடன் செய்தி
02.12.2018
---------
மேற்கண்ட இரு பட்டியல்களில் புயலையே பார்க்காத மாநிலங்கள் கூட  உண்டு.

பிற மாநிலங்களை விட வரி என்கிற பெயரில் அதிகம் கொள்ளை போவது தமிழக பொருளாதாரம்.
(தேடுக: தமிழகத்தை ஒட்டச் சுரண்டும் ஹிந்தியா)

ஆனால் தமிழகத்தை மட்டும் தவிர்த்துவிட்டு நடுவணரசு உலக வங்கியின் நிதியுதவியுடன் பாதுகாப்பு கட்டிடங்கள் கட்டி அதற்கு சாலைகளும் போட்டு தருகிறது.

நீலம், வர்தா, ஒகி, கஜா என வரிசையாக புயல் தாக்குவதோ தமிழகத்தை.
ஆனால் பாதுகாப்பாக இருப்பது மற்ற மாநிலங்கள்.

தமிழர்களின் உயிருக்கே இங்கு மதிப்பில்லை.
இது இனப்படுகொலை அன்றி வேறென்ன?!

சங்கம் அமைத்துக் குடியேறும் ஒரியர்

சங்கம் அமைத்துக் குடியேறும் ஒரியர்

தரப்பட்டுள்ள புகைப்படம் திருப்பூரில் எடுக்கப்பட்டது.

இதில் கீழே உள்ள பலகையைப் பாருங்கள் 'ஒரிசா குடியேற்ற உதவி மையம்' என்று ஆங்கிலத்திலும் ஒடியா மொழியிலும் எழுதியிருப்பதைக் காணலாம்.

சென்னையில் ஒரிசா மாநிலத்திற்கான சிறப்பு தூதரகமும் விருந்தினர் மாளிகையும் ஒரு பிரமாண்ட கட்டிடத்தில் இயங்கி வருவதை ஏற்கனவே முகநூலில் பதிந்தனர்.

தற்போது தொழில் நகரங்கள் அனைத்திலும் இப்படி உதவி மையங்கள் அமைத்து தனது மக்களைக் குடியேற்றி வருகிறது ஒரிசா.

ஏற்கனவே (தமிழக வளங்களைப் பொறுத்து) தமிழக மக்கட்தொகை இருக்கவேண்டியதை விட ஒன்றரை மடங்கு அதிகம்.

இந்த நிலையில் கடந்த பத்து ஆண்டுகளில் ஒருகோடி வடவர் குடியேறியுள்ளனர்.

தன் மாநிலத்தை நாசமாக்கிவிட்ட ஒரியர் (பிற வடவர் போல இல்லாமல்) திட்டமிட்டு முறைப்படி குடியுரிமை பெற்று குடியேறிவருகின்றனர்.

  இவர்களுக்கு ரேசன், கல்வி, அரசு வேலை, சுகாதாரம், வாக்குரிமை என அனைத்தும் நாம் நமது வரிப்பணத்தில் வழங்கவேண்டும்.
இவர்கள் சம்பாதிப்பதை தமது மாநிலத்திற்கு பத்திரமாக அனுப்பிவிடுவர்.

ஐயோ பாவம்! கூலிதானே! போனால் போகிறது என்று நினைப்போர் வரலாற்றைத் திருப்பிப் பாருங்கள்.

நம்மை ஆளும் சிங்களவரும் தெலுங்கரும் ஒரு காலத்தில் அகதிகளாக பஞ்சம் பிழைக்க வந்தவர்கள்தான்.

Wednesday 28 November 2018

விடைதெரியாத கேள்விகள்

விடைதெரியாத கேள்விகள்

தீர்ப்பு வரும் முன்பே அதாவது ஆலை மூடப்பட்ட அடுத்தநாளே "விரைவில் ஆலை திறக்கப்படும்" என்று அனில் அகர்வால் உறுதியாகக் கூறியது எப்படி?

ஸ்டெர்லைட் ஆய்வுக் குழுவில் ஒரு தமிழக உறுப்பினர் கூட இருக்கக்கூடாது என்று கேட்டு வாங்கிய அனில் அகர்வால் தரப்பு
சொந்த சாதிக்கார நீதிபதி தலைமையில் குழு அமைத்தது எப்படி?

"தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம்" தடை விதித்தால் அதை நீக்க "தேசிய பசுமை தீர்ப்பாணையத்திற்கு" அதிகாரம் உள்ளது.
ஆனால் ஆலையை மூடியது தமிழக "அரசு".
இதை ஆய்வு செய்து "ஆலையை மூடியது தவறு" என்று கூட தே.ப.தீ. (NGT) க்கு என்ன அதிகாரம் உள்ளது?

துறை என்பதைத் தாண்டி அரசு என்கிற அதிகார மட்டத்திற்கு வந்துவிட்ட இந்த வழக்கை மத்திய மாநில அரசுகளைத் தாண்டிய அதிகாரமான உச்ச நீதிமன்றம்தான் தன்னிச்சையாக ஆய்வு செய்யவேண்டும்.
ஆனால் அப்படி நடக்கவில்லையே?!

என்றால் தமிழக "அரசு" என்பது மத்திய அரசின் ஒரு "துறை"யை விட கீழானதா?!

பல ஆதாரங்கள் இருந்தும் போராட்டத்தில் பலர் படுகொலை செய்யப்பட்ட வழக்கை விசாரித்துவரும் சிபிஐ  இதுவரை ஒருவரைக் கூட கைது செய்யவில்லையே ஏன்?!

சினிமாவில் வருவது போல போலீஸ், அரசியல்வாதிகள், நீதிபதிகள், சிபிஐ என அனைத்துமே பணக்கார முதலாளிகளின் சட்டைப்பையில் உள்ளது உண்மைதானோ என்று ஸ்டெர்லைட் விவகாரத்தைப் பார்க்கும்போது தோன்றுகிறதே?!

என்றால் முப்பது ஆண்டுகளாக ஜனநாயக வழியிலும் சட்டரீதியாகவும் தூத்துக்குடி மக்கள் நடத்தும் போராட்டம் அனைத்தும் வீண்தானா?!

இத்தனை உயிரிழப்புகள் வீண்தானா?!

இதற்கு பேசாமல் தூத்துக்குடி இளைஞர்கள் ஆலைக்கு பாம் வைத்து தகர்த்திருக்கலாம் என்று தோன்றுகிறதே?!

என்றால் இங்கே ஜனநாயகம் என்பது ஏட்டுச்சுரைக்காய் தானா?

Tuesday 27 November 2018

தமிழகத்தை ஒட்டச் சுரண்டும் ஹிந்தியா

தமிழகத்தை ஒட்டச் சுரண்டும் ஹிந்தியா

தமிழகத்தைப் புயல் தாக்குகிறது.
தமிழகக் குழு ஆய்வு செய்கிறது. இவ்வளவு சேதம் என்று கணக்கிட்டு மத்திய அரசிடம் நிவாரணம் கேட்கிறது.

இப்போது நியாயமாக நடுவணரசு என்ன செய்யவேண்டும்?

தமிழக அரசு கூறுவதை நம்பி நிவாரணம் அளிக்கவேண்டும்.

ஆனால் மத்திய அரசு வழக்கமாக  என்ன செய்கிறது தெரியுமா?

தனியே ஒரு மத்திய குழுவை அனுப்பி அந்த குழு திமிராகவும் எகத்தாளமாகவும் மேம்போக்காக ஆய்வு செய்து சாவகாசமாக "சேதமெல்லாம் ஒன்றுமில்லை" என்பது போல அறிக்கை அனுப்பி  தமிழக அரசு கோரியதில் கால்வாசியோ அல்லது அதற்கும் குறைவாகவோ பிச்சை போடும்.

இத்தனைக்கும் தமிழக அரசு வரி என்கிற பெயரில் மத்திக்கு கட்டும் மலை மலையான பணத்திற்கு முன் இந்த "பிச்சை" உண்மையிலேயே "பிச்சை" என்று கூடக் கூறமுடியாது அதற்கும் கீழ்.

உதாரணத்திற்கு 2012 ஆண்டு தமிழக அரசு மத்திக்கு கட்டிய 'வருமான வரி' மட்டும் 28000 கோடி (பிற வரிகளைச் சேர்க்கவில்லை).

ஆனால் 2011 இல் தானே புயல் தாக்கியபோது தமிழகம் கேட்டது வெறும் 5200 கோடி.

ஆனால் மத்திய அரசு போட்ட பிச்சை 500 கோடி.

அதாவது ஒரு நபர் இன்னொரு நபரிடம் 280 ரூபாயை கொடுத்துவைத்து அதில் அவசரத் தேவைக்காக 50 ரூபாயை  கேட்கும்போது வெறும் 5 ரூபாயை அவர் முகத்தில் விட்டெறிந்தது போல.

இது மட்டுமில்லை மத்திக்கு நாம் கட்டும் கப்பம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது.
2012 இல் 28000 வருமான வரி கட்டியதாக கூறினேன் அல்லவா?!
2016 இல் அது 67000 கோடியாக உயர்ந்துவிட்டது.

இதேபோல 2016 "வர்தா" புயல் பாதிப்பு ஏற்பட்டது.
தமிழக அரசு கோரியது 22000 கோடி.
மத்திய அரசு போட்ட பிச்சை வெறும் 266 கோடி.

அடுத்த ஆண்டு 2017 ஒக்கி புயலின்போது,
தமிழ்நாடு கேட்டது 13000.
இந்திய அரசு பிச்சையிட்டதோ வெறும் 280 கோடி.

இப்போது புதிதாக GST போட்டு ஆறே மாதங்களில் 51000 கோடிக்கு மேல் வசூலித்துவிட்டனர்.
(01.07.2018 அன்று GST ஆணையர் அறிவிப்பு)

ஆக இந்த நிதி ஆண்டு 1 லட்சம் கோடிக்கு மேல் GST வரி கட்ட உள்ளோம்.

பிற வரிகளையும் சேர்த்தால் ஏறத்தாழ தற்போதைய நிலைப்படி ஓராண்டுக்கு 3 லட்சம் கோடிக்கு மேல் மத்திக்கு கப்பம் செல்கிறது.

தமிழகத்தின் மொத்த கடனே அவ்வளவுதான்!

இது பகல்கொள்ளை அன்றி வேறில்லை!

விளைவு, தமிழகத்தின் ஒவ்வொரு குடிமகனும் 40,000 ரூபாய் கடனாளி.

ஆனால் நாம் பெற்றது என்ன?!

ஆற அமர வந்து பிணங்களை பொறுக்கி தரும் "மத்திய பேரிடர் மீட்பு" நடவடிக்கை மட்டும்தான்.

நிவாரண நிதியை விடுங்கள், தற்போதைய மோடி அரசு நமக்கு ஒதுக்கிய வழக்கமான நிதியைக்கூட இன்னும் தரவில்லை.

கடந்த 08.10.2018 அன்று, புதுதில்லி சென்று இந்தியத் தலைமையமைச்சரை நேரில் சந்தித்து வந்த தமிழ்நாடு முதலமைச்சர்,
"தமிழ்நாட்டு உள்ளாட்சி அமைப்புகளுக்கும்,
தமிழ்நாட்டின் இதர திட்டங்களுக்கும்
ஒதுக்கப்பட்டு இதுவரை வராத 19000 கோடி ரூபாய் நிதி பாக்கியைத் தாருங்கள்"
என கோரிக்கை வைத்துவிட்டு வந்தார்.
(இந்த பாக்கி தற்போது 21000 கோடியைத் தாண்டிவிட்டது)

தமிழகத்திற்கு உள்ளே ஒரு ஆண்டுக்கு ஆகும் செலவு அதாவது மாநில அரசின் மொத்த செலவே 15000 கோடிதான்.

ஒரு தொழிலாளிக்கு ஒரு மாத ஊழியம் தராமல் ஏமாற்றுவது போலத்தான் இதுவும்!

சென்னைப் பல்கலைக்கழகப் பொருளியல் துறைத் தலைவர் பேராசிரியர் ஜோதி சிவஞானம்.
இவர் 'டைம்ஸ் ஆப் இந்தியா' நாளிதழில் எழுதிய கட்டுரையில் "ஓர் ஆண்டில் இந்திய அரசின் மொத்த வரி வருவாயில் தமிழ்நாட்டின் பங்களிப்பு 31% என்றும்
அதேவேளை இந்திய அரசிடமிருந்து தமிழ்நாட்டிற்கு வரும் தொகை வெறும் 3% என்று குறிப்பிட்டிருந்தார்"
(சான்று Times of India, 05.09.2018).

"நல்ல வாயன் சம்பாதிப்பதை நாறவாயன் தின்கிறான்" என்கிற பழமொழியை இனி  "தமிழகம் சம்பாதிப்பதை ஹிந்தியா தின்கிறது" என்று மாற்றிக் கொள்ளலாம்.

மக்கள் என்னதான் நிவாரணம் அனுப்பினாலும் ஒரு அரசு அளவுக்கு வராது.

கஜா புயல் பாதிப்புக்கு நிவாரணமாக நாம் கேட்பது 15000 கோடி.

ஆனால் வழக்கம் போல மத்திய அரசு "விளைவித்தவன் வாழைப்பழத்தை பிடுங்கித் தின்றுவிட்டு தோலை தூக்கி  முகத்தில் அடிக்கும்" ரவுடி போல எதையாவது வீசியெறிய உள்ளது.

சுரண்டலை நோக்கமாகக் கொண்ட ஆங்கிலேய பேரரசுக்கும் ஹிந்திய நடுவணரசுக்கும் எதாவது வேறுபாடு உள்ளதா?!

தமிழர்கள் சிந்திப்பீர்!
-----------------

தகவல்களுக்கு நன்றி:
தோழர் க. அருணபாரதி
தமிழ்த்தேசியப் பேரியக்கம்.

கட்டுரை தலைப்பு:
“கசா” பேரழிவுச் சூழலிலும்
தமிழ்நாட்டை வஞ்சிக்கும் இந்திய அரசு!

Monday 26 November 2018

1992 இல் புலிகள் மீதான தடைக்கு பா.ம.க கொடுத்த பதிலடி

1992 இல் புலிகள் மீதான தடைக்கு பா.ம.க கொடுத்த பதிலடி

அச்சத்தை உடைத்து நொறுக்கிய பிரபாகரன் பதாகை!

1991ஆம் ஆண்டு இராசீவ் காந்தி மரணத்திற்குப் பிறகு தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு இந்தியாவில் தடை செய்யப்பட்டது.

அதனையொட்டி தமிழீழ ஆதரவு இயக்கங்களும், ஈழ ஆதரவாளர்களும் கடும் ஒடுக்குமுறைக்கு ஆளாகினர்.

அப்போது தமிழகத்தில் ஆட்சி செய்து கொண்டிருந்தவர் செயலலிதா.
அவர் இராசீவ் படுகொலையைச் சொல்லி முதன்முறையாக ஆட்சியை கைப்பற்றியிருந்தார்.
அவர் தில்லி மீதான விசுவாசத்தை தமது ஒடுக்குமுறை மூலம் காட்டிக் கொண்டிருந்தார்.

அன்றைக்கு எந்தக் கட்சியும் விடுதலைப்புலிகளை ஆதரித்துப் பேச மறுத்த நிலையில், பாட்டாளி மக்கள் கட்சி விடுதலைப் புலிகள் ஆதரவு நிலைப்பாட்டை எடுத்து ஓங்கி ஒலித்துக் கொண்டிருந்தது.
விடுதலைப் புலிகளை ஆதரித்தால் ஏழாண்டு சிறைத் தண்டனை என்று மிரட்டல் விடுக்கப்பட்டது.

அப்போது, மருத்துவர் இராமதாசு "ஏழாண்டுகள் என்ன, எழுபதாண்டுகள் ஆனாலும் புலிகளை ஆதரிப்பேன்; என்னை கைது செய்யுங்கள்!" என்று பேசினார்.
இத்தகையப் பேச்சு தமிழீழ ஆதரவாளர்களுக்கு முழு உற்சாகத்தை தந்தது.

1992இல் சமூக நீதி உள்ளிட்ட பல்வேறு தமிழர் உரிமைக் கோரிக்கைகளை வலியுறுத்தி "தமிழர் வாழ்வுரிமை மாநாடு" ஒன்றை சென்னையில் பா.ம.க. நடத்தியது.

அப்போது மதுரையில் பா.ம.க. வில் பொறுப்பு வகித்த அண்ணன் வேலுச்சாமி தலைமையில் நான் உள்பட முப்பதுக்கும் மேற்பட்ட தோழர்களோடு தனி வண்டியில் சென்னைக்கு கிளம்பினோம்.
தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் உருவம் பொறித்த படங்கள் ஆயிரக்கணக்கில் அச்சடித்து வண்டியில் வைத்திருந்தோம்.
சென்னையை நெருங்கும் வேளையில், பல்வேறு திசைகளிலிருந்து பா.ம.க. மாநாட்டிற்கு வண்டிகள் அணி வகுத்து வந்து கொண்டிருந்தன.
பெரும்பாலான வண்டிகளை நிறுத்தி பிரபாகரன் படத்தை கண்ணாடிகளில் ஒட்டி விட்டோம். வந்திருந்த தோழர்கள் பிரபாகரன் படத்தை சட்டையில் குத்திக் கொண்டனர்.
படத்தை விரும்பிக் கேட்டவர்களுக்கு சட்டையில் குத்தியும் விட்டனர்.
ஒரு சில தோழர்கள் கைக்குட்டையை நெற்றியில் கட்டி அதன் மீது பிரபாகரன் படத்தை அணிந்திருந்தனர் (படத்தின் இடது புறத்தில் இரண்டாவதாக நான் உள்ளேன்).

தமிழர் வாழ்வுரிமை மாநாட்டிற்கு வி.பி.சிங், இராம் விலாசு பசுவான், உள்ளிட்ட பல்வேறு வட நாட்டுத் தலைவர்கள் அழைக்கப்பட்டிருந்தனர்.

மாநாட்டுப் பேரணி தொடங்கும் போது , பிரபாகரன் கையில் துப்பாக்கி ஏந்திய முழு உருவ துணிப் பதாகை ஒரு தோழர் மூலம் கையில் கிடைத்தது.

ஒரு தேனீர் கடையில் நாங்கள் நின்று கொண்டிருந்த போது ஊன்றப்பட்ட நிலையில் இரண்டு கம்புகள் காட்சி அளித்தன.
உடனடியாக தோழர்கள் கம்புகளை உருவி, பிரபாகரன் பதாகையை கம்புகளுக்கு நடுவே கட்டி உயரமாகத் தூக்கினர்.
எல்லோரின் கண்களிலும் பிரபாகரன் ஒளிவிட்டார்.
ஊடகத்தினர் மோப்பம் பிடித்து , பிரபாகரனை சுற்றி வளைத்து படம் எடுத்துக் கொண்டிருந்தனர்.
பேரணி முழுவதும் பிரபாகரன் படம் பற்றியே பேச்சு.
பிரபாகரன் வாழ்க! தமிழீழம் வெல்க! என்ற முழக்கம் விண்ணை எட்டியது.
பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட அந்தப் பேரணியில் பிரபாகரன் பதாகைப் படமே அனைவரையும் ஈர்த்தது.

மறுநாள் செய்தி ஊடகங்களில், "பயங்கரவாத புலிகள் மாநாடு" என்று தலைப்பு எழுத்துகளில் வெளியிடப்பட்டன.

காங்கிரசு கட்சியினர் உள்ளிட்ட புலி எதிர்ப்பாளர்கள் பலர் இதனை சாக்காக வைத்து "பா.ம.க.வை தடை செய்ய வேண்டும்" என்று கூச்சல் எழுப்பினர்.

இந்தியா டுடே ஏடு "புலிகளின் முதுகில்" என்று தலைப்பிட்டு விடுதலைப் புலிகள் மீதான வன்மத்தை வெளிக் காட்டிக் கொண்டது.
புலி வேடம் போட்டு கலை நிகழ்ச்சி நடத்தியவர்களைக் கூட "புலி ஆதரவாளர்கள்" என்று கூச்சலிட்டது.

மாநாட்டில் தடை செய்யப்பட்ட அமைப்பை ஆதரித்ததற்காக மருத்துவர் இராம்தாசு, பண்ருட்டி இராமச்சந்திரன், தோழர் தியாகு, பழ.நெடுமாறன் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

அன்றைக்கு பிரபாகரன் படத்தை கொண்டு சென்றதன் மூலம் இந்திய- தமிழக அரசுகளின் ஒடுக்குமுறையின் இறுக்கம் களையப்பட்டது உண்மை!
அச்சம் உடைக்கப்பட்டது உண்மை!
அன்று ஒரு படம் ஏந்தினோம்!
இன்று ஆயிரமாயிரம் படங்களை ஏந்தி நடந்திட எண்ணற்ற இளைஞர்கள் உருவாகியிருப்பது மகிழ்ச்சிக்கு உரிய செய்தியாகும்!

அச்சமூட்டுபவரை அடி பணிய வைப்பதே தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரனின் வழிமுறையாகும்!

பிரபாகரன் பிறந்த நாள் கொண்டாடும் இன்றைய இளைய தலைமுறையினரின் முதல் தாரக மந்திரமாக இது இருக்கட்டும்!

நன்றி: கதிர் நிலவன்

1992 இல் புலிகள் மீதான தடைக்கு பா.ம.க கொடுத்த பதிலடி

1992 இல் புலிகள் மீதான தடைக்கு பா.ம.க கொடுத்த பதிலடி

அச்சத்தை உடைத்து நொறுக்கிய பிரபாகரன் பதாகை!

1991ஆம் ஆண்டு இராசீவ் காந்தி மரணத்திற்குப் பிறகு தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு இந்தியாவில் தடை செய்யப்பட்டது.

அதனையொட்டி தமிழீழ ஆதரவு இயக்கங்களும், ஈழ ஆதரவாளர்களும் கடும் ஒடுக்குமுறைக்கு ஆளாகினர்.

அப்போது தமிழகத்தில் ஆட்சி செய்து கொண்டிருந்தவர் செயலலிதா.
அவர் இராசீவ் படுகொலையைச் சொல்லி முதன்முறையாக ஆட்சியை கைப்பற்றியிருந்தார்.
அவர் தில்லி மீதான விசுவாசத்தை தமது ஒடுக்குமுறை மூலம் காட்டிக் கொண்டிருந்தார்.

அன்றைக்கு எந்தக் கட்சியும் விடுதலைப்புலிகளை ஆதரித்துப் பேச மறுத்த நிலையில், பாட்டாளி மக்கள் கட்சி விடுதலைப் புலிகள் ஆதரவு நிலைப்பாட்டை எடுத்து ஓங்கி ஒலித்துக் கொண்டிருந்தது.
விடுதலைப் புலிகளை ஆதரித்தால் ஏழாண்டு சிறைத் தண்டனை என்று மிரட்டல் விடுக்கப்பட்டது.

அப்போது, மருத்துவர் இராமதாசு "ஏழாண்டுகள் என்ன, எழுபதாண்டுகள் ஆனாலும் புலிகளை ஆதரிப்பேன்; என்னை கைது செய்யுங்கள்!" என்று பேசினார்.
இத்தகையப் பேச்சு தமிழீழ ஆதரவாளர்களுக்கு முழு உற்சாகத்தை தந்தது.

1992இல் சமூக நீதி உள்ளிட்ட பல்வேறு தமிழர் உரிமைக் கோரிக்கைகளை வலியுறுத்தி "தமிழர் வாழ்வுரிமை மாநாடு" ஒன்றை சென்னையில் பா.ம.க. நடத்தியது.

அப்போது மதுரையில் பா.ம.க. வில் பொறுப்பு வகித்த அண்ணன் வேலுச்சாமி தலைமையில் நான் உள்பட முப்பதுக்கும் மேற்பட்ட தோழர்களோடு தனி வண்டியில் சென்னைக்கு கிளம்பினோம்.
தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் உருவம் பொறித்த படங்கள் ஆயிரக்கணக்கில் அச்சடித்து வண்டியில் வைத்திருந்தோம்.
சென்னையை நெருங்கும் வேளையில், பல்வேறு திசைகளிலிருந்து பா.ம.க. மாநாட்டிற்கு வண்டிகள் அணி வகுத்து வந்து கொண்டிருந்தன.
பெரும்பாலான வண்டிகளை நிறுத்தி பிரபாகரன் படத்தை கண்ணாடிகளில் ஒட்டி விட்டோம். வந்திருந்த தோழர்கள் பிரபாகரன் படத்தை சட்டையில் குத்திக் கொண்டனர்.
படத்தை விரும்பிக் கேட்டவர்களுக்கு சட்டையில் குத்தியும் விட்டனர்.
ஒரு சில தோழர்கள் கைக்குட்டையை நெற்றியில் கட்டி அதன் மீது பிரபாகரன் படத்தை அணிந்திருந்தனர் (படத்தின் இடது புறத்தில் இரண்டாவதாக நான் உள்ளேன்).

தமிழர் வாழ்வுரிமை மாநாட்டிற்கு வி.பி.சிங், இராம் விலாசு பசுவான், உள்ளிட்ட பல்வேறு வட நாட்டுத் தலைவர்கள் அழைக்கப்பட்டிருந்தனர்.

மாநாட்டுப் பேரணி தொடங்கும் போது , பிரபாகரன் கையில் துப்பாக்கி ஏந்திய முழு உருவ துணிப் பதாகை ஒரு தோழர் மூலம் கையில் கிடைத்தது.

ஒரு தேனீர் கடையில் நாங்கள் நின்று கொண்டிருந்த போது ஊன்றப்பட்ட நிலையில் இரண்டு கம்புகள் காட்சி அளித்தன.
உடனடியாக தோழர்கள் கம்புகளை உருவி, பிரபாகரன் பதாகையை கம்புகளுக்கு நடுவே கட்டி உயரமாகத் தூக்கினர்.
எல்லோரின் கண்களிலும் பிரபாகரன் ஒளிவிட்டார்.
ஊடகத்தினர் மோப்பம் பிடித்து , பிரபாகரனை சுற்றி வளைத்து படம் எடுத்துக் கொண்டிருந்தனர்.
பேரணி முழுவதும் பிரபாகரன் படம் பற்றியே பேச்சு.
பிரபாகரன் வாழ்க! தமிழீழம் வெல்க! என்ற முழக்கம் விண்ணை எட்டியது.
பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட அந்தப் பேரணியில் பிரபாகரன் பதாகைப் படமே அனைவரையும் ஈர்த்தது.

மறுநாள் செய்தி ஊடகங்களில், "பயங்கரவாத புலிகள் மாநாடு" என்று தலைப்பு எழுத்துகளில் வெளியிடப்பட்டன.

காங்கிரசு கட்சியினர் உள்ளிட்ட புலி எதிர்ப்பாளர்கள் பலர் இதனை சாக்காக வைத்து "பா.ம.க.வை தடை செய்ய வேண்டும்" என்று கூச்சல் எழுப்பினர்.

இந்தியா டுடே ஏடு "புலிகளின் முதுகில்" என்று தலைப்பிட்டு விடுதலைப் புலிகள் மீதான வன்மத்தை வெளிக் காட்டிக் கொண்டது.
புலி வேடம் போட்டு கலை நிகழ்ச்சி நடத்தியவர்களைக் கூட "புலி ஆதரவாளர்கள்" என்று கூச்சலிட்டது.

மாநாட்டில் தடை செய்யப்பட்ட அமைப்பை ஆதரித்ததற்காக மருத்துவர் இராம்தாசு, பண்ருட்டி இராமச்சந்திரன், தோழர் தியாகு, பழ.நெடுமாறன் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

அன்றைக்கு பிரபாகரன் படத்தை கொண்டு சென்றதன் மூலம் இந்திய- தமிழக அரசுகளின் ஒடுக்குமுறையின் இறுக்கம் களையப்பட்டது உண்மை!
அச்சம் உடைக்கப்பட்டது உண்மை!
அன்று ஒரு படம் ஏந்தினோம்!
இன்று ஆயிரமாயிரம் படங்களை ஏந்தி நடந்திட எண்ணற்ற இளைஞர்கள் உருவாகியிருப்பது மகிழ்ச்சிக்கு உரிய செய்தியாகும்!

அச்சமூட்டுபவரை அடி பணிய வைப்பதே தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரனின் வழிமுறையாகும்!

பிரபாகரன் பிறந்த நாள் கொண்டாடும் இன்றைய இளைய தலைமுறையினரின் முதல் தாரக மந்திரமாக இது இருக்கட்டும்!

நன்றி: கதிர் நிலவன்

1988 மதுரையில் தலைவர் பிறந்தநாள்

1988 மதுரையில் தலைவர் பிறந்தநாள்

ஏதோ 1988 இல் தலைவருக்கு பிறந்த நாள் மதுரையில் பிறந்தநாள் கொண்டாடப்பட்டதை பெரிதாகப் பேசுகிறார்கள்.

பிரபாகரன் பிரபலமானதே 1983 இல் தான்.

ஆனால் 1980 இலேயே மதுரை தனி தமிழீழ நாடு அமைய ஆதரவு தெரிவித்துவிட்டது.

search in google "1980ல் தமிழகத்தின் ஈழ ஆதரவு வேட்டொலி"