Thursday 30 August 2018

பெறாத பெற்றோர்

பெறாத பெற்றோர்

நேற்று உறவினர்கள் கூடி  எங்கள் குலதெய்வ கோவிலுக்குச் சென்று எங்கள் மகளுக்கு மொட்டை போட்டு தாய்மாமன் மடியில் வைத்து காதுகுத்தினோம்.
சர்க்கரைப் பொங்கலிட்டு அனைவருக்கும் அளித்து உண்டோம்.
தமிழர் பண்பாட்டில் காதுகுத்து சடங்கானது மிக முக்கியமான ஒன்றாகும்.

இது கிறித்துவர்களின் ஞானஸ்நானம் (baptism),
யூதர்களின் பிரிட் மிலா (brit milah) மற்றும்
சீனர்களின் காண் டீ (gan die) அல்லது கை மா (kai ma) ஆகியவற்றுடன் ஒத்துப்போகிறது.

அதாவது ஒரு குழுந்தைக்கு பெற்றோருக்கு அடுத்த நிலையில் ஒரு உறவை நியமிப்பது.
அவர் அந்த குழந்தையின் "பெறாத  பெற்றோர்" ஆவார்.

தமிழர் பண்பாட்டில் இந்த உறவு "தாய்மாமன்" ஆவார்.

பெற்றோருக்கு அடுத்து ஒரு குழந்தையைக் காக்கும் பொறுப்பு தாய்மாமனுடைது ஆகும்.

தாய்மாமனிடம் இந்த பொறுப்பை ஒப்படைத்து சுற்றத்திற்கு அதனை அறிவிக்கும் சடங்குதான் தாய்மாமன் மடியில் வைத்து காதுகுத்தும் விழா.

கிறித்துவ நாடுகளில் குழந்தைக்கு ஞானஸ்நானம் அல்லது திருமுழுக்கு அளித்து குழந்தையின் god father ஆக ஒருவர் நியமிக்கப்படுவார். (பெண் என்றால் god mother).
இந்த ஞானத் தந்தை குடும்ப உறுப்பினராகவோ அல்லது குடும்ப நண்பராகவோ இருக்கலாம்.

யூத மத வழக்கத்தில் சன்டெக் (santek) என்று அழைக்கப்படும் "பெறாத பெற்றோர்" மடியில் வைத்து குழந்தையின் ஆணுறுப்பின் முன்தோல் அகற்றும் சடங்கு நடக்கிறது.

சீனரில் அனைத்து மதத்தினரும் பெறாத பெற்றோர் நியமிக்கும் வழக்கம் கொண்டுள்ளனர்.
ஆனால் பெரும்பாலும் தாத்தா பாட்டி அல்லது வயது முதிர்ந்தோரை நியமிக்கின்றனர்.

நமது வளைகாப்பு சடங்கு ஐரோப்பிய நாடுகளில் Baby shower எனும் சடங்குடன் ஒத்துப் போகிறது என்பது கூடுதல் தகவல்.

நகர்ப்புறங்களின் மறைந்துவரும் இத்தகைய சடங்குகளை அதன் முக்கியத்துவம் உணர்ந்து அழியாமல் காப்பது நமது கடமையாகும்.

Sunday 26 August 2018

மாரியம்மனைப் புகழ்ந்த மதார்சா ராவுத்தர்

மாரியம்மனைப் புகழ்ந்த மதார்சா ராவுத்தர்

கழுகுமலை முருகன் மீது காவடிச்சிந்து பாடிய காதர் பாட்சா பற்றியும்
புதுச்சேரியில் முருகனுக்கு கோவில் கட்டி நிர்வகித்துவரும் முகமது கௌஸ் குடும்பம் பற்றியும் ஏற்கனவே பார்த்தோம்.

இப்போது மாரியம்மனைப் பாடிய மதார்சா இராவுத்தர் எனும் இசுலாமியர் பற்றி அறிவோம்.

-------------------------
கோயம்புத்தூர் - பொள்ளாச்சி சாலையில் சூலக்கல் என்ற ஊரின் மாரியம்மன் கோவில் புகழ்பெற்றதாகும்.

இந்த மாரியம்மன் மீது பொள்ளாச்சி வட்டம் அம்பாரம்பாளையம் ஊரைச் சேர்ந்த மதார்சா ராவுத்தர் எனும் புலவர் அம்மானை, கும்மி, காரணச்சிந்து என மூன்றும் பாடி அவை அச்சில் வெளிவந்தன.

1909 இல் அச்சிட்டு முதல் பதிப்பு விற்றுத் தீர்ந்து 1919 இல் மீண்டும் அச்சிடப்பட்டுள்ளன.
அச்சிட்டது பொள்ளாச்சி 'கோபாலவிலாச அச்சுக்கூடம்' என்று உள்ளது.

ஒரு இடத்தில் 'செந்தமிழ் பாடும்படி செப்பினாள் மாரியம்மன்' என்று கூறும் அப்புலவர்,
'ஜாதிபேதம் பாராமல் தாயாரே காக்கவேண்டும்' என்று மாரியாத்தாளை வேண்டுகிறார்.
(இசுலாமியர் ஒரு சாதியாம்!)

சூலக்கல் பற்றி கீழ்கண்டவாறு வர்ணிக்கிறார்,

'பூமலரும் தீங்கனியும் பொலிந்து நிறைந்தோங்கும்
பைங்காவும் செந்நெல்களும் பருத்தகன்னல் கழனிகளும்
வாழை கமுகுபலா மஞ்சள் இஞ்சி ஏலங்களும்
பொன்மேலும் ஓங்கும் விதமான பண்ணைகளும்
பொன்னி நதியென்னப் புகழ்பெற்ற நதிவளமும்
சூழ்ந்துசெல் வம்திகழும் சூலக்கல்'

தன்னைப் பற்றி கூறுகையில்,

"ஆம்பராவதி நதிசூழ் அம்பராம் பாளையத்தில்
ஜமால்ரா வுத்தன்பெற்ற தவோபல புத்திரனாம்
அங்காள பரமேசுவரி அம்புயப் பதங்களையும்
மதுரைவீரன் உபய வனசமலர்த் தாளிணையும்
பக்தியுடன் நாளுடம் பரவித் துதிசெய்வோன்
மாடன் முதலான மற்றுமுள்ள பேய்களையும்
ஓட்டிக் கருவறுத்த உத்தமனாம் மதார்சா"
என்று பாடுகிறார்.

இதோ ஒரு கும்மிப்பாட்டு எடுத்துக்காட்டுக்காக,
"கணித சக்கரம் உள்ளவளாம் மாரி
கம்பீரமான பரஞ்சோதி
பணிதி அணிந்திடும் மாரியம்மன்
பாடிக்கும்மி அடியுங்கடி"

ஆனைமலை என்.ஏ.சிவசூரியம்பிள்ளை இயற்றிய கவியில்,
"மதார்சா ராவுத்தர் மாரியம்மன் பேரால்
எதார்த்த விதமாக எண்ணி பதார்த்தமது
இன்னதெனக் கேரா எளியர் சுபமடைய
சொன்னதமிழ்ப் பாவே சுகம்'
என்று பாராட்டிப் பாடியுள்ளார்.

புரவிபாளையம் ஜமீன் சமஸ்தானப் புலவர் முத்துசாமிப்பிள்ளை தனது கவிதையில் இவரை 'தெளிந்த தமிழ் அறிஞன்' என்று பாராட்டுகிறார்.

[நன்றி: கொங்கு ஆய்வுகள் (நூல்)
ஆசிரியர்: செ.இராசு]

(மேற்கண்ட நூலில் 'கொங்குநாட்டு இசுலாமியப் புலவர்கள்' எனும் தலைப்பில் ஐயாவு ராவுத்தர், மதார்சா ராவுத்தர், ஜம்பை காசிம், கா.அப்துல் சுகூர், முகம்மது யாக்கூபு, கா.நயினார் முகம்மது, இ.கமாலுதீன் ஆகிய புலவர்கள் பற்றி உள்ளது)
--------------------------

இன்று கோயம்புத்தூர் இந்து மதவெறிக் கும்பல்களின் தலைநகரம் போல ஆகிவிட்டது.

வணிகச் சமூகமான இசுலாமியரை ஒடுக்கி வணிகத்தைக் கைப்பற்ற வடயிந்திய வணிகர்களான மார்வாடிகள் தலைமையில் இந்த மதவெறி கருத்தியல் செயல்படுத்தப் படுகிறது.

தமிழகத்தின் வரலாற்றில் எல்லா மதத்தாரும் அனைத்து மத தெய்வங்களையுமே வணங்கி வந்துள்ளனர்.
சைவ அடியார்கள் இராமனையும் வைணவ அடியார்கள் சிவனையும் பாடியுள்ளனர்.
சோழர்கள் சைவர்களாக இருந்த போதும் வைணவருக்கு நிலமும் கோவிலுக்கு நிவந்தங்களும் அளித்துள்ளனர்.
நாகப்பட்டிணம் புத்த கோவில் கூட சோழர்களால் பராமரிக்கப்பட்டுள்ளது.
பாண்டியர்கள் சைவத்திற்கு மாறிய பிறகும் சமணருக்கு கல்படுக்கை அமைத்து கொடுத்துள்ளனர்.

அன்று பல்வேறு மதங்கள் இருந்துள்ளன.
தமிழ் மன்னர்கள் அனைத்து மதங்களையும் அரவணைத்து சமயப்பொறையுடன் ஆட்சி நடத்தியுள்ளனர்.

  நூறாண்டுகள் முன்புகூட ஒரு இசுலாமியர் மாரியம்மனைப் பாடியதும் அதைப் பிற புலவர்கள் பாராட்டியதும் அன்றைய தமிழ்ச் சமூகத்தின் ஒற்றுமையைக் காட்டுகிறது.

இப்போதும் கூட தமிழக பொதுமக்கள் அனைவரும் பிற மத வழிபாட்டுத் தலங்களுக்கு செல்கின்றனர்.

ஆனால் சமீபகாலமாக 'நேற்று வந்தவர்கள்' இதை மாற்றியமைக்க முயல்கின்றனர்.

இந்த சூழ்ச்சிக்கு கொங்கு தமிழர்கள் இரையாக வேண்டாம்.

தமிழர் ஒற்றுமை ஓங்குக!

தமிழ்தேசியக் கருத்தியல் ஒப்பீடு

தமிழ்தேசியக் கருத்தியல் ஒப்பீடு

கேள்வி: உலகம் அழிய ஒரு மணிநேரம் உள்ளது.
அதை யாராலும் தடுக்கமுடியாது.
நீங்களும் ஒரு அழகான இளம்பெண்ணும் ஒரு தனி அறையில் இருக்கிறீர்கள்.
என்ன செய்வீர்கள்?

சாமானியன்:
அந்த பெண்ணை உடலுறவுக்கு அழைப்பேன்.
மறுத்தால் கட்டாயப் படுத்துவேன்.

காந்தியவாதி:
வலிக்காமல் எப்படி தற்கொலை செய்துகொள்வது என்று சொல்லிகொடுப்பேன்.
நானும் அவளுக்கு இடைஞ்சல் இல்லாமல் சாவேன்.

பெண்ணாதிக்கவாதி:
நான் அந்த பெண்ணாக இருந்தால் உடைகளை விலக்கி உடலுறுப்புகளைத் திறந்துகாட்டி அந்த ஆண் நெருங்கி வரும்போது அவன் பார்வையில் தவறு உள்ளதாக குற்றம்சாட்டுவேன்.
இளைத்தவன் என்றால் அவனை அடித்து உதைப்பேன்.

கிறித்துவவாதி:-
பைபிளில் கூறியபடி உலகம் அழிகிறது எனவே அவளிடம் கிறித்தவத்திற்கு மாறினால் நரகத்தில் இருந்து தப்பிக்கலாம் என்று கூறி மதம் மாறச்செய்வேன்.
இருவரும் பாவ மன்னிப்பு கேட்போம்.

இந்துத்துவவாதி:-
கலியுகம் முடியப் போகிறது.
மனிதர்களின் பாவம் எல்லை கடந்துவிட்டதால் கடவுள் உலகத்தை அழிக்கிறார்.
எனவே அவளுக்கு ஸ்லோகம் சொல்லிக்கொடுத்து பிரார்த்தனையில் ஈடுபடச்சொல்வேன்.

இசுலாமியவாதி:
அவளை மதம் மாறச்சொல்வேன்.
அவளை பர்தாவால் மூடி ஓரமாக அமரவைத்து விட்டு நான் தொழுகையில் ஈடுபடுவேன்.

பௌத்தவாதி:
அவள் உடலுறவுக்கு அழைத்தால் அந்த ஆசையை விடச் சொல்வேன்.
இருவரும் உண்ர்ச்சியின்றி அமர்ந்திருப்போம்.

சமணவாதி:
உடைகளைக் களைந்துவிட்டு அமர்வோம்.
என்னை நானே துன்புறுத்திக் கொள்வேன்.

ஆன்மீகவாதி:-
இருக்கும் நேரத்தை எப்படி சந்தோசமாக கழிப்பது என்று பார்ப்பேன்.
தியானம், யோகா செய்வேன்.
கவலைகளை மறந்து மகிழ்ச்சியான தருணங்கள் பற்றி கலந்துரையாடுவோம்.

நடுநிலைவாதி:
உலகம் அழிந்ததில் எங்கள் இருவர் மீதும் சமமான தவறிருக்கிறது என்று அவளுக்கு புரியவைப்பேன்.
அவள் மறுத்தால் வாக்குவாதத்தில் ஈடுபடுவேன்.

மனிதநேயவாதி:
அவளுக்கு உடலுறவு தேவைப்படுகிறதா என்று கேட்பேன்.
அவளுடைய ஆசை எதையாவது கூறினால் அதை என்னால் நிறைவேற்றமுடியுமா என்று பார்ப்பேன்.

திராவிடவாதி:
உலக அழிவு பார்ப்பனரால் வந்தது என்றும் பெரியார் இருந்திருந்தால் இதை எப்படியெல்லாம் தடுத்திருப்பார் என்றும் பத்து புத்தகம் எழுதுவேன்.

பொதுவுடைமைவாதி:
உலக அழிவு பெருமுதலாளிகளால் வந்தது என்பதையும்
இயற்கையை அழித்து அவர்கள் அடைந்த லாபத்தில் தொழிலாளர்களுக்கு பங்கும் கொடுக்கவில்லை என்பதையும் அவளுக்கு கடினமான வார்த்தைகளால் புரியவைக்க முயற்சிப்பேன்.

தலித்தியவாதி:
உயர்சாதியினர் அழிந்தனர் என்று சந்தோசப்படுவேன்.
அந்த பெண் உயர்சாதி என்றால் காலில் விழுந்து என்னை எதுவும் செய்துவிடவேண்டாம் என்று கேட்டுக் கொள்வேன்.
அவள் உடலுறவுக்கு அழைத்தால் கத்தி கூப்பாடு போடுவேன்.

சோசலிசவாதி:
அவளுடன் நட்பாக பேசி தொட்டு உணர்ச்சிகளைத் தூண்டி உடலுறவுக்கு சம்மதிக்க வைப்பேன்.
மறுத்தால் கோபம் கொள்ளாமல் நட்புடன் பேசுவதைத் தொடர்வேன்.

பழமைவாதி:
அவளை உடலுறுவுக்கு அழைப்பேன்.
வராவிட்டால் அடிப்பேன்.

நவீனத்துவவாதி:
என் கைபேசியிலிருந்து ஆபாச படத்தை அவளுக்கு காட்டி அதுபோலச் செய்யலாம் என்பேன்.
கற்பு, ஒழுக்கம் எல்லாம் மூடநம்பிக்கை என்று கூறுவேன்.

சுற்றுச்சூழல் போராளி:
இயற்கையை நமது பேராசையால் அழித்துவருவதைப் பற்றி நான் எழுதிய புத்தகங்கள், போராட்டங்கள், கோரிக்கைகள் ஆகியன பற்றி கூறுவேன்.
யாருமே கேட்கவில்லையே என்று வருத்தப்படுவேன்.

தமிழ்தேசியவாதி:

குமரிக்கண்டம் மூழ்கிய போது மீன்களைப் பின்தொடர்ந்து பாண்டியர் தப்பித்த வரலாறையும்
கடல் நீரோட்டத்தில் செல்லும் ஆமைகளைப் பின்பற்றி சோழர்கள் உலகமெல்லாம் குடியேறிய வரலாறையும் அந்த பெண்ணிடம் எடுத்துக்கூறுவேன்.
இருவரும் அறையை விட்டு வெளியே வருவோம்.
பிற உயிரினங்கள் என்ன செய்கின்றன என்று கவனித்து பின்பற்றி தப்பிக்க இறுதிவரை முயல்வோம்.

Thursday 23 August 2018

142 இனி 139

142 இனி 139

மலையாள பாம்புக்கு ஓடி ஓடி பால்வார்த்த இளிச்சவாய் தமிழர்களே!

இதோ அது கடித்துவிட்டது!

இன்று முல்லைப் பெரியாறு அணை நீர் மட்டம் 139 அடியாகக் குறைக்கப்பட உள்ளது.

முன்பே சொன்னேன் இந்த இனவெறியர்களுக்கு உதவி செய்யாதீர்கள் என்று.

இடுக்கி மாவட்டம் 95% தமிழர் வாழும் பகுதி.

முல்லைப் பெரியாறு அணை அமைந்துள்ள இடுக்கி மாவட்டமே நமக்கு சொந்தமானதுதான்.

அதை மீட்க களம் இறங்குங்கள்!

ஒரு வாரம் கேரளாவுக்கு செல்லும் உணவை தடுத்து நிறுத்துங்கள் போதும்.

தமிழ்நாடு பெயர்மாற்றம் அண்ணாதுரையின் சாதனையா?

தமிழ்நாடு பெயர்மாற்றம் அண்ணாதுரையின் சாதனையா?

* 1955 இல் முதன்முதலாக ம.பொ.சி தனது தமிழரசுக் கழக செயற்குழு கூட்டத்தில் தமிழர் மாநிலத்துக்கு 'தமிழ்நாடு' என்ற பெயரை முன்மொழிந்தார்.
(1953 லேயே மதராஸ் என்ற பெயரை மாற்றுவது குறித்து சட்ட மேலவையில் பேசியுள்ளார்)

* 1956 இல் தமிழர்களின் எல்லையை அண்டை மூன்று மாநிலங்கள் தாராளமாக ஆக்கிரமித்து மிச்சம் வைத்த மதராஸ் மாகாணம் அதே பெயரல் ஒரு மதராஸ் மாநிலம் ஆனது.
'மதராஸ்' என்ற பெயருக்கு பதிலாக 'தமிழ்நாடு' என்று பெயரிட சங்கரலிங்கனார் உண்ணாவிரதம் இருந்தார்.

* காமராசர் பாராமுகமாக இருக்க 74 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து அவர் இறந்தார்.
அதற்குப் பிறகு 42 நாட்கள் கழித்து சட்டமன்றத்தில் பெயர்மாற்ற தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
ஆனால் காமராசர் அதைத் தள்ளுபடி செய்தார்.

* இப்போது பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் "தமிழ் ராஜ்யம்" என்று பெயரிடுமாறு குரல் கொடுத்தார்.
தனது பத்திரிக்கையிலும் எழுதினார்.

* 1960 இல் ம.பொ.சி தலைமையில் மீண்டும் பெயர்மாற்றத்திற்கான மக்கள் திரள் போராட்டம் நடந்தது.
இதில் அண்ணாதுரை கலந்துகொண்டதோடு சரி.

* 1961 இல் சின்னதுரை கொண்டுவந்த தீர்மானத்தில் மதராஸ் மாகாணம் தமிழில் எழுதும்போது 'தமிழ்நாடு' எனவும் ஆங்கிலத்தில் 'மெட்ராஸ் ஸ்டேட்' என்றும் எழுதப்படும் என்று நிதியமைச்சர் சி.சுப்பிரமணியம் உறுதியளித்தார்.
அந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையை 'தமிழ்நாடடின் நிதிநிலை அறிக்கை' என்ற பெயரிலேயே தாக்கல் செய்து வாசித்தார்.

அதாவது பாதி வெற்றி அடைந்த இந்த நிலையில்தான் அதுவரை வேடிக்கை பார்த்த 'திராவிட நாடு' ஆசிரியரான அண்ணாதுரை இதில் நுழைகிறார்.

இதற்குக் காரணம் அண்ணா 1962 பிப்ரவரியில் நடந்த தேர்தலில் தான் பிறந்த மண்ணான காஞ்சிபுரத்திலேயே மண்ணைக் கவ்வியதுதான்.

அப்போது மக்கள் மத்தியில் 'தமிழ்நாடு' பெயர்மாற்றத்திற்கு இருக்கும் பரவலான ஆவலை கவனித்து மக்கள் ஆதரவைப் பெற இந்த விடயத்தில் பங்கெடுக்கிறார் அண்ணாதுரை.

* 1962 இல் காமராசர் ஆட்சியில் பெயர்மாற்றத் தீர்மானம் மீண்டும் கொண்டுவரப்பட்டு நிறைவேறாமல் போனது.

* 1963 இல் அண்ணாதுரை இந்திய பாராளுமன்றத்தில் அண்ணாதுரை தமிழ்நாடு பெயர்மாற்றத்திற்கு குரல்கொடுத்து தனது வாதத் திறமையால் அனைவரையும் கவர்ந்தார்.
இதுவே இவர் இப்பெயர்மாற்ற போராட்டத்தில் செய்த குறிப்பிடத் தகுந்த பங்களிப்பு

* பிறகு 1964 இல் பக்தவச்சலம் ஆட்சியில் இந்த தீர்மானம் கொண்டுவரப்பட்டு நிறைவேறாமல் போனது

* அதற்கடுத்த இந்தியெதிர்ப்பு போராட்டத்தில் மத்திய மாநில காங்கிரஸ் அரசுகள் செய்த அடக்குமுறைகள் மக்கள் மனதில் வெறுப்பை ஏற்படுத்தி 1967 ஏப்ரலில் தி.மு.க ஆட்சியைப் பிடிக்க காரணமானது.

(இந்தியெதிர்ப்பு போராட்டமும் சோமசுந்தர பாரதியார் தலைமை ஏற்று நடத்தியதே.
அண்ணாதுரை பங்கு அதில் பெரிதாக ஏதுமில்லை.
ஈவேரா ஒரு படி மேலே போய் போராடும் மாணவர்களை சுடச்சொல்லி எழுதிவந்தார்)

* ஆட்சிக்கு வந்து மூன்று மாதம் கழித்து சட்டமன்றத்தில் அண்ணாதுரை பெயர்மாற்றம் செய்ய மத்திய அரசை வலியுறுத்தும் தீர்மானத்தைக் கொண்டுவந்தார்.
அது ஏகமனதாக நிறைவேறியது

* ஓராண்டு கழித்து 1968 ஆண்டுக் கடைசியில் பாராளுமன்றத்தில் மசோதா நிறைவேறியது.

* 14.01.1969 அன்று முதல் தமிழ்நாடு என்ற பெயரே நடைமுறைக்கு வந்தது.
அடுத்த ஒரு மாதத்தில் அண்ணாதுரை புகையிலைக் குதப்பும் பழக்கத்தால் வந்த புற்றுநோயினால் உயிரிழந்தார்.

ஏதோ அண்ணாதுரை சாகும்வரை போராடி பெயர்மாற்றம் கொண்டுவந்தது போல புனைக்கதைகள் எழுதப்படும் அதே வேளையில்
"தமிழ்நாடு" என்ற பெயருக்காக உயிர்நீத்த சங்கரலிங்கனாரை பெயர்மாற்ற விழா அன்று நினைவுகூர்ந்ததோடு சரி அதன்பிறகு இருட்டடிப்பு செய்துவிட்டனர்.

தமிழ்நாடு என்ற சொல்லை உருவாக்கி முன்மொழிந்த ம.பொ.சி கூட இருட்டடிப்பு செய்யப்பட்டு விட்டார்.

ஆனால் தமிழ்நாடு பெயர்மாற்றம் என்றாலே அண்ணாதுரை கொண்டுவந்தது என்றும் அவர் இல்லாவிட்டால் நாம் 'மெட்ராஸ் மக்களாக' இருந்திருப்போம் என்றும் திராவிடவாதிகள் பேசுவதைப் பார்க்கிறோம்.

இவர்களின் செயழகு எவ்வாறு என்றால்,

* கால் நூற்றாண்டு கழித்துதான் 1996 இல் மதராஸ் சென்னை ஆனது.

* தமிழகத்தின் உயர்நீதி மன்றம் இன்றும் "சென்னை உயர்நீதிமன்றம்" அல்லது "மதராஸ் ஹைகோர்ட்" என்றே இன்றுவரை உள்ளது.

* இன்றுவரை தமிழகத்தின் தலைமை பல்கலைக்கழகம் "அண்ணா பல்கலைக்கழகம்" என்றே உள்ளது.
"தமிழ்நாடு பல்கலைக் கழகம்" என்று இல்லை

Tuesday 21 August 2018

மூவேந்தர் ஒரே பாடலில் (பார்ப்பனர் வறிய நிலை)

மூவேந்தர் ஒரே பாடலில் (பார்ப்பனர் வறிய நிலை)

பாடல்: புறநானூறு 367
பாடப்பட்டோர்:
சேரமான் மாவண்கோ,
சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி,
பாண்டியன் கானப்பேர் தந்த உக்கிரப் பெருவழுதி
ஆகிய மூவேந்தர்கள்.

பாடியவர்: ஔவையார்.

உரை: தேவலோகத்தைப் போன்ற பகுதிகளையுடைய நாடு, அந்த நாட்டு வேந்தனுடையதாக இருந்தாலும்,
அவ்வேந்தன் இறக்கும்பொழுது அது அவனுடன் செல்வதில்லை.
அது அவனுக்குப் பின்னர் வரும் தொடர்பில்லாத வலியோர்க்குப் போய்ச் சேரும்.

பொருளை வேண்டி இரந்த பார்ப்பனர்களுக்கு, அவர்களின் ஈரக்கை நிறைய பூவும் பொன்னும் நீர்வார்த்துக் கொடுத்தும்,

நல்ல அணிகலன்களை அணிந்த மகளிர் பொற்கலங்களில் கொண்டுவந்து கொடுக்கும், நாரால் வடிகட்டப்பட்ட கள்ளின் தெளிவை அருந்தியும்,
மகிழ்ச்சியோடும், சிறப்பாகவும்,
இரவலர்க்கு அரிய அணிகலன்களைக் குறையாது கொடுத்தும்,
இவ்வுலகில் நீங்கள் வாழ்வதற்காக வரையறுக்கப்பட்ட நாட்கள் முழுதும் வாழ்க.
நீங்கள் வாழும்பொழுது இவ்வுலகில் செய்த நல்வினைகளைத் தவிர,
நீங்கள் மறுவுலகிற்குச் செல்லும்பொழுது உங்களுக்குத் துணையாக வருவது வேறொன்றுமில்லை.
வீடுபேறு ஒன்றையே விரும்பிப்,
புலன்களை அடக்கிய அந்தணர்கள் வளர்க்கும் முத்தீயைப் போல அழகுடன் வீற்றிருக்கும் வெண்கொற்றக் குடையையும் கொடிகட்டிய தேரையும் உடைய மூவேந்தர்களே!
நான் அறிந்த அளவில் முடிவாகத் தெரிந்தது இதுவேயாகும்.
வானத்தில் விளங்கும் விண்மீன்களையும் இம்மென்ற ஒலியுடன் பெய்யும் பெரிய மழைத்துளிகளையும் விட நும்முடைய வாழ்நாட்கள் மேம்பட்டு விளங்குவன ஆகுக.

இதைக் கூறுவது புறநானூறு 367 வது பாடல்,
அது கீழ்வருமாறு

நாகத் தன்ன பாகார் மண்டிலம்
தமவே யாயினும், தம்மொடு செல்லா
வேற்றோர் ஆயினும் நோற்றோர்க்கு ஒழியும்;
ஏற்ற பார்ப்பார்க்கு ஈர்ங்கை நிறையப்
பூவும் பொன்னும் புனல்படச் சொரிந்து

பாசிழை மகளிர் பொலங்கலத்து ஏந்திய
நாரரி தேறல் மாந்தி மகிழ்சிறந்து
இரவலர்க்கு அருங்கலம் அருகாது வீசி
வாழ்தல் வேண்டும் இவண் வரைந்த வைகல்;
வாழச் செய்த நல்வினை அல்லது

ஆழுங் காலைப் புணைபிறிது இல்லை;
ஒன்றுபுரிந்து அடங்கிய இருபிறப்பாளர்
முத்தீப் புரையக் காண்தக இருந்த
கொற்ற வெண்குடைக் கொடித்தேர் வேந்திர்,
யான்அறி அளவையோ இதுவே; வானத்து

வயங்கித் தோன்றும் மீனினும் இம்மென
இயங்கும் மாமழை உறையினும்
உயர்ந்துமேந் தோன்றிப் பொலிகநும் நாளே!

இப்பாடல் மூவேந்தரும் ஒன்றாக வீற்றிருந்தபோது ஔவை பாடிய பாடல் ஆகும்.

இதிலே கவனிக்கவேண்டிய ஒன்று பார்ப்பனர்களுக்கு பூவும் நகைகளும் கொடுத்த தமிழ் அரசர்கள் பார்ப்பன அடிமைகள் என திராவிட கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன.
ஆனால் முழுப் பாடலைப் பார்க்கும்போது
ஏற்ற பார்ப்பனர் அதாவது தகுதி உள்ள பார்ப்பனருக்கு நகையும் பூவும் கலந்து கொடுத்த மூவேந்தர்,
நாடி வந்த வறியவர்களுக்கும் அரியவகை நகைகளைக் கொடுத்துள்ளனர்.

அதாவது பார்ப்பனரும் இரவலரும் ஏறத்தாழ ஒரே நிலையில்தான் இருந்துள்ளனர்.

படம்: அரசேந்திரச் சோழன் (ராஜேந்திர சோழன்) வெளியிட்ட நாணயத்தில் மூவேந்தர் சின்னம்

08.11.2016 அன்று முகநூல் பதிவாக இட்டது

2021 இல் தமிழகத்தில் ஒன்றரை கோடி வந்தேறிகள்

2021 இல் தமிழகத்தில் ஒன்றரை கோடி வந்தேறிகள்

பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை வெளியிடப்படும் மக்கட்தொகைக் கணக்கீட்டின் படி தமிழகத்தின் மக்கட்தொகையானது தமிழகப் பிறப்பு விகிதத்தின்படி 51 லட்சம் தான் அதிகரித்திருக்க வேண்டும்.
ஆனால் தமிழக மக்கட்தொகை பத்தாண்டுகளில் 97 லட்சம் அதிகரித்துள்ளது.

அதாவது கடந்த பத்தாண்டுகளில் மட்டும் ஏறத்தாழ 50 லட்சம் பேர் தமிழகத்தில் குடிபுகுந்து ரேசன் கார்டு வாங்கியுள்ளனர்.

அதனாலேயே தமிழக குடிமக்களின் எண்ணிக்கை அரைக் கோடி கூடுதலாக அதிகரித்துள்ளது.
இவர்களில் பெரும்பாலோர் வடயிந்தியர் ஆவர்.

சென்னையையும் கோவையையும் குடியேறி நிறைத்த பிறகு தற்போது மதுரையை குறிவைத்துள்ளனர்.

மதுரையைச் சுற்றியுள்ள மாசி வீதிகளிலும் சித்திரை வீதிகளிலும் உள்ள அனைத்து கடைகள், கட்டிடங்கள், நிறுவனங்கள் அனைத்தையும் மார்வாடிகள் விலைக்கு வாங்கிவிட்டனர்.

இதற்கு காரணம் குஜராத்திய மக்களான சௌராஷ்டிர மக்கள் மதுரை முதல் திருமங்கலம் வரை தொடர்ச்சியாக பெரும்பான்மையுடன் குட்டி தாய்நிலம் அமைத்து வாழ்வதுதான்.

இங்கே தற்போது பெருகியுள்ள பாஜக ஆதரவும் மதுரை மார்வாடிகளின் பணமும் சேர்ந்து திட்டமிட்டு மதுரையில் ஹிந்தியரைக் குடியேற்றி மதுரையைத் தமக்குச் சொந்தமாக்கப் பார்க்கின்றனர்.
 
மதுரையில் குறிப்பிட்ட வார்டுகளில் வடயிந்தியரைக் குடியேற்றி வருகின்றனர்.
அங்கே மார்வாடிகளை நிறுத்தி வெற்றிபெற வைக்கவுள்ளனர்.

மதுரை 79 வது வார்டில் 600 பேராக இருந்த வடயிந்திய வாக்காளர்கள் தற்போது 4000 பேராகியுள்ளனர்.

இதேபோல 58 வது வார்டில் 7000 பேர் இருக்கிறார்கள்.

மதுரை மத்திய தொகுதியில் 20,000 வடயிந்திய வாக்காளர்கள் உள்ளனர்.

(இதிலே 18 வயதுக்கு குறைந்தோர் மற்றும் குடியுரிமை பெறாதோரைச் சேர்க்கவில்லை)

அதாவது ரேசன்கார்டு வாங்குவதற்கு நிரந்தர முகவரி தேவை அதனால் இப்போதெல்லாம் வடயிந்தியர்கள் முதலில் வாக்காளர் அடையாள அட்டை வாங்கிவிடுகின்றனர்.

2016 செப்டம்பர் 1 அன்று மத்திய பா.ஜ.க அரசு தமிழக அரசின் மீது அழுத்தம் கொடுத்து ஓ.பன்னீர்செல்வம் மூலம் தமிழ் தெரியாதோரும் வெளிமாநிலத்தவரும் வெளிநாட்டவரும் கூட தமிழக அரசு பணிகளுக்கு விண்ணப்பிக்கும் சலுகையை அறிவித்தது.
(இதை தமிழ்தேசிய பேரியக்கம் தலைவர் பெ.மணியரசன் கடுமையாக எதிர்த்தது நினைவிருக்கலாம்)

கடந்த ஆண்டில் அரைகோடி பேர் குடிவந்தனர் என்றால் இந்த சலுகை இன்னும் பத்தாண்டுகளில் ஒரு கோடிபேர் குடிபுக வழிசெய்யும்.

மெல்ல மெல்ல தமிழர்கள் இங்கே சிறுபான்மை ஆக்கப்படுவர்.

தாய்நிலத்திற்கு ராணுவ வேலி போடாத இனத்திற்கு அதுதான் நடக்கும்

சில தகவல்களுக்கு நன்றி: நக்கீரன்