Thursday 28 June 2018

தமிழ்நாடு போலீசை அடித்து துவைத்த மலையாளிகள்

தமிழ்நாடு போலீசை அடித்து துவைத்த மலையாளிகள்

இப்படித்தான் பினு என்றொரு மலையாளி தமிழகத்தில் மோசடி செய்துவிட்டு கேரளாவுக்கு தப்பி ஓடிவிட்டான்.

அவனை கண்டுபிடித்து எர்ணாவூர் சென்று கைது செய்து வண்டியில் ஏற்றியபோது அங்கேயிருந்த மலையாளிகள் கூடி "தமிழ்நாடு போலீசுக்கு எங்கள் நாட்டில் என்ன வேலை?" என்று கூறி அவர்களை அடித்து உதைத்து பினுவை விடுதலை செய்துள்ளனர்.

இதை வீடியோ வேறு எடுத்து பெருமையாக உலாவ விட்டனர் மலையாளிகள்.

காயமடைந்த சப்-இன்ஸ்பெக்டர் குமார் தலைமையிலான தனிப்படை போலீஸ் கேரள போலீசில் புகார் செய்யப்போய் அங்கேயும் நாய்க்கு கிடைக்கும் அளவே மரியாதை கிடைத்ததால் தமிழ்நாடு டி.ஜி.பி யிடம் வந்து புகார் செய்தனர்.

டி.ஜி.பி என்ன தமிழனா உடனே நடவடிக்கை எடுக்க?!

இது பற்றி விரிவாக அறிக்கை தயார்செய்து தாருங்கள் கேரள டி.ஜி.பி க்கு அனுப்புகிறேன் என்று கூறிவிட்டார்.

தமிழ்நாடு போலீஸ் நான்கு பக்க அறிக்கை தயார் செய்து கொடுத்துள்ளார்கள்.

சம்பவம் நடந்தது கடந்த 21 ஆம் தேதி.
8 நாளாகியும் பினு மீதோ தாக்கிய நபர்கள் மீதோ கேரள போலீஸ் எந்த நடவடிக்கையும் இல்லை.

கேரள டிஜிபி க்கு அறிக்கை போனாலும் அது குப்பைத்தொட்டிக்குதான் போகும்.

பீரங்கி பிலிம்

பீரங்கி பிலிம்

"சேலத்துக்கு ராணுவ டாங்கி வந்து இறங்கியாச்சு பாத்தீங்கள்ல?"

"எது.....?
போன வருசம் ரஷ்யாவுல நடந்த டாங்கி போட்டில ரெண்டு தடவ ரிப்பேர் ஆகி நின்னதால செருப்பால அடிச்சு வெளிய தள்ளுனானுகளே அந்த பீஷ்மர்-90 டாங்கியா?"

"இல்லைங்க"

"உள்நாட்டுல தயாராகி படைல சேக்குறப்போ இந்திய ராணுவமே காறி துப்பி ஏத்துக்க மறுத்த அர்ஜுன் மார்க் -3 டாங்கியா?"

"இல்லைங்க!
இது பாகிஸ்தானோட சண்ட போட்டு ஜெயிச்ச  T-55 பீரங்கி"

"அந்த பழய பண்ணாசா?!
ஏன்டா இதோட அட்வான்ஸ் வெர்சன் டி-72.
அறுபத்தஞ்சு T-72 கொண்டு போய் ஈழத்தமிழன்ட்ட அடிதானடா வாங்கிட்டு வந்தீங்க?!"

"...?!..."

Tuesday 26 June 2018

இந்தியா - தமிழர்நாடு போர்

இந்தியா - தமிழர்நாடு போர்

ஹிந்தியா நடத்திய போர்களில் அதிகமான உயிரிழப்பைச் சந்தித்த போர்கள்

(1) 1971 பாகிஸ்தானுடன்,
உயிரிழப்பு 3200.

(2) 1965 பாகிஸ்தானுடன்
உயிரிழப்பு 3000.

(3) 1962 சீனாவுடன்,
உயிரிழப்பு 2300.

(4) 1987-1990 தமிழீழத்துடன்,
உயிரிழப்பு 1138.

(தமிழீழம் தமிழர்நாட்டின் ஒரு பகுதி மட்டுமே ஆகும்)

இசுலாமியர் கட்டிய முருகன் கோவில்

இசுலாமியர் கட்டிய முருகன் கோவில்

இசுலாமியர் முருகனை ஏற்பதில்லை என்பாருக்கு...

இஸ்லாமியர் கட்டிய முருகன் கோவிலை பற்றிய செய்தி!

புதுச்சேரியில் உள்ள ஒரு முருகன் கோயிலை கட்டியது இஸ்லாமியர் என்பது எத்தனை பேருக்கு தெரியும்.
சமூக நல்லிணக்கத்திற்கு அடையாளமாக திகழும் அந்த கோயிலைப் பற்றி தற்போது பார்ப்போம்.

புதுச்சேரி ரயில் நிலைய வாயிலின் அருகே உள்ள சாலைக்கு எதிரே அழகாய் அமைந்துள்ளது "கௌசிக பாலசுப்பிரமணியர் திருக்கோயில்".

அழகிய வேலைப்பாடுகளுடன் உள்ள இக்கோயிலை கட்டியவர் மதுரையை பூர்வீகமாக கொண்ட முகமது கௌஸ்.

1940ம் ஆண்டுகளில் அவரது முன்னோர்கள் புதுச்சேரியில் குடியேறிய பின்,கடவுள் முருகன் மீது மிகுந்த பற்று கொண்டதால் முருகன் கோவிலை கட்ட எண்ணியுள்ளார்.

இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர், இந்துக்களுக்கான கோயிலைக் கட்டுவதில் பல்வேறு இடையூறுகளை சந்திக்க வேண்டிவந்தது.
எனினும், கடந்த 1970ம் ஆண்டு டிசம்பர் 14ம் தேதி அன்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பி.டி.ஜாட்டியுடன் சேர்ந்து கோயிலுக்கான அடிக்கல் நாட்டி அனைத்து எதிர்ப்புகளையும் சமாளித்து கோயிலைக் கட்டி முடித்தார் முகமது கெளஸ்.

1977-ம் ஆண்டு கும்பாபிஷேகத்தையும் நடத்தி முடித்தார்.

பின்னர் கோயில் கட்டியவரின் பெயருடன் இணைந்து கௌசிக பாலசுப்பிரமணிய சாமி திருக்கோயில் என பெயர் பெற்று இன்று வரை அழைக்கப்படுகின்றது.
சித்ரா பவுர்ணமி, வைகாசிப் பெருவிழா,கந்தசஷ்டி விழா, கார்த்திகை தீபப் பெருவிழா என வருடம் முழுவதும் இத்திருக்கோயில் மின்னுகிறது.

2003-ம் மரணமடைந்த முகமது கௌஸூக்கு பின் அவரது மகன் முகமது காதர் தற்போது கோயிலை நிர்வகித்து வருகிறார்.

இக்கோயிலுக்கு கடந்த 2002ம் ஆண்டில் இரண்டாவது முறையாக கும்பாபிஷேகம் நடந்த நிலையில் தற்போது 3வது முறையாக கும்பாபிஷேகம் (23.06.2018) நடைபெறவுள்ளது.

மதங்களின் பெயரால் பிரிவினை ஏற்படுத்த முயற்சிப்பவர்களுக்கு எதிராக இன்று உயர்ந்து நிற்கிறது இந்த கௌசிக பாலசுப்ரமணிய கோவில்.

நன்றி: news7

எமது முப்பாட்டன் முருகன் இசுலாமியத் தமிழர் உட்பட தமிழினம் அனைவருக்கும் மூதாதை

தமிழகத்தில் ஒரு மரண ரயில்

தமிழகத்தில் ஒரு மரண ரயில்

மரம் சா மருந்தும் கொள்ளார் மாந்தர்
(நற்றிணை 226)

அதாவது ஒரு மரத்தை சாகடித்து உயிர்வாழாத மனிதர்கள் என்று பொருள்.

அதனாலேயே மர ஆசாரிக்கு 'கொல்லன்' என்று பெயர்.

அத்தகைய சான்றோர் வாழ்ந்த தமிழ்நாடுதானா இது?

முல்லைக்கொடி பற்றி படர தவித்தபோது தன் தேரையே கொடுத்த பாரி பிறந்த இனம்,

* 2 லட்சம் மரங்களை வெட்ட விடுமா?

* 8 பள்ளிகள் 11 கோயில்கள் உட்பட 40,000 வீடுகளை இடிக்க விடுமா?

* 8,000 கிணறுகள், 
36 ஏரிகள்,
64 குளங்கள்,
10,000 ஏக்கர் விளைநிலம்
ஆகியவற்றை அழிக்க விடுமா?

* "புணரி பொருத பூ மணல் அடைகரை
ஆழி மருங்கின் அலவன் ஓம்பி
வலவன் வள்பு ஆய்ந்து ஊர
நிலவு விரிந்தன்றால் கானலானே" (நற்றிணை 11)
என மணலில் ஊறும் நண்டுகள் நசுங்காமல் தேரோட்டச்சோன்ன தலைவன் வாழ்ந்த தமிழ்மண் இது.
இப்போது கரடி, மான், காட்டெருமை, நரி, காட்டுபன்றி உள்ள விலங்குகளும், அரியவகை பறவையினங்களும் வாழும் வீடான 500 ஏக்கர் காட்டை அழிக்க விடலாமா?

* சாலை வசதி தேவை என்றாலும் இந்த மாபாதகங்களைச் செய்யக்கூடாதே?!
தேவையற்ற சாலைக்காக இவற்றை செய்யவிடலாமா?!

* அற்புத மூலிகைகளுடன் எண்ணற்ற காட்டாறுகளுடன் கூடிய 8 மலைகள் சூழ இங்கே குடியிருக்கும் இயற்கைத்தாயை இரண்டு கூறாக அறுத்தபடி செல்லும் இந்த கொழுத்த 8 வழிச்சாலையை வரவிடலாமா?!

* "மன்ற மராஅத்த பேஎமுதிர்க் கடவுள்" என்று குறுந்தொகை கூறுவது போல மரத்தைக் கடவுளாகப் பார்த்த தமிழினம்தானா நாம்?!

* நாய்க்கும் சண்டைச் சேவலுக்கும் நடுகல் நட்டு சிறப்பித்த தமிழினம்தானா நாம்?

* கன்றைக் கொலைசெய்த தன் மகனையே கொன்ற மனுநீதி சோழனின் வாரிசுதானா நாம்?

காளைக்கு ஒரு விழா எடுத்து
மாடு சொரிந்துகொள்ள மாடுரசு கல் நட்டு விலங்குகளை நேசித்து மதித்து வாழும் தமிழினமே!

உன் வீட்டை இடித்து
உன்னைத் துரத்தி
உன் தாய்நிலத்து இயற்கையை அழித்து
உயிர்களையெல்லாம் கொன்று
மண்ணைத் தோண்டித் தின்று
காற்று நீரை  மாசாக்கி
பாலைவனத்தை விட மோசமாக மாற்றிவிட வருகிறான் ஜிண்டால் எனும் சண்டாளன்.
அவனுக்கு சிவப்புக் கம்பளமாக வருகிறது இந்த சாலை.

"சயாம் மரண ரயில்" போல
"சேலம் மரண சாலை" வருகிறது.

கெஞ்சி அழாதே!

போராடு!

இயற்கைக்காக எத்தனை உயிரையும் கொடுக்கலாம்!

போராட்டம் நசுக்கப்பட்டால் வன்முறையில் இறங்கு!

ஏனென்றால் இயற்கைக்காக எத்தனை உயிரையும் கொல்லலாம்!

அரசு ஊழியன் வருவான் அவனை அடித்து விரட்டு!

காவல்துறை வருவான் அவனை அரிவாளால் வெட்டு!

துணை ராணுவம் வரும்போது துப்பாக்கியால் சுடு!

ஹிந்தி ராணுவம் வரும் குண்டெறிந்து கொல்லு!

ஏனென்றால் இயற்கைக்காக எத்தனை உயிரையும் கொல்லலாம்!

பாவமில்லை!

Friday 22 June 2018

தமிழகத்தில் ஒரு மரண ரயில்

தமிழகத்தில் ஒரு மரண ரயில்

மரம் சா மருந்தும் கொள்ளார் மாந்தர்
(நற்றிணை 226)

அதாவது ஒரு மரத்தை சாகடித்து உயிர்வாழாத மனிதர்கள் என்று பொருள்.

அதனாலேயே மர ஆசாரிக்கு 'கொல்லன்' என்று பெயர்.

அத்தகைய சான்றோர் வாழ்ந்த தமிழ்நாடுதானா இது?

முல்லைக்கொடி பற்றி படர தவித்தபோது தன் தேரையே கொடுத்த பாரி பிறந்த இனம்,

* 2 லட்சம் மரங்களை வெட்ட விடுமா?

* 8 பள்ளிகள் 11 கோயில்கள் உட்பட 40,000 வீடுகளை இடிக்க விடுமா?

* 8,000 கிணறுகள், 
36 ஏரிகள்,
64 குளங்கள்,
10,000 ஏக்கர் விளைநிலம்
ஆகியவற்றை அழிக்க விடுமா?

* "புணரி பொருத பூ மணல் அடைகரை
ஆழி மருங்கின் அலவன் ஓம்பி
வலவன் வள்பு ஆய்ந்து ஊர
நிலவு விரிந்தன்றால் கானலானே" (நற்றிணை 11)
என மணலில் ஊறும் நண்டுகள் நசுங்காமல் தேரோட்டச்சோன்ன தலைவன் வாழ்ந்த தமிழ்மண் இது.
இப்போது கரடி, மான், காட்டெருமை, நரி, காட்டுபன்றி உள்ள விலங்குகளும், அரியவகை பறவையினங்களும் வாழும் வீடான 500 ஏக்கர் காட்டை அழிக்க விடலாமா?

* சாலை வசதி தேவை என்றாலும் இந்த மாபாதகங்களைச் செய்யக்கூடாதே?!
தேவையற்ற சாலைக்காக இவற்றை செய்யவிடலாமா?!

* அற்புத மூலிகைகளுடன் எண்ணற்ற காட்டாறுகளுடன் கூடிய 8 மலைகள் சூழ இங்கே குடியிருக்கும் இயற்கைத்தாயை இரண்டு கூறாக அறுத்தபடி செல்லும் இந்த கொழுத்த 8 வழிச்சாலையை வரவிடலாமா?!

* "மன்ற மராஅத்த பேஎமுதிர்க் கடவுள்" என்று குறுந்தொகை கூறுவது போல மரத்தைக் கடவுளாகப் பார்த்த தமிழினம்தானா நாம்?!

* நாய்க்கும் சண்டைச் சேவலுக்கும் நடுகல் நட்டு சிறப்பித்த தமிழினம்தானா நாம்?

* கன்றைக் கொலைசெய்த தன் மகனையே கொன்ற மனுநீதி சோழனின் வாரிசுதானா நாம்?

காளைக்கு ஒரு விழா எடுத்து
மாடு சொரிந்துகொள்ள மாடுரசு கல் நட்டு விலங்குகளை நேசித்து மதித்து வாழும் தமிழினமே!

உன் வீட்டை இடித்து
உன்னைத் துரத்தி
உன் தாய்நிலத்து இயற்கையை அழித்து
உயிர்களையெல்லாம் கொன்று
மண்ணைத் தோண்டித் தின்று
காற்று நீரை  மாசாக்கி
பாலைவனத்தை விட மோசமாக மாற்றிவிட வருகிறான் ஜிண்டால் எனும் சண்டாளன்.
அவனுக்கு சிவப்புக் கம்பளமாக வருகிறது இந்த சாலை.

"சயாம் மரண ரயில்" போல
"சேலம் மரண சாலை" வருகிறது.

கெஞ்சி அழாதே!

போராடு!

இயற்கைக்காக எத்தனை உயிரையும் கொடுக்கலாம்!

போராட்டம் நசுக்கப்பட்டால் வன்முறையில் இறங்கு!

ஏனென்றால் இயற்கைக்காக எத்தனை உயிரையும் கொல்லலாம்!

அரசு ஊழியன் வருவான் அவனை அடித்து விரட்டு!

காவல்துறை வருவான் அவனை அரிவாளால் வெட்டு!

துணை ராணுவம் வரும்போது துப்பாக்கியால் சுடு!

ஹிந்தி ராணுவம் வரும் குண்டெறிந்து கொல்லு!

ஏனென்றால் இயற்கைக்காக எத்தனை உயிரையும் கொல்லலாம்!

பாவமில்லை!

Tuesday 19 June 2018

எதுக்கு தனித்தனியா போராடிக்கிட்டு...

எதுக்கு தனித்தனியா போராடிக்கிட்டு...

பேசாம தனிநாடு கேட்டு போராடிருவோம்கேன்!

நம்ம இனத்த அழிக்க 4,5 பெரிய திட்டம்...
அது போக மாவட்டத்துக்கு ஒரு பிரச்சனை...

ஒவ்வொன்னையும் வெளக்கி.. விவாதிச்சு... புத்தகம் போட்டு... மாநாடு நடத்தி... வழக்கு போட்டு 25 வருசம் இழுத்து... Facebook ல பரப்பி.. twitterல மீம்ஸ் போட்டு ட்ரெண்டாக்கி... youtubeல வீடியோ போட்டு... உண்ணாவிரதம் இருந்து... பேரணி நடத்தி... பொழப்ப விட்டு பல மாசம் போராடி... குண்டடி பட்டு செத்து... பொய் வழக்குல கைதாயி... தற்கொலை பண்ணி... வீரவணக்கம் வச்சி... நிவாரணத் தொகை வாங்கி... தற்காலிக தீர்வு கெடச்சு... அடுத்து பொழுதுவிடிஞ்சா இன்னொரு போராட்டம்.

ச்சை... சொல்லவே மூச்சுவாங்குதே!

எதுக்கு இப்பிடி செத்துசெத்து பொழக்கணும்னேன்?!

எதுக்கு ஆவியையும் சீவனையும் தொலைக்கணும்னு கேக்கேன்?!

நாம தனியா பிரிஞ்சுருவோம்.

தலைவர் வழியில் போய் தனிநாடா ஆயிருவோம்!

ஆமா... தனிநாடு ஆயிட்டா எல்லா பிரச்சனையும் தீந்திருமா?

இது என்ன கேணத்தனமான கேள்வி....?

த பாரு...
பிரச்சனைக்காக இல்லப்பேய்...
இயல்பாவே நாம தனிநாட்டு இனம்தான்.

தமிழனுக்கு தனிநாடு வாங்க தகுதி இல்லன்னா இந்த ஒலகத்துல எவனுக்குமே அந்த தகுதி இல்லப்பூ...

அப்படியே அண்ணந்தம்பியா இருந்தாலும் ஒத்துவரலனா பாகப்பிரிவினை பண்ணவேண்டியதானே?!

அதானப்பு நாயம்..?!

தனிநாடானா இப்ப இருக்குற பிரச்சனையெல்லாம் 99% தீந்துரும்.

இந்த பிரச்சனை போய் வேற பிரச்சனை வந்தா ...

அத வரும்போது பாப்போம்.

TNPSC தேர்வு எழுதிய வடமாநிலத்தாருக்கு சாதகமான வினாத்தாள் கிடைத்தது

TNPSC தேர்வு எழுதிய வமாநிலத்தாருக்கு சாதகமான வினாத்தாள் கிடைத்தது

TNPSC தேர்வு முடிவுகள் வரவுள்ள நிலையில் இது பற்றி அறிவோம்

குரூப் 4 தேர்வு எழுதிய வடமாநில இளைஞர்கள்!- வெடிக்கும் சர்ச்சை

தமிழகத்தில் நடந்த குரூப் 4 தேர்வில், மத்தியப்பிரதேசம் மற்றும் அஸ்ஸாம் மாநிலத்தை பூர்வீகமாகக்கொண்ட இளைஞர்கள் தேர்வு எழுதிய சம்பவம் சர்ச்சைக்குள்ளாகி யிருக்கிறது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், குரூப் 4 பணிகளுக்கான தேர்வை ஞாயிற்றுக்கிழமை நடத்தியது.
சுமார் 10 ஆயிரம் பணியிடங்களுக்கு நடந்த இந்தத் தேர்வை எழுத, 20 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். 

இதில், தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் மட்டுமல்லாமல் வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்களும் அடங்குவர்.

வெளிமாநிலத்தவர், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில் பங்கேற்க அனுமதித்த தமிழக அரசின் நடவடிக்கைக்கு வைகோ உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில், 157 தேர்வு மையங்களில் 39,906 பேர் குரூப் 4 தேர்வு எழுதினார்கள்.
இதில், ராமேஸ்வரத்தை அடுத்துள்ள தங்கச்சிமடத்திலுள்ள அரசு உதவிபெறும் பள்ளி ஒன்றில் நடந்த குரூப் 4 தேர்வில், மத்தியப்பிரதேசம் மற்றும் அஸ்ஸாம் மாநிலங்களைச் சேர்ந்த 5 இளைஞர்கள் பங்கேற்றனர்.

இணையதளத்தின் வழியாக விண்ணப்பித்திருந்த, தமிழ்மொழி தெரியாத இவர்கள், ஆங்கிலத்தில் தேர்வை எழுதியுள்ளனர்.

தமிழகத்தைச் சேர்ந்த லட்சக்கணக்கானோர் படித்துவிட்டு வேலை கிடைக்காத நிலையில், பொறியியல் பட்டதாரிகள்கூட துப்புரவுப் பணிக்கு விண்ணப்பிக்கும் அவல நிலை உள்ளது.

இந்நிலையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் அடிப்படை பணிகளுக்கான தேர்வுகளில் வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்களை அனுமதித்தது வேலையில்லா தமிழக இளைஞர்களையும், அவர்களது பெற்றோர்களையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

16.02.2018
விகடன்
-------------

`யாருக்காக நடந்தது டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்வு?'
- தமிழக மாணவர்களைத் தவிக்க வைத்த வினாத்தாள்

தமிழக அரசுத் துறைகளில் காலியாக இருக்கும் வி.ஏ.ஓ பதவி உள்பட 9,351 பணியிடங்களுக்கான தேர்வு நேற்று நடந்தது.

`வடமாநிலத்தவர்கள் மட்டுமே பயன் அடையும் வகையில் வினாத்தாள் அமைந்துவிட்டது.
மத்திய அரசின் திட்டங்கள்தான் இடம் பெற்றிருக்கிறதே தவிர, தமிழர் நாகரிகம், பண்பாடு குறித்தெல்லாம் எந்தக் கேள்வியும் இடம்பெறவில்லை' எனக் குமுறுகின்றனர் கல்வியாளர்கள்.

ஒவ்வோர் ஆண்டும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தேர்வுகள் அறிவிக்கப்படும்போது, லட்சக்கணக்கான மாணவர்கள் விண்ணப்பிப்பது வழக்கம்.
இந்த ஆண்டு குரூப் 4 தேர்வுக்கான அறிவிக்கை வெளியானபோது, யாரும் எதிர்பாராத வகையில் 20,69,000 பேர் விண்ணப்பித்தனர்.
டி.என்.பி.எஸ்.சி வரலாற்றிலேயே இந்த அளவுக்கு விண்ணப்பங்கள் வந்து சேர்ந்ததில்லை என்று சொல்லும் அளவுக்கு குவிந்தன.

நேற்று நடந்த இந்தத் தேர்வில் 17,52,000 பேர் எழுதினர்.
கடந்த ஆண்டுகளைப்போல் அல்லாமல் முற்றிலும் மாறுபட்ட தளத்தில் வினாத்தாள் அமைந்திருந்ததைத் தேர்வர்கள் எதிர்பார்க்கவில்லை.
குறிப்பாக, ராமநாதபுரம் மாவட்டத்தில், 157 தேர்வு மையங்களில் 39,906 பேர் குரூப் 4 தேர்வை எழுதினார்கள்.

இதில், ராமேஸ்வரத்தை அடுத்துள்ள தங்கச்சிமடத்திலுள்ள அரசு உதவிபெறும் பள்ளி ஒன்றில் நடந்த குரூப் 4 தேர்வில் மத்தியப்பிரதேசம் மற்றும் அஸ்ஸாம் மாநிலங்களைச் சேர்ந்த ஐந்து இளைஞர்கள் பங்கேற்றனர்.
தமிழ் மொழி தெரியாத இவர்கள், ஆங்கிலத்தில் தேர்வை எழுதியுள்ளனர்.

வடமாநிலத்தவர்கள் திரண்டு வந்து தேர்வு எழுதியதைத் தமிழ் ஆர்வலர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
"தமிழ்மொழியை அறியாத இவர்கள், வி.ஏ.ஓ உள்ளிட்ட தேர்வுகளில் வெற்றி பெற்றால் தவறான முன்னுதாரணம் ஆகிவிடும்.
மாநிலத்தின் மொழிகளைப் பேசுபவர்களுக்கே அரசுப் பணிகளில் முக்கியத்துவம் தர வேண்டும்.
'டி.என்.பி.எஸ்.சி விதிகளில் மாற்றம் கொண்டு வர வேண்டும்' எனக் குரல் கொடுத்தும் ஆட்சியாளர்கள் கண்டுகொள்ளவில்லை.
தமிழர்களைப் புறக்கணிக்கும் ஒன்றாகவே இதைப் பார்க்க முடிகிறது" என்கின்றனர் வேதனையோடு.

"அரசுப் பணி கனவுடன் குரூப் 4 தேர்வுக்குத் தயாராகிவந்த லட்சக்கணக்கான கிராமத்து இளைஞர்களை வஞ்சித்திருக்கிறது தேர்வாணையம்.
தமிழக அரசுத் துறைகளில், தமிழ்நாட்டில் இருக்கும் பணிகளுக்கான போட்டித்தேர்வில், தமிழ்நாடு பற்றிய கேள்விகள் முற்றிலுமாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளன.
இந்திய சுதந்திரப் போராட்டம் (இந்திய விடுதலை இயக்கம்) தொடர்பாக ஒரு வினாகூட இல்லை.
அறிவுத் திறன் (aptitude test) பகுதியில், கணிதப் பாடத்துக்கு வெளியே கேள்விகளே இடம்பெறவில்லை.
இவற்றையெல்லாம்விடக் கொடுமை, தமிழக வரலாறு, தமிழர் நாகரிகம், தமிழர் கலைகள், பண்பாட்டு சின்னங்கள் பற்றி எந்தக் கேள்வியும் கேட்கப்படவில்லை.
தமிழக ஆறுகள், வளங்கள், தொழில்கள், தமிழ்நாட்டுப் பிரச்னைகள் பற்றிய எந்த வினாவும் இல்லை.
கிராம நிர்வாக அலுவலர் பணிக்கும் சேர்த்துதான் இந்தத் தேர்வு நடத்தப்பட்டது.
ஆனால், கிராமப்புற நிர்வாகம் பற்றிய கேள்விகளும் கேட்கப்படவில்லை"
என வேதனையோடு பேசுகிறார் கல்வியாளர் பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி.

தொடர்ந்து நம்மிடம் விவரித்தார்.
"இந்தத் தேர்வில் அப்படி என்னதான் இருக்கிறது என்று பார்த்தாலும் அதிர்ச்சியே மிஞ்சுகிறது. 'இந்தியா - மாலத்தீவு இடையிலான ராணுவ ஒத்திகைக்கு என்ன பெயர்' ;
'இந்திய விமானப்படையிலிருந்து கழற்றிவிடப்பட்ட ஊர்தியின் பெயர் என்ன' ;
'2017 அக்டோபரில் டெல்லியில் தொடங்கப்பட்ட நிறுவனம் எது'
இத்துடன், பல்வேறு யோஜனாக்கள் அறிவிக்கப்பட்ட ஆண்டுகள் குறித்த கேள்விகள் இடம்பெற்றுள்ளன.
இந்த வினாத்தாளை அப்படியே அச்சுப் பிசகாமல் ஏதேனும் ஒரு வட இந்திய மாநிலத்தில், வினாத்தாளாக வைத்திருந்தால் மதிப்பெண்களை அள்ளியிருப்பார்கள்.
அரசு நிர்வாகத்துக்கு யார் வர வேண்டும் என்பதைவிடவும் யார் வரக் கூடாது என்பதை மனதில் வைத்தே வினாத்தாள் தயாரிக்கப்பட்டுள்ளதாகத்தான் தெரிகின்றன.
அறிவியல், கணிதப் பகுதிகளில் நேரடியாகப் பள்ளிப் புத்தகங்களிலிருந்து வந்த வினாக்கள் மட்டும்தான் சற்று ஆறுதலை அளித்துள்ளன.
ஆனால், பொது அறிவுப் பகுதியைக் கிராமப்புற மாணவர்கள் எதிர்கொள்ள முடியாத அளவுக்குக் கேள்விகள் வந்துள்ளன.
குறிப்பாக, முதல் தலைமுறைப் பட்டதாரி இளைஞர்களை, அரசுப்பணிப் பக்கம் வரவிடாமல் விரட்டுகின்ற முயற்சியாகவே பார்க்க முடிகிறது.
மிக நன்றாகத் திட்டமிட்டுத் துல்லியமாகத் தேர்வு நடத்துவதில் அபாரமான நிர்வாகத் திறமையை வெளிப்படுத்தியுள்ள தேர்வாணையம், வினாத்தாள் அமைப்பதில் இந்த அளவுக்குச் சறுக்கியது ஏன்?
இப்படியொரு வினாத்தாளை வடிவமைத்தன் மூலம், தமிழக கிராமப்புற இளைஞர்களுக்கு மிகப் பெரிய அநீதி இழைத்திருக்கிறார்கள் என்றே தோன்றுகிறது.
பொதுப் பாடப் பகுதியில் மட்டுமல்ல; மொழித் தாளிலும்கூட, ஒருவிதத் தவறான அணுகுமுறை தெரிகிறது.
விடையை நோக்கி இட்டுச் செல்வதாக வினா அமைய வேண்டும் என்பது பொது விதி.
ஆனால், சில வினாக்கள் வடிவமைக்கப்பட்டிருக்கும் விதம் (the structuring of the question) நகைப்புக்கு உரியதாக இருக்கிறது.
நடப்பு நிகழ்வுகள் பகுதியில், நாம் அதிகம் அறிந்திராத, தமிழ் நாளிதழ்களில் அதிகம் இடம் பெறாத செய்திகளைத் ‘தேடித் தேடி’ கேட்டிருக்கிறார்கள்.
ஏன் இந்த அநீதிப் போக்கு?  நகர்ப்புற இளைஞர்களில் யாருக்கெல்லாம் இணையம் வழியாகச் செய்திகளை வாசிக்கின்ற வழக்கம் இருக்கிறதோ அவர்களால் மட்டுமே சில வினாக்களுக்கு விடை அளிக்க முடியும்.
ஒவ்வொரு வினாவும் அது வடிவமைக்கப்பட்டுள்ள விதத்தையும் முழுமையாகப் பார்த்தால், கிராமத்து இளைஞர்கள் எந்த அளவுக்கு வஞ்சிக்கப்பட்டுள்ளார்கள் என்பது தெளிவாகத் தெரியும்" என்றார் வேதனையோடு.

விகடன்
(12.02.2018)

Saturday 16 June 2018

பேரறிவாளன் செய்த தவறு

பேரறிவாளன் செய்த தவறு

இதே பேரறிவாளன் ராஜீவ் காந்தியை உண்மையிலேயே கொலைசெய்தவர் என்றால்,
சிறையில் சகல உரிமைகளும் சலுகைகளும் பெற்று பத்தே ஆண்டுகளுக்குள்  வெளிவந்திருப்பார்.

வேண்டுமானால் பிற அரசியல் கொலைகாரர்கள் அடைந்த தண்டனையை திருப்பிப் பாருங்கள்.

ஆனால், ஜனநாயக வழியில் போராடுவோர் மீதும் ஏதுமறியா அப்பாவிகள் மீதும் வன்முறையும், பொய்வழக்கும், குண்டர் சட்டமும், தேசத்துரோக வழக்கும், அரசுக்கெதிராக போர் தொடுத்த குற்றச்சாட்டும் சுமத்தப்படும்.

சிறையில் அடியும் உதையும் பல்வேறு அவமானங்களும் சட்ட சிக்கலும் வந்து வாய்க்கும்.

வெளியே வந்தால் மாவோயிஸ்ட், நக்சலைட், தீவிரவாதி, ரவுடி என்ற பட்டத்துடனே பல்வேறு தொந்தரவுகளுடன் வாழவும் வேண்டும்.

ஒரு ஆயுதப் போராளிக்கு கிடைக்கும் சலுகையும் உதவியும் அங்கீகாரமும் ஒரு ஜனநாயகப் போராளிக்கும் கிடைக்காது.

ஏதுமறியா அப்பாவிகளுக்கோ ஏறெடுத்துப் பார்க்க ஆளிருக்காது.

ஆயுதப் போராளிக்கோ ஊடகங்களும், மனித உரிமை அமைப்புகளும், வளர்ந்துவரும் கட்சிகளும், இளைஞர்களும் பக்கபலமாக இருப்பார்கள்.

வேண்டுமானால் பிடிபட்ட அல்லது சரசடைந்த ஆயுதப் போராளிகள் வரலாற்றினைப் புரட்டிப் பாருங்கள்.

இதுதான் நடைமுறை உண்மை!

ஆயுதம் தூக்கியவர்களை சுட்டுக் கொல்வார்கள் என்றால் அறவழி போராட்டம் நடத்துபவர்களும் அதற்கு விதிவிலக்கில்லை.

ஆக எது சிறந்த வழி என்பதை முடிவு செய்யுங்கள்.