Monday 30 October 2017

முதுகுளத்தூர் கலவரம் - மறைக்கப்பட்ட உண்மைகள்

முதுகுளத்தூர் கலவரம்
- மறைக்கப்பட்ட உண்மைகள்

இமானுவேல் சேகரனார்
படுகொலை செய்யப்படும்வரை 90% பள்ளர்களுக்கு அவர் யார் என்றே தெரியாது.

இமானுவேல் சேகரனார் பற்றி வந்த ஆகச்சிறந்த புத்தகத்தில் அவர் வரலாறு வெறும் பத்து பக்கத்தைத் தாண்டவில்லை.
அவர் எப்படி பள்ளர்களின் தலைவர் ஆவார்?

1957ல் முதுகுளத்தூர் கலவரத்திற்கு முன்பே இரண்டு பள்ளர்களை தேர்தலில் நிற்கவைத்தவர் தேவர்.
(ஒருவர் வென்றார், ஒருவர் தோற்றார்)

சமாதான கூட்டத்தில் தேவர் இமானுவேலார் சாதியைக் காரணம் காட்டி கையெழுத்திட மறுத்ததாகக் கூறுவதில் துளியளவும் உண்மை கிடையாது.
அந்த தொகுதி எம்.எல்.ஏ தான் கையெழுத்திடவேண்டும்  என்று கூறினார்.
காரணம் பள்ளர்களுக்கு யாரென்றே தெரியாத ஒரு இளைஞரை விட ஒரு பள்ளரான அப்பகுதி எம்.எல்.ஏ கையெழுத்திட்டால் சரியாக இருக்கும் என்பது அவர் வாதம்.

தேவர் கையெழுத்து போடாததால் சமாதானம் முயற்சி தோல்வியடைந்தது என்பது முழுப்பொய்.
தேவர் முதலில் மறுத்தாலும் பிறகு இமானுவேலாரை பிரதிநிதியாக ஏற்று கையெழுத்தும் போட்டுவிட்டார்.
( முத்துராமலிங்கத்தேவர் என்பதுதான் அவர் பெயர்.
கையெழுத்தும் அவ்வாறே போடுவார் ).

அந்த சமாதான அறிக்கை மறுநாள் வெளிவர இருந்தது.
அது வெளிவரக்கூடாது என்பதற்காக நேருவின் உளவுத்துறை அன்றே இரவில் மின்சாரத்தை துண்டித்து  இமானுவேலாரைக் கொலை செய்து பழியை தேவர் மீது போட்டது.
தேவரை சிறைக்குள் அடைத்து ஸ்லோ பாய்சன் கொடுத்து வெளியேவிட்டது.
(ஜெயலலிதாவை இவ்வாறுதான் மத்திய அரசு கொன்றது).
இதனால் ஆரோக்கியமாக கம்பீரமாக இருந்த தேவரையா விரைவாக உடல்நலம் குன்றி இளம் வயதிலேயே மரணமடைந்தார்.

நேருவை இயக்குவது இஸ்ரேல் என்று உண்மையை போட்டுடைத்த,
நேதாஜி உயிரோடு இருக்கிறார் என்று கூறிவந்த,
காந்தியை கொன்ற சவார்க்கருக்கு பாராட்டும் ரூ.5000 பொன்முடிப்பும் வழங்கிய,
காங்கிரசுக்கு எதிரான அத்தனை சக்திகளையும் ஒன்றுதிரட்டிய
மிகப்பெரிய ஆளுமையான தேவர் ஒழிந்ததால் நேரு நிம்மதி அடைந்தார்.
இதற்காக அவர் பட்டபாடு கொஞ்சநஞ்சமல்ல.

சமாதான கூட்டத்தில் 'ஒரு பள்ளப்பய எனக்கு சமமா! அவன் நாளைக்கு இருக்கக்கூடாது' என்று தேவர் கூறியதாக பள்ளர் மத்தியில் உளவுத்துறையால் வதந்தி பரப்பப்பட்டது.
(இத்தனைக்கும் தேவரோடு வந்த 2பேரில் ஒருவர் பள்ளரான வேலு குடும்பன் ஆவார்).

தேவர் நுழைந்தபோது இமானுவேலார் கால்மேல்கால் போட்டபடி மரியாதை இல்லாமல் சிகரெட் பிடித்துக்கொண்டு உட்கார்ந்தே இருந்ததாகவும்,
பேச்சுவார்த்தை முடிந்ததும் தேவரிடம் ஒரு தாம்பலத்தில் வெற்றிலை பாக்கு வைத்து நீட்டி மறவர் பெண்ணை தனக்கு இரண்டாம் தாரமாக திருமணம் செய்து தருமாறு கேட்டதாகவும் மறவர் மத்தியில் வதந்தி பரப்பட்டது.
(இமானுவேலார் அப்படியெல்லாம் செய்யவில்லை.
எம்.எல்.ஏ வரமுடியாத சூழல் என்று மரியாதையுடன் எடுத்துக்கூறினார்.
தொலைபேசியில் பேசவைத்ததாகவும் கூறுகின்றனர்)

நேருவின் உத்தரவின்பேரில் மறவர் கிராமமான கீழத்தூவலில் ரே எனும் வடயிந்தியர் தலைமையிலான போலீஸ்படை நுழைந்து ஐந்து இளைஞர்களை அழைத்துப்போய் கண்மாய் கரையில் வைத்து கண், கை, கால்களை கட்டி சுட்டுக்கொன்றது.
இது சுதந்திர இந்தியாவில் தமிழகத்தில் நடந்த முதல் படுகொலை ஆகும்.
இது காமராசர் போலீசை அனுப்பி மறவர்களைக் கொன்றதாகக் காட்டி மறவருக்கு எதிராக நாடார்களையும் கலவரத்தில் இறக்க எடுத்த முயற்சி ஆகும்.

இந்த யோசனைகளை நேருவுக்கு வழங்கியது அண்ணாதுரை.
உளவுத்துறைக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கியது தி.மு.க வந்தேறிகள்.
காரணம் தெலுங்கு சின்னமேளம் எனும் தேவதாசி சாதியைச் சேர்ந்த அண்ணாதுரை தனது குலத்தொழிலான விபச்சாரத் தொழிலை செய்துவந்ததை தேவர் மதுரையில் ஒரு பொது இடத்தில் அவரை வைத்துக்கொண்டே அம்பலப்படுத்தினார்.

தேவருடன் இணைந்து காங்கிரசை எதிர்த்த ஈ.வே.ராமசாமியும் ராஜாஜி பதவி விலகி காமராசர் வென்றதும் அவருடன் போய் சேர்ந்துகொண்டு தேவருக்கு எதிராக காமராசரை தூண்டியபடி இருந்தார்.

(ராஜாஜி தேவருடன் போய் இணைந்தார்.
ஆதித்தனாரும் தேவருடன் இணைந்தார்)

எவ்வளவோ முயற்சிகளுக்குப் பிறகும் இரண்டு ஆண்டுகள் கழித்து இமானுவேலார் கொலையில் தேவருக்கு பங்கில்லை என்று அவர் 1959ல் விடுதலை செய்யப்பட்டார்.

கலவரமும் கொலையும் நடந்தபிறகும் கூட, தேவரையா ஐந்து ஆண்டுகள் கழித்து 1962 தேர்தலில் ஒரு பள்ளரை நிறுத்தி வெல்லவைத்தார்.
தொகுதிக்கே போகாமல் தானும் வெற்றிபெற்றார்.

சாகும்போது தனது சொத்துகளை மக்களுக்கு எழுதிவைத்தார்.
அதில் 1/3 பங்கு பள்ளர்களுக்கு கிடைத்தது.

இறுதிவரை தேர்தலில் தோல்வியே காணாத தேவர் பள்ளர்கள் கணிசமாக வாழ்ந்த தொகுதியில்தான் மாபெரும் வெற்றிகளை பெற்றார்.

ஒருவேளை பள்ளர் வாக்குகளைக் கவர பிற்காலத்தில் இப்படி மாறியிருக்கலாம் என்கிறார்கள் சிலர்.
ஆனால் இருபது ஆண்டுக்கு முன்பே 1939லேயே மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் வைத்தியநாத ஐயர் மற்றும் (பறையரான) கக்கனுடன் இணைந்து பல பட்டியல் சாதிகளைச் சேர்ந்த மக்களைத் திரட்டி ஆலயநுழைவு நடத்தியவர் தேவர்.

3 அல்லது 4 இடங்களில் மட்டுமே போட்டிபோடும் தேவர் கட்சி அதில் பல சாதியினரையும் நிற்கவைத்தது வரலாறு.

இத்தகைய வரலாறு கொண்ட தேவர் எப்படி சாதிவெறியர் ஆவார்?

தேவரை நாடார்களுக்கு எதிரானவராக சிலர் திரிக்கிறார்கள்.
காமராசரை முதலமைச்சர் ஆவதற்கு தேவர் உடன்படாத காரணம் அவர் படிக்காதவர், இனப்பற்று இல்லாதவர், நேரு குடும்பத்திற்கு விசுவாசமானவர் என்பதால்தான்.
மற்றபடி காமராசர் வளர்ச்சியில் தேவருக்கு குறிப்பிட்ட பங்குண்டு.

காமராசரை முக்குலத்தின் எதிரியாக சிலர் திரிக்கின்றனர்.
தேவர் காலத்தில் காமராசருடன் காங்கிரசில் அவருக்கு பக்கபலமாக பல முக்குலத்தோர் இருந்தனர்.
வணங்காமுடி வைரவத்தேவர், கோபால்சாமி தென்கொண்டார், புதுக்கோட்டை தொண்டைமான், வேதாரண்யம் வேதாசலத்தேவர், திருச்சி அருணாசலத்தேவர், ஆர்.வி.சாமிநாதன், உடையப்பா சிவசுப்பிரமணியத்தேவர், மதுரை சின்னக்கருப்பத்தேவர், என்.எஸ்.வீரபத்திர தேவர், இராமநாதபுரம் சண்முகராஜேசுவர சேதுபதி,  அருப்புக்கோட்டை துரைசிங்கத்தேவர், முன்னாள் சபாநாயகர் செல்லப்பாண்டியன், சங்குமுத்து தேவர், டி.என்.அனந்தநாயகி, சாண்டோ சின்னப்பத்தேவர், நடிகர் சிவாஜிகணேசன் போன்றவர்கள் காமராஜருக்கு ஆதரவான முக்குலத்தோர் ஆவர்.

ஆக அன்று நடந்தது இரண்டு கட்சிகளுக்கு இடையேயான மோதல்தான்.
சாதி மோதல் கிடையாது.

அன்று தேவர் சரி.
ஆனால் இன்று மறவர்கள் சரி இல்லை.

தேவர் படத்தை வைத்துக்கொண்டு பள்ளர்களுக்கு எதிராக வெறிபிடித்து அலைவோர் தேவருக்கே களங்கம் கற்பிக்கும் துரோகிகள்.

திராவிடத்தின் சாதிய அரசியலுக்கு பலியாகி இன்று மறவர்களே தேவருடைய கொள்கைகளுக்கு மற்ற எவரையும் விட எதிராக செயல்படுகின்றனர்.

தேவர் தனக்கு குருபூசை கேட்டதும் இல்லை.
தேவர் எளிமையானவர். புகழ்ச்சியை விரும்பாதவர்.
அவரை கடவுள் போல பெரிதாக விழா எடுத்து கொண்டாடவேண்டிய அவசியமும் இல்லை.

தேவர் இறந்து பல ஆண்டு கழித்து தேவருக்கு சிலை நிறுவியதும் குருபூஜை நடத்தவைத்ததும் திராவிட வந்தேறிகள் தமிழர்களை மோதவிட்டு சாதிய அரசியல் செய்யத்தான்.

தேவர் ஒரு மனிதர்.
மாமனிதர். கடவுள் இல்லை.

ஒரு தலைவருக்கு என்ன மரியாதை உண்டோ அதைச் செய்வதில் தவறில்லை.

தேவர் குருபூசை அதற்கு போட்டியாக இமானுவேல் சேகரன் குருபூசை என்று குருபூசைகளின் பெயர்களில் இன்று நடக்கும் கூத்தும் அட்டூழியமும் அலப்பறையும் சாதிவெறியின் வெளிப்பாடு என்பது கண்கூடு.

இன்று குருபூசையில் தேவர் படத்தை சட்டையில் போட்டுக்கொண்டு மூக்குமுட்ட குடித்துவிட்டு நடுரோட்டில் போக்குவரத்தை மறித்து அரிவாள்களுடன் கூட்டமாக கும்மாளம் போடும் இளைஞர்களுக்கு தேவருடைய வாழ்க்கை வரலாறு பற்றி கடுகளவாவது தெரியுமா?

தேவரின் முகம் ஒன்றும் சாதிவெறியின் சின்னம் இல்லை.
ஆனால் இன்று நடைமுறை என்ன?

பள்ளர்கள் பெரிய தகுதி இல்லாத இமானுவேல் சேகரனாரை தூக்கிப்பிடிப்பதையும் அவருக்கு குருபூஜை நடத்துவதையும் கைவிடவேண்டும்.
தேவரையே தலைவராக ஏற்கவும் வேண்டும்.
இதைச் செய்யாத பள்ளர்கள் நன்றிகெட்டவர்கள்.

முக்குலத்தோர் தேவருக்கு குருபூஜை நடத்துவதைக் கைவிடவேண்டும்.
அமைதியான முறையில் அவரவர் ஊர்களில் பலசாதி மக்களுக்கும் தேவர் பற்றி எடுத்துக்கூறி பொதுவான விழாவாக சிறிய அளவில் கொண்டாடவேண்டும்.

தேவர்தான் மேற்கண்ட இரு சமூகத்துக்கும் தலைவர்.
ஏன் தமிழர் அனைவருக்கும் தலைவர்.
ஏன் இந்தியா முழுவதுக்குமான தலைவர்.

இந்தியன் மறந்துவிட்டான்.
தமிழர்கள் மறக்கவில்லை.
மறக்கும்படி செய்யாதீர்கள்.

குருபூசை எனும் பெயரில் நடிகர்களையும் கட்டப்பஞ்சாயத்து ரவுடிகளையும் திராவிட கட்சிகளின் அல்லக்கைகளையும் கூட்டி பெரிய அலப்பறை கொடுத்து பிற தமிழர்கள் தேவரை வெறுக்கும்படி செய்யாதீர்கள்.

தமிழர்களே! தமிழகம் முழுவதும் கிராமம் தோறும் சாதி வேறுபாடு இன்றி தேவர் புகைப்படத்தை வைத்து அவரது பிறந்தநாளைக் கொண்டாடுவோம்.

தேவர் நடத்திய பத்திரிக்கைக்கு கண்ணகி என்றுதான் பெயர்வைத்தார்.
சிந்துசமவெளி நாகரிகம் தமிழருடையது என்றும் தமிழின் சிறப்புகள் பற்றியும் எழுதியுள்ளார்.
தன் வாழ்நாளில் வள்ளலார் வழியை கடைபிடித்துவந்தார்.
உடல்நிலை முடியாத நிலையிலும் ம.பொ.சி நடத்திய எல்லை போராட்டத்தில் கலந்துகொண்டு பேசியும் உள்ளார்.
பர்மா போய் தமிழர்களைச் சந்திக்கும்போது அந்நாட்டு அதிபருக்கு திருக்குறள் நூலை பரிசாக அளித்தார்.
மலையகத் தமிழரை சந்தித்துவிட்டு தமிழகம் வந்தபோது இலங்கை தமிழர்கள் விரைவில் சுதந்திரத்திற்காகப் போராடுவார்கள் என்று அன்றே கூறியுள்ளார்.

ஆக தேவர் ஒரு இனப்பற்றுள்ள தமிழர். அதனால் பெருந்தமிழர் என்ற பட்டத்திற்கு தகுதியானவர்.

வைக்கம் ஆலயநுழைவு போராட்டத்தில் கட்சி பணத்தில் பத்தோடு பதினொன்றாக போய்விட்டு வந்து வைக்கம் வீரர் பட்டம் போட்டுக்கொண்ட,
கீழ்வெண்மணி படுகொலை கூலி உயர்வு கேட்டதால்தான் நடந்தது என்று அறிக்கைவிட்ட,
பறையரை கேவலமாக தொடர்ந்து பேசிவந்த,
ஆங்கிலேயருக்கு கடைசிவரை விசுவாசமாக இருந்த
கன்னட வந்தேறி ஈ.வே.ரா நமக்கு தலைவராம்.

ஆனால் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் தொழிலாளருக்கும் முழு இந்திய மக்களுக்கும் இறுதிமூச்சுவரை நன்மை செய்துவந்த நாட்டுப்பற்றாளர், இனப்பற்றாளர், கொடைவள்ளல், தியாகி முத்துராமலிங்கனார் சாதிவெறியராம்.

ஆக ஈ.வே.ராமசாமியை தூக்கி எரிந்துவிட்டு அந்த இடத்தில் முத்துராமலிங்கத் தேவனாரை வைத்துக் கொண்டாடுவது தமிழர் நம் அனைவரின் கடமை ஆகும்.

Sunday 29 October 2017

குறிஞ்சாக்குளம் காந்தாரி

குறிஞ்சாக்குளம் காந்தாரி

மகாபாரதத்தில் வரும் காந்தாரி
காந்தாரா(Ghandhara) நாட்டைச் சேர்ந்தவள்.
இது காஸ்மீரை ஒட்டிய இன்றைய பாகிஸ்தானின் வடபகுதி.

இன்றைய ஆப்கானிஸ்தானின் கந்தஹார்(kandahar).
இதன் பழையபெயர் இஸ்கந்தரியா(iskandariya).

ஈரான் நாட்டின் தென்பகுதியில் பாகிஸ்தான் எல்லையை ஒட்டி குறிஞ்ச்(kurinch) என்ற ஊரும் உள்ளது.

(25 ஜனவரி 2016 அன்று முகநூல் பதிவாக இட்டது)

Saturday 28 October 2017

தலைநகரை மீட்டதே நாடார்தான்

தலைநகரை மீட்டதே நாடார்தான்

சென்னையில் நாடார்கள் ஆதிக்கம் பற்றி பேசுபவர்கள்,
"மதராஸ் மனதே" என்று தெலுங்கர் சென்னையை விழுங்க முழு பலத்துடன் களமிறங்கியபோது
"தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்" என்று முழங்கி தமிழர்களைத் திரட்டி திருத்தணி வரை தமிழ்நாடு ஆக்கிய ம.பொ.சி ஒரு நாடார் என்பதை மறக்கவேண்டாம்.

தலைநகரில் முழு மாநிலத்திற்கும் உரிமை உண்டு.

அத்துடன் சென்னையில் வெளிமாநிலத்தாரின் ஆதிக்கத்திற்கு முன் தெற்கத்தி தமிழர்களின் ஆதிக்கம் ஒன்றுமேயில்லை.

வேற்றினத்தாரை விரட்ட வக்கில்லாமல் சக தமிழனை விரட்டுவது கோழைத்தனம் ஆகும்.

Friday 27 October 2017

காவிரி மேலாண்மை அமைக்கும் ஐடியா இல்லை - ஹிந்திய அரசு

தமிழகம்:-

எசமான்! இறுதி தீர்ப்புன்னீங்க! 

 அதுவந்து பல வருசம் ஆகுது.

மேலாண்மை வாரியம் அமைச்சு நடைமுறை படுத்துங்கையா!

காவிரி இல்லாம விவசாயம் பாதி அழிஞ்சுபோச்சு.

45 வருசமா வழக்கு நடக்குது ஆனா நியாயம் கெடைக்கல.

எங்கள ஏறெடுத்து பாருங்க எசமான்.

 பிள்ள குட்டியோட பட்டினியா கெடக்கோம்.


ஹிந்திய அரசு:-

இறுதி தீர்ப்பாவது?! 

நடுவர் மன்றமாவது?!

மேலாண்மையாவது?!

ஹெ ஹெ ஹெ ஹெ

போங்கடா போக்கத்த தமிழனுகளா!

காவிரிய தெறந்து விட்டா நாங்க எப்படி மணல் அள்ளி, மீத்தேன் எடுத்து, நிலக்கரி எடுத்து பணக்காரன் ஆகிறது?

எவ்வளவு திமிர் இருந்தா குடிக்க தண்ணி கேப்ப?!

டேய் சத்ரியா இவன் வீட்ட ரெண்டா ஒடச்சு வடக்க பாதி நீ எடுத்துக்க.


தமிழகம்: ?!!?


(செய்தி: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் திட்டம் இல்லை 

தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் மத்திய அரசு அதிர்ச்சி தகவல்)

Thursday 26 October 2017

அமெரிக்க இனங்கள்

அமெரிக்க இனங்கள்

(பேசுவது பலவகை ஆங்கிலம்)

இதன்படி ஜெர்மானிய-அமெரிக்கர் (German American) அமெரிக்காவின் மிகப்பெரிய இனம் ஆவர்.
மொத்த மக்கட்தொகையில் 15%.

இது ஆங்கில அமெரிக்கரை (8%) விட ஏறத்தாழ இருமடங்கு ஆகும்.

Wednesday 25 October 2017

இரண்டாக அறுப்போம்

இரண்டாக அறுப்போம்

வடதமிழ்நாடு பற்றி பெரிதாக விவாதிக்கவேண்டிய தேவையில்லை.

ஒரு குறிப்பிட்ட சாதியினர் வட மாவட்டங்களில் 20%.
(35% என்பார்கள் ஆனால் அதில் 15% வேறொரு சாதி.
அச்சாதி மேற்கண்ட சாதிவெறிக்கோ கட்சிக்கோ ஆதரவளிப்பது கிடையாது)
இந்த 20 சதவீதத்தில் குறிப்பிட்ட கட்சியைச் சேர்ந்த சாதிவெறியர்களே (அந்த சாதியில் வெறும் 10%) இதை பெரிய பிரச்சனை ஆக்குகிறார்கள்.

இத்தனைக்கும் அந்த கட்சியே தனிமாநில கோரிக்கை கைவிட்டுவிட்டது.
தமிழ்தேசிய பாதைக்கும் திரும்பிவருகிறது.

மற்றபடி வட மாவட்டங்களில் 98% பேர் தமிழ்நாட்டை உடைப்பதற்கு ஆதரவு தருவதில்லை.

மேற்கண்ட சாதிவெறியர்கள் இணையத்தில் சாதி அடையாளத்துடன்,
தென் மாவட்ட தமிழர்களின் சாதியை இழுத்து திட்டுவார்கள்.
பதிலுக்கு நாம் அந்த சாதியைத் திட்டுவோம்.
இவ்வாறாக அந்த 20% பேரை சாதிவெறியின் மூலம் ஒருங்கிணைப்பதே இவர்களின் நோக்கம்.

இவர்களில் யாருமே மரியாதையாக பேசவும் மாட்டார்கள்.
வடதமிழ்நாடு அமைய வேண்டிய தேவையை எடுத்துசொல்லவும் மாட்டார்கள்.
எடுத்த எடுப்பிலேயே சாதிவெறியுடன் கெட்டவார்த்தையில் திட்டுவதிலிருந்தே இது புரிகிறது.

எதிரிகளைக் கூட மன்னித்து விடலாம்.
ஆனால் தமிழ் மண்ணைத் துண்டாட நினைப்பவர்களை மன்னிக்கக்கூடாது.
  அவர்களை நமது தமிழர்நாட்டு இராணுவம் துரோகி என அறிவித்து பிடிபட்டால் உயிருடன் இரண்டாக அறுக்கும் தண்டனையை நிறைவேற்றவேண்டும் (அது வெளியே தெரியக்கூடாது).

Sunday 22 October 2017

மலபார் என்பது தமிழே

மலபார் என்பது தமிழே

கி.பி.1779 இல் மலபார் பாஷை என்று அழைக்கப்பட்ட தமிழ்.

கி.பி.1650 - 1800 ஆண்டுகளில் இலங்கைக்கும் தமிழகத்திற்கும் வந்த அமெரிக்க ஐரோப்பிய பாதிரியார்கள் பைபிளை தமிழில் மொழிபெயர்த்துக் கொண்டுவருவதற்கு பெரும்முயற்சிகளை எடுத்துக் கொண்டனர்.

ஆசிய மொழிகளிலேயே தமிழ்மொழியில்தான் முதல்முதலாக பைபிள் மொழிபெயர்க்கப்பட்டது என்பது உங்களுக்கெல்லாம் தெரியும்.

அத்தகைய முயற்சிகளில் ஒன்றாக தமிழ்ச்சொற்களை சேகரிக்கும் வேலையை செய்தனர்.

தமிழ்மொழியை ”மலபார்மொழி” என்றழைத்தனர்.
அந்தக் காலகட்டத்தில் தமிழ்மொழியில் முதன்முதலாக வெளியிடப்பட்ட அகராதியில் ஒன்றை உங்கள் பார்வைக்கு பதிவிடுகின்றேன்.

குறிப்பு மேல்நாட்டினர்தான் தமிழ்மொழிக்கு அச்சுகலையும் தமிழ் அச்சு எழுத்துக்களையும் உருவாக்கித் தந்தனர்.
அவ்வாறு முதல்முதலாக உருவாகிகொண்டிருந்த அச்சு எழுத்துக்கள் மரக்கட்டைகளில் செய்தவையாக இருந்தன.
அத்தகைய மரக்கட்டை அச்சு எழுத்துக்களில்தான் இந்தநூல் அச்சிடப்பட்டுள்ளது.

பதிவர்: Vel Samy
---------------

மேலும் சில விபரங்கள்,

1577 ல் கிறித்துவ மிஷினரி அம்பலக்காடு (பாலக்காடு மாவட்டம்) அச்சகத்தில் அச்சடித்த முதல் மலையாள நூல் அம்மொழியை மலவார் அல்லது தமிழ் என்கிறது (கால்டுவெல் குறிப்பு).

1679 செப்டம்பரில் கண்டியில் இருந்து தப்பி அனுராதபுரம் வந்த நாக்ஸ் (Knox) என்ற ஆங்கிலேயர் அந்த அனுபவம் பற்றி எழுதிய Captivity and escape of Captain Knox என்ற புத்தகத்தில் மல்வத்து ஓயா ஆற்றைக் கடந்து (தமிழில் அருவி ஆறு) அனுராதபுரத்தை நோக்கி சென்ற போது அங்கே மலபார்கள் (தமிழர்கள்) குடியிருந்ததாகவும்,
தான் பேசிய சிங்களம் அம்மக்களுக்குப் புரியவில்லை என்றும் பதிவுசெய்துள்ளார்.

ஆக, மலபார் (அல்லது மலவார்) என்று தமிழே அழைக்கப்பட்டது என்பது உறுதியாகிறது.

படம்: தமிழும் இங்கலேசுமாயிருக்கற அகராதி
A Malabar and english dictionary
english missinaries madras
first edition 1779
printed vapery

கேட்காமலே விடுதலை கிடைக்கும்

கேட்காமலே விடுதலை கிடைக்கும்

மண்ணழிப்புக்கு அடுத்த அடி எடுத்துவைத்தது மத்திய கார்ப்பரேட் அரசு.

கல்வியைத் தொடர்ந்து விவசாயம் மத்திய அரசு கட்டுப்பாட்டுக்கு போகிறது.

மாநில அரசின் மிச்ச சொச்ச உரிமையும் பறிபோகவுள்ளது.

இனி விவசாய தற்கொலைகள் கூடும்.
விளைவதை எல்லாம் தேசப்பற்று என்ற பெயரில் ஹிந்தியன் அள்ளிக்கொண்டு போய்விடுவான்,
அதாவது ஹைட்ரோகார்பன் நம் வயல்களை அழிக்கும்வரை.

30 ஆண்டுகளில் தமிழகம் பஞ்சத்தில் சிக்கும்.

இதை எழுதிவைத்துக் கொள்ளுங்கள்.

அதன்பிறகு நாம் இன்னொரு சோமாலியா ஆவோம்.

நாமே கேட்காவிட்டாலும் நமக்கு விடுதலை கொடுத்து வெளியே துரத்திவிடுவார்கள்.

முகநூலில் தமிழ்தேசியவாதிகள் நாங்கள் கதறும் இந்த கடைசி தருணத்திலாவது விழியுங்கள் தமிழர்களே!

நாம் வலுவாய் இருக்கும் இந்த நேரத்தில் ஆயுதம் தூக்கி விடுதலைக்காப் போராடாவிட்டால் பிழைக்கமாட்டோம்.

Thursday 19 October 2017

அரசியலும் திரைத்துறையும்

அரசியலும் திரைத்துறையும்

திராவிடத்தின் காலம் முடிந்துவிட்டது.
வெற்றிடம் உருவாகிவிட்டது.

ஹிந்தியர், வடுகர், தமிழர் மூவரும் காய்நகர்த்துவது தொடங்கிவிட்டது.

இது அனைத்து துறைகளிலும் நடக்கிறது.

உலகத் தமிழர்களை ஒரே நேர்க்கோட்டில் இணைக்கும் இரண்டு விடயங்கள் தமிழ்மொழி மற்றும் பிரபாகரன் எனும் பெயர் என்பார் அண்ணன் சீமான்.

மூன்றாவதும் ஒன்று இருக்கிறது.
அதுதான் தமிழ் திரைத்துறை.

இதில் திறமையும் உழைப்பும் பெரும்பாலும் தமிழருடையது.
(அதாவது இயக்கம், வசனம், இசை, தொழில்நுட்பம், சண்டைப் பயிற்சி)

புகழும் பணமும் பெரும்பாலும் வந்தேறிகளுக்கு
(தயாரிப்பு, நடிப்பு, நிதி, வெளியிடல்)

இதிலே வடுகம் முதலில் களமிறக்கிய தெலுங்கர் விஜயகாந்த் புத்தி பேதலித்துவிட்டதால் தோல்வியடைந்தார்.
ஆனாலும் வடுகம் திறமையாக காய்நகர்த்தி அசல் தெலுங்கர் விசாலை தலைமைக்கு உயர்த்தி தமிழ் சினிமாவை ஒழிக்க என்னவெல்லாம் செய்யவேண்டுமோ எல்லாம் செய்கிறது. 
தனுஷ், ஜெயம் ரவி போன்ற தெலுங்கர்களை முன்னணிக்கு கொண்டுவந்தது.
நன்கு வளர்ந்துவந்த தமிழர் சந்தானத்தை வீழ்த்தி அந்த இடத்தில் தெலுங்கன் சிவகார்த்திகேயனை கொண்டுவந்தது
அதற்கடுத்து தெலுங்கர் சமுத்திரகனி, கன்னடர் ஹிப்ஹாப் ஆதி, தெலுங்கர் விஜய் சேதுபதி என அடுத்தடுத்த வாரிசுகளை உருவாக்கி வைத்துள்ளது.
(இதில் ஆதி சல்லிக்கட்டு போராட்டத்தில் அம்பலப்பட்டு விட்டார்).
தமிழருக்காக குரல் கொடுத்த சத்யராஜை மன்னிப்பு கோரவைத்தது,
ஒரு நடிகை தண்ணீர் பிச்சை எடுப்பவர்கள் என தமிழரை பேசவைத்தது,
தற்போது மெர்சல் பேனர்களை கிழித்தது என கன்னடர் வெளிப்படையான இனவெறுப்பையும்
தெலுங்கர் மறைமுகமான இனவெறுப்பையும் காட்டிவருகின்றனர்.
ஆந்திரா உடைந்தபோது இறங்கியிருந்த தெலுங்கரின் திமிர் பாகுபலி வந்ததும் மீண்டும் கூடிவிட்டது.

தமிழ்தேசியம் முதல் அடியே பேரடியாக சீமானை களத்தில்  இறக்கியது.
இளைய தலைமுறை மத்தியில் அரசியலை கைப்பற்றி வருகிறது.
(இங்கே தமிழர் முருகதாஸ் எடுத்து தமிழர் சூர்யா நடித்த ஏழாம் அறிவு படத்தை இந்த இடத்தில் குறிப்பிடலாம்)
அமீர், பாரதிராஜா போன்ற இயக்குநர்களையும் அவ்வப்போது குரல் கொடுக்க வைத்து கருத்துக் களத்தில் இறக்கியது.
(அதையும் ஒரு தமிழனான ரஞ்சித்தை வைத்தே குழப்பியது ஹிந்தியம்).
பாதி தெலுங்கரான டி.ஆர் மற்றும் அவரது மகன் சிம்பு அவ்வப்போது தமிழர்களுக்காக குரல் கொடுக்கிறார்கள்.

மிக மொக்கையாக காய்நகர்த்திய ஹிந்தியம் மராத்தியன் ரஜினியை முன்னிறுத்தியது.
அவன் களத்திலும் இறங்காமல் சும்மாவும் இருக்காமல் பம்மாத்து காட்டிவருகிறான்.
(அவன் குடும்பத்தை ஏற்கனவே வடுகம் வளைத்துவிட்டது).
பிறகு தமிழரான கங்கை அமரனை இறக்கியது.
அதுவும் தோல்வியில் முடிந்தது.

கடைசியாக திராவிடம் கன்னடன் கமலஹாசனை களத்தில் இறக்கியது.
இந்த இடத்தில் திராவிடம் சறுக்கிவிட்டது.

இந்த சரியான நேரத்தில் தற்போது தமிழ்தேசியம் தமிழர்களான அட்லி மற்றும் ரகுமானுடன் அதிரடியாக தமிழரான விஜயை களத்தில் இறக்கியுள்ளது.

விஜய் இதுவரை தமிழர்களுக்காக குறிப்பிடும் அளவில் எதையும் செய்யாதவர் என்றாலும் அடிப்படை தமிழ் உணர்வு உள்ளவர்.
இனத்திற்கு எதிரானவர் கிடையாது.
ஆக தமிழ்தேசியத்தின் திரைப்பட அடையாளமாக உருவெடுக்க அவர் எல்லாவிதத்திலும் பொருத்தமானவர்.
மலையாளி அஜித்தின் போட்டியை மிக அழகாக சமாளித்து ஒரு படி மேலே நிற்பதே விஜயின் வெற்றிக்குக் காரணம்.

அரசியலும் திரைத்துறையும் மிக நெருக்கமானது.
தெலுங்கர் கருணாநிதி, தெலுங்கர் விஜயகாந்த், மலையாளி எம்.ஜி.ஆர், கன்னடர் ஜெயலலிதா என பலர் திரைத்துறையில் அடைந்த புகழ் மூலமாக அரசியலுக்கு வந்தவர்கள்தான்.

விஜய் இந்த முறை ஓரளவு வெற்றிதான் அடையமுடியும்.
தொடர்ந்து தமிழ்தேசிய சிந்தனையை ஒட்டியவாறு பயணித்தால் குறுகிய காலத்தில் தமிழ்த் திரைத்துறையின் உச்சத்தைத் தொடலாம்.

அரசியலில் அவர் நேரடியாக இறங்குவது அவசியமற்றது என்றே கூறுவேன்.