Friday 30 June 2017

ஏன் தடியடி?

ஏன் தடியடி?

வயல்வெளி மத்தியில் எரிவதை பார்க்க வந்த மக்களை அடித்து விரட்டியது ஏவல்துறை.

சோறு போட்ட மண்ணுக்கு நாம் கொடுக்கும் பரிசா?

பற்றி எரிகிறது கதிராமங்கலம்.

சாம்பலாகப் போகிறது தமிழினம்.

கதிராமங்கலைட்

கதிராமங்கலைட்

மோதல் அரசுக்கும் மக்களுக்கும் இடையே

அரசாங்கம் தடி, துப்பாக்கியுடன் ஒரு ஆயுத படையை இறக்கும்போது
மக்கள் அரிவாள், நாட்டு வெடிகுண்டுடன் ஒரு படையை ஏன் இறக்கக்கூடாது?

நக்சல்பாரி கிராமம் நக்சலைட்களை உருவாக்கியது போல
கதிராமங்கலைட் ஏன் உருவாகக்கூடாது?

கூடன்குளம் போல உண்ணாவிரதம், அடைப்பு, மறியல் என்று நடத்தத் தொடங்கினால் காலங்காலமாக நடத்திக்கொண்டே இருக்கவேண்டியதுதான்.
பக்கத்து ஊரான் கூட வரமாட்டான்.

வங்காளத்தில் தொடங்கிய நக்சல்பாரி தீயாக பரவி இயக்கமாக வளர்ந்து இன்று 2 லட்சம் நக்சலைட்டு சிப்பாய்களுடன் ஒரிசா, சத்தீஸ்கர், ஜார்கண்ட் மாநிலங்களில் 200 மாவட்டங்களில் காடும் ஊருமாக 60,000 சதுர கி.மீ சுதந்திர பூமியாக தனி அரசாங்கத்தை நடத்துகிறது.

அம்மக்களின் இயற்கை வளங்களை சுரண்ட ஹிந்திய அரசும் அதை இயக்கும் கார்ப்பரேட் முதலாளிகளும் தொடர்ந்து அத்தனை வழிகளிலும் முயன்று வருகின்றனர்.

மாவோயிஸ்ட்டுகள் அரசாங்கத்தால் என்றழைக்கப்படும் நக்சலைட்டுகள் தீர்வை எட்டியதாகக் கூறமுடியாது.
ஆனால் மக்களை அவர்களின் நிலத்தை அதன் வளங்களை அரசு மூலமாக வரைமுறையின்றி கொள்ளையடிப்பதை தடுத்து நிறுத்தியுள்ளனர்.
பெருமுதலாளிகள் மண்ணை அழித்து தன் சுவிஸ் கணக்கில் சில நம்பர்களாக மாற்ற பெரும் தடையாக இருக்கிறார்கள்.

அதற்கு முன்பு இருந்த இயக்கங்களும் புத்தகங்களும் போராட்டங்களும் கட்சிகளும் சாதிக்காத ஒன்றை சாரு மஜூம்தாரும் அவரது சிறிய குழுவும் அவர்கள் வைத்திருந்த ஆயுதமும் சாதித்தன.

கம்யூனிசமோ பிரபாகரனிசமோ அரச பயங்கரவாதத்திற்கு ஒரே தீர்வு மக்கள் எடுக்கும் ஆயுதம்தான்.

திருப்பி அடியுங்கள்!
அப்போதுதான் பக்கத்து ஊரான் மட்டுமின்றி உலகமே உங்களைத் திரும்பிப்பார்க்கும்.

கண்ணீர் கதைகளை பரப்பி ஒப்பாரி வைக்காதீர்கள்.
இது புத்தரும் காந்தியும் மனுநீதிச் சோழனும் வாழும் நாடு இல்லை.

போராடுவது என்பது கோசம் போடுவது அல்ல!
போர் புரிவதுதான் !

140 தமிழக மீனவர்கள் தெலுங்கரால் சிறைபிடிப்பு! பணயத்தொகை கேட்டு மிரட்டல்!

விசைப்படகில் மீன்பிடிக்க சென்ற தமிழக மீனவர்கள் 140 பேர் ஆந்திராவில் மீண்டும் சிறைபிடிப்பு

2017-06-30@ 00:21:44

காசிமேடு: ஆந்திர எல்லையில் மீன்பிடிக்க சென்ற சென்னை மீனவர்கள் 140 பேர், மீண்டும் ஆந்திராவில் சிறை பிடிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள், கடலுக்குள் விசை படகுகளில் மீன்பிடிக்க செல்வது வழக்கம்.
கடந்த 25ம் தேதி 140 மீனவர்கள் 13 விசைபடகுகளில் மீன்பிடிக்க சென்றனர்.
தமிழக, ஆந்திர கடல் எல்லையான கிருஷ்ணாம்பட்டினம், மண்ணூர், கிருஷ்ணாபுரம் ஆகிய கடல் பகுதியில்தான் மீன்பிடிப்பது வழக்கம்.
இவ்வாறு மீன்பிடிக்க சென்றவர்கள், கரை திரும்பவில்லை.
இதனால், அவர்களது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.
இந்நிலையில், காசிமேட்டில் உள்ள சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் விசைபடகு மீனவர் சங்கத்துக்கு, தொலைபேசியில் ஆந்திர மீனவர்கள் தொடர்பு கொண்டனர்.

அவர்கள், கடந்த 25ம் தேதி, விசைபடகுகளில் கடலில் வலையை விரித்து மீன்களுக்காக காத்திருந்தபோது, அவர்களை ஆந்திர மீனவர்கள் சுற்றி வளைத்தனர்.
‘எங்கள் கடல் பகுதியில் நீங்கள் மீன் பிடிக்க கூடாது’ என கூறி, காசிமேடு மீனவர்ளை சிறைபிடித்து வைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மேலும், தமிழக மீனவர்கள் சென்ற 13 படகுகளையும் பிடித்து வைத்துக்கொண்ட அவர்கள், தலா படகுக்கு ₹2 லட்சம் கொடுக்க வேண்டும் என நிபந்தனை விடுத்துள்ளனர்.
இதனால், காசிமேட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதைதொடர்ந்து, ஆந்திராவில் சிறைபிடிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை மீட்க மீன்வளத்துறை அதிகாரிகள், மீனவர் சங்கங்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

நன்றி: தினகரன்

மஞ்சள் முடி ஆரியர்

மஞ்சள் முடி ஆரியர்
-×÷-×÷-×÷-×÷-×÷-×÷-×÷-×÷-×÷-

ஆரியரின் வர்ணம் அதாவது உடல் நிறம் பற்றி வேதங்கள் கூறும் குறிப்புகளைப் பார்ப்போம்.

ஆரியர் என்ன நிறமாக இருந்தனர் என்பதை அவர்கள் தமது கடவுளரை வர்ணிப்பதில் இருந்து கணிக்கமுடியும்.
அதாவது எந்த மக்களும் தாம் வணங்கும்  கடவுளை தமது உருவமாகவே சித்தரிப்பார்கள் அல்லவா?!
இதை 'யதன்னம் புருஷோ ஹ்யத்தி, ததன்னம் தஸ்ய தேவதா' என்று ரிக் வேதமும் கூறுகிறது.
--------------
'மஞ்சள் நிறத் தாடியுடன், வெண்ணிற பற்களுடன், ஈடிணையற்ற மாபெரும் பலசாலியாவார்' (5-7-7)
என்று 'இஷ்' எனும் முனிவர் ரிக் வேதத்தில் அக்னிதேவனின் தாடியை வர்ணிக்கிறார்.

'அவர் மஞ்சள் நிற மீசை தாடியும், கூந்தலும் கொண்டு பாறையைப் போல திடமானவர்'
'நாங்கள் அந்த அற்புத வேகங்கொண்ட பச்சை, மஞ்சள் முடியுடைய ஒளிமயமான அக்னியை புதிய செல்வம் வேண்டி தொழுகிறோம்' (10-16-8)
என்று 'வரு' வர்ணிக்கிறார்.
-------------
'பொன்னிறக் கூந்தலுடையவர், மேகங்களைச் சிதறடிக்கும் புயலைப்போன்ற வேகமுடையவர்' (1-79-1)
என்று கோதம்-ராஹூ வர்ணிக்கிறார்கள்.

அதாவது பொன்னிற கூந்தலும் (அதாவது மஞ்சள் நிறத்தில் பளபளப்பான) மீசையும் தாடியும் 'ஹரிகேசம்' அல்லது 'ஹிரண்ய கேசம்' என்று கூறப்படுகிறது.
------------
'இவ்விதம் மஞ்சள் வண்ணமுடையோனான இந்திரன் நல்ல வரவேற்புக்கு உரியவர்' (6-29-6)
என்று பரத்வாஜர் வர்ணிக்கிறார்.
-------------
'விதிப்படி தெற்குநோக்கி கூந்தலை முடிந்துகொள்ளும் வெள்ளைநிற வசிஷ்ட இனத்தவர் என்னை மகிழ்விக்கின்றனர்' (7-33-1)
என்று வசிஷ்டர் தமது இனத்தைப் பற்றி கூறுகிறார்.

அவரே மற்றொரு இடத்தில் 'சுயமாகவே வலிமை படைத்த சூரியனைப் போன்ற சருமஸ் (நிறம்) கொண்ட 'மருத்' தேவர்களே' என்று 'மருத்' எனும் தேவர்களை விளிக்கிறார்.
------------
'நீ அபாலாவை சூரிய ஒளி போன்ற சருமத்தினள் ஆக்கினாய்' (8-80-7)
என்று 'அபாலா' எனும் பெண் தனது தோல் நோயை நீக்கி பழையபடி இந்திரன் ஆக்கியதை நன்றியுடன் கூறுகிறாள்.
------------
'தேவனே! எமக்கு வெண்ணிறமான நீடூழி வாழும் வேகங்கொண்ட தெய்வ பக்தனான வீரக் குழந்தையை அருள்வாயாக!' (23-10)
என்று கிருத்ஸமத் எனும் ரிஷி வேண்டுகிறார்.
------------
அதாவது ஆரியர்கள் வெள்ளை அல்லது சிறிது மஞ்சள் கலந்த வெள்ளை நிறமாகத் தோல் உள்ளவர்கள்.
அதோடு மஞ்சள் நிற முடி உள்ளவர்களாக இருந்துள்ளனர்.

'வெண்மை நிறம், புனித ஆசாரத்தைப் பின்பற்றுதல், தாமிர வண்ண, மஞ்சள் நிறக் கூந்தல் ஆகியவை பிராமணர் என்பதற்கான அடையாளங்கள்'
என்று ரிக் வேதகாலத்திற்கு ஐந்நூறு ஆண்டுகள் கழித்து பிராமணர் உருவம் பற்றி 'மகா பாஷ்யம்' எனும் நூலில் (2-2-6) பதஞ்சலி கூறுகிறார்.

தகவல்களுக்கு நன்றி: 'ரிக் வேத கால ஆரியர்கள்'
_ ராகுல சாங்கிருத்தியாயன்
__________________________

மேற்கண்ட சாயலில் ஒரு உருவத்தை பாகிஸ்தான் தாண்டி ஈரான் ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில்கூட இன்று பார்க்கமுடியாது.
ஐரோப்பாவில்தான் பார்க்கமுடியும்.
(பார்க்க: வரைபடம்)
அதனால்தான் ஆங்கிலேயர் தமது நுழைவை நியாயப்படுத்த ஆரிய நுழைவு கருத்தியலை கொண்டுவந்தனர்.

ஆனால் தமிழ் பூசாரிகளான பார்ப்பனரை அவர்கள் மற்ற தமிழர்களை விட கொஞ்சம் நிறமாக இருப்பதை வைத்து ஆரியர்களுடன் திரிக்கிறார்கள்.
என்றால் உடல் நிறத்தை விட மிக முக்கியமான அடையாளமாக கூறப்படும் மஞ்சள் முடி என்ன ஆனது?

மூன்று தலைமுறைக்கு முன்பு தமிழகத்திற்கு குடிவந்த மார்வாடிகள் கூட கருப்பாக ஆகிவிடுகிறார்கள்.

அப்படி இருக்கும் போது 3500 ஆண்டுகளாக இங்கே பார்ப்பனர் அதே நிறத்துடன் எப்படி இருக்கமுடியும்?

பார்ப்பனரின் நிறம் அவரது தொழிலின் காரணமாக வந்தது.
ஈரானுக்கு வந்தேறிய ஐரோப்பிய முன்னோர்களான ஆரியருக்கும்
தமிழர்களான பார்ப்பனருக்கும் 1% கூட குருதிவழி தொடர்பு கிடையாது.
வடயிந்திய பிராமணர் மற்றும் உயர்சாதி மக்களுக்கு வேண்டுமானால் 5% வரை தொடர்பிருக்கலாம்.
ஆனால் ஆங்கிலேயர் வரும்வரை ஹிந்தியாவுக்கு அடிபணியாமல் தனியரசு செலுத்திய தமிழகத்தின் எந்த மக்களோடும் ஆரிய தொடர்பிருக்க வாய்ப்பேயில்லை.

இது பொதுமையான அறிவு கொண்டு சிந்தித்தாலே அனைவருக்கும் புரியும்.

முன்னேறிய சமூகமான பார்ப்பனர் மீது பிற தமிழ்ச்சாதிகள் கொண்ட பொறாமையை வந்தேறிகள்  பயன்படுத்திக்கொண்டனர்.
ஆங்கிலேயர் தந்திரத்தை கடன்வாங்கி தமிழினத்திற்குள் ஊடுறுவி திராவிடம் எனும் பெயரில் தாம் ஆள வழிசெய்து கொண்டனர்.

வீழ்ந்தது பார்ப்பனர் மட்டுமல்ல!
தமிழர் அனைவரும்தான்!

பார்ப்பனர் தமிழரே!

Thursday 29 June 2017

தமிழ்தேசியம் இந்த உலகிற்கு வைக்கும் முழக்கம்தான் என்ன?

தமிழ்தேசியம் இந்த உலகிற்கு வைக்கும் முழக்கம்தான் என்ன?

பொதுவாக தேசியவாதம் வைக்கும் அதே முழக்கம்தான்.

அதாவது இனம், மொழி, நாடு மூன்றும் ஒன்றாக இருக்கவேண்டும்.

தமிழ், தமிழர், தமிழர்நாடு !

மொழியால் தமிழன்!
இனத்தால் திராவிடன்!
தேசியத்தால் இந்தியன்!
என்று கூறுவது பச்சோந்தித்தனம் ஆகும்.

தமிழர்நாடு பச்சோந்திகளை ஒழித்துக்கட்டி ஒருநாள் விடுதலை அடையும்.
விடுதலை என்பது வல்லாதிக்கத்தின் அடிமை அமைப்பான ஐ.நா வழங்கும் அங்கீகாரம் கிடையாது.
ஐ.நா இனப்படுகொலைக்கு துணைபோகிறதே ஒழிய நியாயத்திற்காகப் போராடுவதில்லை.

விடுதலை என்பது வலிமையான இராணுவத்தால் பாதுகாக்கப்பட்ட நிலமும் அதில் மக்கள் விரும்பும் தலைமையும் ஆகும்.

பிற விடுதலையடைந்த நாடுகள்போல தமிழர்நாடானது
விடுதலை அடைந்து,
தன்னிறைவு பெற்று,
வல்லரசாக உயர்வதோடு நின்றுவிடக்கூடாது.

இந்த உலகத்தின் அடக்கப்பட்ட பூர்வகுடிகளை விழிப்படையச்செய்து மொழிவழி நாடுகளாக இந்த உலகையே மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

பெரிய நாடுகளையெல்லாம் துண்டுதுண்டாக உடைக்கவேண்டும்.

தமிழர்நாட்டின் வழிநடத்துதலால் விடுதலை அடைந்த நாடுகள் தமிழர்நாட்டுடன் ஓரணியில் நின்று தன்னிறைவு பெற்று வல்லரசாகி இந்த உலகமாற்றத்திற்கு உதவவேண்டும்.

உலகில் அடக்கப்படும் தேசிய இனங்கள் அனைத்திற்கும் தமிழர்நாடும் அதன் கூட்டணி நாடுகளும் சேர்ந்து விடுதலை பெற்றுத்தரவேண்டும்.

  நாம் ஹிந்தியாவை உடைப்பதில் இருந்து தொடங்கலாம்.

உலகில் வல்லாதிக்கத்தால் அடக்கியாளப்பட்ட நாடுகள் விடுதலை அடைந்த பிறகும் எழமுடியாமல் கிடக்கின்றன.
ஆனால் சுரண்டிய இனங்கள் இன்றளவும் வாழ்வாங்கு வாழ்கின்றன.

இது தொடரக்கூடாது!

தமிழர் இராணுவம் இதைப் பார்த்துக்கொண்டு சும்மாயிருக்கக்கூடாது!

விடுதலை பெற்றுத்தருவதோடு நில்லாது நாம் சுரண்டப்பட்ட செல்வத்தையும் பறித்து நட்ட ஈடு பெற்றும் தரவேண்டும்.

முதலில் நாம் விடுதலை அடைவோம் பிறகு மற்றவை தன்னால் நடக்கும்.

Friday 23 June 2017

கேரளத்தின் குப்பைத் தொட்டி ஆகிறதா தமிழகம்?

திருநெல்வேலி போலீஸ்கார் எனக்கு ஒரு சந்தேகம்...?

விழிஞ்ஞம் துறைமுகம் மற்றும் திருவனந்தபுரம் நகரம் ஆகிய இடங்களில் இருந்து கழிவுகளைக் கொண்டுவந்து திருநெல்வேலிக்குள் விவசாய நிலங்களுக்கு அருகில் சாலையோரம் இரவோடு இரவாக கொட்டிவிட்டு
திரும்பும்போது அரிசி, காய்கறி, இறைச்சி ஏற்றிக்கொண்டு போகும் மலையாள டிரைவர்களை

பிச்சைக்காசு 100, 200 வாங்கிக்கொண்டு தமிழகத்தின் உள்ளே விட்டு....
தப்பித்தவறி அந்த லாரியை பொதுமக்கள் பிடித்தால் பஞ்சாயத்து பண்ணி அவனைக் காப்பாற்றி....
அவன் கழிவைக் கொட்டிவிட்டு லாரியை சர்வஸில் சுத்தம் செய்யவிட்டுவிட்டு உயர்தர லாட்ஜில் குற்றாலத்தில் தங்கும்போது
அவனுக்கு குடி குட்டி எல்லாம் சப்ளை செய்து....
அதிலும் குட்டி யாரும் கிடைக்கவில்லை என்றால் தன் வீட்டுப்பெண்களை அனுப்பி அவனை திருப்திபடுத்தி...
மறுபடி அவன் போகும்போது காலைத்தொட்டு கும்பிட்டு 100, 200 பிச்சை வாங்கிக்கொண்டு...
பாதுகாப்பாக கேரளா அனுப்பும் திருநெல்வேலி போலீஸ்காரர்களும்
பலமுறை புகாரளித்தும் கண்ணவிந்து கைசெத்துக் கிடக்கும் திருநெல்வேலி கலெக்டரும்
மலையாளிகளா? அல்லது மலையாளிக்கு பிறந்த வேசிமகன்களா?

க்ளு:
லாரிகளில் குவியும் மருந்து, இறைச்சி கழிவுகள் :
கேரளத்தின் குப்பைத் தொட்டி ஆகிறதா தமிழகம்?

- தினகரன் (2017-06-11)

திருநெல்வேலி போலீஸ்கார் எனக்கு ஒரு சந்தேகம்...?

திருநெல்வேலி போலீஸ்கார் எனக்கு ஒரு சந்தேகம்...?

விழிஞ்ஞம் துறைமுகம் மற்றும் திருவனந்தபுரம் நகரம் ஆகிய இடங்களில் இருந்து கழிவுகளைக் கொண்டுவந்து திருநெல்வேலிக்குள் விவசாய நிலங்களுக்கு அருகில் சாலையோரம் இரவோடு இரவாக கொட்டிவிட்டு
திரும்பும்போது அரிசி, காய்கறி, இறைச்சி ஏற்றிக்கொண்டு போகும் மலையாள டிரைவர்களை

பிச்சைக்காசு 100, 200 வாங்கிக்கொண்டு தமிழகத்தின் உள்ளே விட்டு....
தப்பித்தவறி அந்த லாரியை பொதுமக்கள் பிடித்தால் பஞ்சாயத்து பண்ணி அவனைக் காப்பாற்றி....
அவன் கழிவைக் கொட்டிவிட்டு லாரியை சர்வஸில் சுத்தம் செய்யவிட்டுவிட்டு உயர்தர ஓட்டலில் குற்றாலத்தில் தங்கும்போது
அவனுக்கு குடி குட்டி எல்லாம் சப்ளை செய்து....
அதிலும் குட்டி யாரும் கிடைக்கவில்லை என்றால் தன் வீட்டுப்பெண்களை அனுப்பி அவனை திருப்திபடுத்தி...
மறுபடி அவன் போகும்போது காலைத்தொட்டு கும்பிட்டு 100, 200 பிச்சை வாங்கிக்கொண்டு...
பாதுகாப்பாக கேரளா அனுப்பும் திருநெல்வேலி போலீஸ்காரர்களும் திருநெல்வேலி கலெக்டரும்
மலையாளிகளா? அல்லது மலையாளிக்கு பிறந்த வேசிமகன்களா?

க்ளு:
லாரிகளில் குவியும் மருந்து, இறைச்சி கழிவுகள் :
கேரளத்தின் குப்பைத் தொட்டி ஆகிறதா தமிழகம்?

- தினகரன் (2017-06-11)

தமிழக எல்லைக்கற்களை பிடுங்கி வீசி கேரள எம்.பி அட்டூழியம்

கம்பம்மெட்டில் தொடரும் பதற்றம் தமிழக எல்லைக்கற்களை பிடுங்கி வீசி அட்டூழியம்
கேரள எம்.பி ஆதரவாளர்கள் அத்துமீறல்

இருமாநில குழு சர்வே செய்து போனமாதம் நட்ட 14 எல்லை கற்களை ரகசியமாகப் பார்வையிட்டார் எம்.பி ஜோய்ஸ் ஜார்ஜ் 

பிறகு இன்று அந்த 14 கற்களையும் பிடுங்கி எறிந்தனர் எம்.பி ஜோய்ஸ் ஜார்ஜ் ஆதரவாளர்கள்.

செய்தி: தினகரன் 23.06.2017

தேனி மாவட்டத்தை விழுங்க நினைக்கும் மலையாளிகள்,
என்ன செய்யப்போகிறோம் நாம்?

தொடரியில் ஒரு அமளி

தொடரியில் ஒரு அமளி

நடு இரவில் தொடரியில் உறங்கிக்கொண்டிருந்த என்னை யாரோ எழுப்பினார்கள்.
விழித்துப் பார்த்தேன் புகையிலையை குதப்பியபடி அந்த தொடரியின் ஏகபோக உரிமையாளரான பயணச்சீட்டு பரிசோதர் நின்றுகொண்டிருந்தார்.

"டிக்கெட்"
எதோ 'மாமூல எடு' என்று தள்ளுவண்டிக்காரரை ஏட்டு கேட்பது போல ஒரு சைகையுடன் கேட்டார்.

ஏதோ போனால் போகிறதென்று தனது பரம்பரைச் சொத்தான தொடர்வண்டியில் நமக்கு ஒரு இடம் கொடுத்த புண்ணியவானாயிற்றே! என்று பயணச்சீட்டை நீட்டினேன்.
அதை சரியாகக் கூட பார்க்காமல் அதன் மேல் எதையோ கிறுக்கிவிட்டு போனார் (கையெழுத்தாம்).
எனது அடையாள அட்டை எதையும் கேட்கவுமில்லை.
ஆக அவரது நோக்கம் பயணச் சீட்டில்லாதவனை பிடித்து கறக்கமுடிந்த அளவு கறப்பதுதான் என்பது புரிந்தது.

அடப்பாவி! ஒரு ப.ப சரியாக வேலை செய்யாததால் நாசமாகப் போன மக்களடா நாங்கள்.
அப்படி அந்த ப.ப திருவாரூரில் ஒழுங்காக வேலையைச் செய்து அந்த மாறுகண்ணனைப் பிடித்திருந்தால் தமிழ்நாட்டைக் கொள்ளையடித்து ஆசியாவிலேயே பெரிய பணக்கார குடும்பம் உருவான வரலாறு ஒரு பட்டாம்பூச்சி விளைவால் தடுக்கப்பட்டிருக்குமே!

இந்த ஹிந்திக்கார ப.ப எத்தனை கொலைஞனை உருவாக்கப் போகிறாரோ?!

சரி அவர் தொடரி அவர் விருப்பம் என்று விட்டுவிட்டேன்.

எதிரே இருந்த மூன்றடுக்கில் இரண்டாம் நிலையில் படுத்திருந்தான் ஒரு வாட்டசாட்டமான ஆசாமி.

ப.ப அவனது கால்மாட்டில் நின்று பாதத்தைத் தட்டி (அதாவது அடித்து) அவனை எழுப்பினார்.

கண்ணைத் திறந்து தலையை தூக்கிப்பார்த்த அந்த ஆசாமி அப்படியே படுத்தவாறே காலைத் தூக்கி வாகாக இருந்த ப.பவின் நெஞ்சில் ஓங்கி ஒரு மிதி மிதித்தான்!

யார் இந்த வீரர்?!
(எதற்கும் மரியாதை கொடுத்துவைப்போம், மிதியின் வேகம் அப்படி)
இத்தனை பெரிய தொடரியையும் அதிலிருக்கும் நூற்றுக்கணக்கான அடிமைகளையும் அடக்கியாளும் ப.பவையே மிதித்து தள்ளிவிட்டாரே!

(தொடரியில் அதுவும் வட ஹிந்தியாவுக்கு அடிக்கடி போவோர் இந்த வீரசாகசத்தைத் தெளிவாகப் புரிந்துகொள்வர்.
ப.ப வை 'டீட்டியா.....ர்' என்று கத்தி கூப்பிட்டு அதிகாரம் செய்வதெல்லாம் அந்நியன் படத்தில்தான் நடக்கும்.
படங்களில் என்று உண்மையைக் காட்டியிருக்கிறார்கள்?)

நிலைகுலைந்து விழுந்த ப.ப சமாளித்து எழ சிறிது நேரமானது.
அவனது வெள்ளைச் சட்டைமீது கருப்பு கோட் போடவில்லை ஆதலால் அதில் கால்தடம் பதிந்துவிட்டது.

ஏதோ அந்த நவீன அரக்கனை வதம் செய்ய அவதரித்த பெருமாள் அவதாரம் போல பக்கவாட்டில் திரும்பிப் படுத்து தலைக்கு கையால் முட்டுக்கொடுத்து தாங்கிக்கொண்டு தன்னிடம் மிதிவாங்கிய அரக்கன் சமாளித்து எழுவதை பார்த்து ரசித்துகொண்டிருந்தார் அந்த வீராதிவீரர்.

அடடா! இவரல்லவா கலியுக பெருமாள்!
நாமெல்லாம் பெயரில் மட்டும்தான் பெருமாள் என்று நினைத்துக்கொண்டேன்.

ப.ப எழுந்து சற்று எட்ட நின்றுகொண்டான்.
(இவனுக்கு என்ன மரியாதை? அதுவும் அவதாரம் பக்கத்தில் இருக்கும்போது)

அவனைப் பார்த்து "எதுக்குடா என்ன எழுப்பின?" என்று கேட்டார் அந்த அவதாரம்.

தமிழில்தான் கேட்டார்.
ஆனால் சொற்கள் ஹிந்தியில் இருந்தன.

அதாவது தமிழர்கள் எந்த மொழி பேசினாலும் அது தமிழ்ப்பாணியில்தான் இருக்கும்.

நானோ வடநாடு வந்து ஆறுமாதம்தான் ஆகிறது.
மற்றவர்கள் இந்திபேசினால் புரியாது.
ஆனால் தமிழர்கள் இந்தி பேசினால் புரியும்.
அவர் பேசியது எனக்கு புரிகிறது அதனால் அவர் தமிழர் என்பது உறுதியாகிவிட்டது.
(அவர் தமிழர் என்பதை மேலும் உறுதி செய்யும் விதமாக அவர் குடித்திருந்தார்)

தூக்கத்தில் யாரென்று தெரியாமல் மிதித்திருப்பான் என்று நினைத்த ப.பவுக்கு இப்போது யாரென்று தெரிந்துதான் மிதிவாங்கினோம் என்பது புரிந்தது.

இருந்தாலும் தன் தோல்வியை ஒத்துக்கொள்ளாமல் கையில் தொங்கவிட்டிருந்த கருப்பு கோட்டை போட்டுக்கொண்டு அந்த அரக்கன் தனது விஸ்வரூபத்தை எடுத்தான்

"டிக்கெட் கேட்க எழுப்பினா டிடிஆரையே மிதிக்கிறியா?
மொதல்ல கீழ இறங்கு" என்றான்.
வாங்கிய மிதியில் திமிர் கொஞ்சம் குறைந்திருந்தது.

"எறங்க முடியாது போடா" அவதாரம் அலட்டிக்கொள்ளாமல் சொன்னார்.

புகையிலையைக் குதப்பியபடி முறைத்து பார்த்துக்கொண்டே ப.ப திரும்பிப்போனான்.
பார்த்துக்கொண்டிருந்த எனக்கு இருந்த பதட்டம் கூட அந்த அவதாரத்திற்கு இல்லை.
அவர் அடுத்த நொடி எந்த கவலையுமின்றி படுத்து கண்களை மூடிக்கொண்டார்.

சிறிதுநேரத்தில் ப.ப தொடர்வண்டி காவலர்கள் இருவருடன் வந்தான்.

அவர்கள் அவதாரத்தை எட்ட நின்று மெதுவாக எழுப்பினார்கள்.
(மிதி வாங்கியதைச் சொல்லியிருப்பான் போலும்)
கண்மலர்ந்த அவதாரம் மீண்டும் தனது பெருமாள் சயன நிலைக்கு வந்து "என்ன?" என்று கேட்டார்.

"டிக்கெட் கேட்ட டிடிஆரை ஏன் அடித்தீர்?"

"டிடிஆரா இருந்தா?
அவனோட வசதிக்கு வருவானா? நான் ஏறி நாலு மணிநேரம் ஆகுது.
இதுவரை எங்க போயிருந்தான்?
நடுராத்திரியில் வந்து என் தூக்கத்தைக் கெடுத்தான்.
அதான் ஒதச்சேன்"

"நீர் முதலில் டிக்கெட்டையும் ஐடியையும் காட்டும்"

அவதாரம் தன் அடையாள அட்டையைக் காண்பித்தார். பார்த்தால் அவர் பட்டாளத்தைச் சேர்ந்தவர்.

வாங்கும்போது கவிழ்ந்திருந்த கை கொடுக்கும்போது மல்லார்ந்திருந்தது.

"ஆர்மியில இருக்குற நீங்களே இப்படி நடந்துக்கலாமா? 
என்ன இருந்தாலும் அவர அடிச்சது தப்புதானே...?"

"அவன் என்ன அடிச்சு எழுப்புனது மட்டும் தப்பில்லையா?
அப்படி என்ன திமிரு இவனுக்கு?"

அரக்கன் பதறிப்போய் "நான் அடிக்கவெல்லாம் இல்லை.
தட்டிதான் எழுப்பினேன்" என்றான்.

"சரி சரி இருவர் மீதும் சமமான(!) தப்பிருக்கிறது இதோடு விடுங்கள்" என்று கூறிவிட்டு பேந்த பேந்த விழித்த அரக்கனை முதுகைத் தடவியபடி அழைத்துக்கொண்டு அந்த காவலர்கள் போய்விட்டனர்.

மறுநாள் காலையில் அந்த அவதாரம் அவராக எழுந்தபிறகு (எழுப்ப எனக்கு 'விருப்பம்' இல்லை) பேச்சுக்கொடுத்தேன்

"எதுவர போறீங்க?"

"திருனவேலி வர, நீங்க?"

"நானும் திருநெல்வேலிதான்.
திருநெல்வேலில எங்க?"

"மன்னார்கோவில்"

"அப்பிடியா! எனக்கு அம்பைதான்.
என் பேரு ஆதிமூலப்பெருமாள்
ஆமா உங்க பேரு என்ன?"

"இசக்கி"

அட! இவர் அவதாரம் இல்லை நம் குலதெய்வம்.

Wednesday 21 June 2017

ஆரிய மரபணு ஆய்வு - ஒருவேளை உண்மையென்றாலும் அது ஹிந்தியருக்கு மட்டுமே பொருந்தும்

Gunaseelan Samuel
ஐரோப்பியர்கள் ஆழமாக நம்பவும், ஓரிரு நூற்றாண்டுகளாகப் பரப்பவும் செய்த ஆரியக் கோட்பாட்டை அண்மைக்கால ஆய்வுகள் புறந்தள்ளி மறுத்துள்ளன.

அதே ‘ஆரிய’ இனவியல் நிலைப்பாட்டில் இசுபென்சர் வெல்சு (Spencer Wells) என்பார் தொடங்கிய இருபுரி (DNA) வழிவந்த ஆய்வுகள் மெய்ப்பிக்க முயன்றன.

‘ஆப்பிரிக்காவிலிருந்து’ (Out of Africa) எனும் கோட்பாட்டைத் தழுவியே அந்த மரபணு ஆய்வுகள் அமைந்தன.
அவர் போன்றோரின் ஆய்வும்கூட ‘ஆரிய மேன்மைக்’ (Eugenics) கோட்பாட்டையே தழுவியவை.
அந்த ‘ஆப்பிரிக்காவிலிருந்து’ கோட்பாட்டைத் தழுவிக் குமரிக்கண்டக் கோட்பாட்டைத் தமிழர்கள் சிலரே மறுக்கவும் நகையாடவும் தொடங்கினர்.
தமிழரின் தொன்மையை எதிர்க்கும் பிராமண, திராவிட ஆய்வாளர்களுக்கும்கூட ‘ஆப்பிரிக்காவிலிருந்து’ கோட்பாடு ஒரு நல்ல பற்றுக்கோடாகப் பட்டது.

ஆரிய இனவியல் கோட்பாட்டை மெல்லப் புகுத்தும் ‘ஆப்பிரிக்காவிலிருந்து’ எனும் கோட்பாடு ஒரு குறைபிறவி என்பதையும்,
பெரிய இட்டுக்கட்டல் என்பதையும் காட்ட என்னுடைய “தமிழரின் தொன்மை” எனும் நூலில் மிக விரிவாக வழக்குரைத்துள்ளேன்.

‘ஆப்பிரிக்காவிலிருந்து’ கோட்பாட்டை மறுப்பதற்கென்றே அந் நூலை எழுதினேன். முடிந்தால் பார்க்கவும்.

இந்து நாளேட்டில் வந்துள்ள செய்தியின்படி சமற்கிருதம் 4000-5000 ஆண்டுகளுக்குமுன் இந்தியாவுக்குள் வந்த ஆரியரின் மொழியாயிருந்தது என்பது பெரிய பொய்.
கி. பி. 2ஆம் நூற்றாண்டுக்குமுன் சமற்கிருதம் எனும் மொழியே இல்லையென்பதை அண்மைக்கால ஆய்வுகள் தெளிவுறக் காட்டுகின்றன.
மேலும், சமற்கிருதம் என்றுமே மக்களால் பேசப்பட்ட மொழியேயன்று.
எசுப்பராந்தோவைப் (Esperanto) போன்று அஃது ஒரு செயற்கை மொழி.
அந்த மொழியைப் பேசியவர்கள்தாம் 4000-5000 ஆண்டுகளுக்குமுன் இந்தியத் துணைக்கண்டத்திற்குள் ‘ஆரியர்களாய்’ நுழைந்தனர் எனும் கூற்று அதனால் பொய்த்துப் போகிறது.

A Genetic Chronology for the Indian Subcontinent எனும் கட்டுரை ‘புதிய மொந்தையில் பழைய கள்’ என்பதைப்போல் அதே ஆரிய மேன்மைக் கோட்பாட்டைத்தான் ஒப்புவிக்கிறது.
இதை அறியாது,
அக் கட்டுரையைத் தமிழர்களே புகழ்வது பெரிய நெருடலாகவும் வருத்தமாகவும் உள்ளது.
- குணா
------------------------
மேற்கண்டது அறிஞர் குணா அவர்களின் கருத்து.
தி ஹிந்து ஒரு நம்பத்தகுந்த ஊடகம் கிடையாது.
அதிலே இந்தியர்கள் என்று மொட்டையாக கூறி
அவர்களில் குறிப்பிட்ட ஆண்களிடம் மேற்கத்திய மரபணு தாக்கம் இருப்பதாகக் கூறுகிறது ஒரு கட்டுரை.

உடனே ஏதோ ஆரியர் நுழைந்தது உண்மை என்று உறுதியாகிவிட்டதாக கூத்தாடத் தொடங்கியுள்ளனர் மூளையை பயன்படுத்தாத கூட்டத்தினர்.

அக்கட்டுரையில் ஒரு இடத்தில் தென்னிந்தியர் கலப்பற்றோர் என்றும் வருகிறது.
பிராமணர் என்று எங்கும் வரவுமில்லை.

  அதிலேயே இது ஆரியநுழைவை ஆணித்தரமாக நிறுவப்போதாது என்றும் வருகிறது.

அதாவது பலரின் கருத்துகளை பதிவு செய்து குழப்புகிறார்கள்.

மேற்கண்ட கட்டுரை வடயிந்தியருக்கு பொருந்தலாம்.
தென்னிந்தியருக்கு அதிலும் குறிப்பாக தமிழருக்கு தொடர்பேயில்லாத கட்டுரை அது.

தமிழர்களை அதிலும் குறிப்பாக பார்ப்பனரையும் பறையரையும் தனியாக DNA ஆய்வு செய்யும்வரை இந்த ஆரியக் குழப்பம் தொடரும்.

அதுவரை இக்குழப்பம் திராவிடமும் இந்தியமும் வாழ வழிசெய்யும்.