Thursday 31 March 2016

சேரனையும் புகழ்வோம்

சேரனையும் புகழ்வோம்

சேரன் கருவூரில் இருந்தான். சோழன் அவனைப் பார்க்க யானைமீதமர்ந்து வந்தான்.
அவன் படையெடுத்துதான் வந்துள்ளான் என்று நினைத்து சேரனின் வீரர்கள் சூழ்ந்துகொண்டனர்.
இதனால் சோழனின் யானைக்கு மதம்பிடித்துவிட்டது.

இதை புலவரும் சேரனும் மாடத்தில் இருந்து பார்த்துக்கொண்டிருந்தனர்.
புலவரிடம் இவன் யார் என்று சேரன் கேட்கிறான்.
புலவர் சோழனின் புகழை எடுத்துக்கூறி அவனைக் காப்பாற்றுமாறு பாடினார்.
(எப்பிடி பாத்தாலும் நம்ம பயடா இவன்)

உடனே சேரன் போய் யானையை அடக்கி சோழனைக் காப்பாற்றினான்.

சேரனின் பெயர்: சேரமான் அந்துவஞ்சேரல் இரும்பொறை

சோழனின் பெயர்: முடித்தலை கோப்பெருநற்கிள்ளி

புலவரின் பெயர்: உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்

பாடல்: புறநானூறு 13

"இவன்யார்" என்குவை ஆயின், இவனே
புலிநிறக் கவசம் பூம்பொறி சிதைய
எய்கணை கிழித்த பகட்டுஎழில் மார்பின்
மறலி அன்ன களிற்றுமிசை யோனே;
களிறே, முந்நீர் வழங்கு நாவாய் போலவும்
பன்மீன் நாப்பண் திங்கள் போலவும்
சுறவுஇனத்து அன்ன வாளோர் மொய்ப்ப
மரீஇயோர் அறியாது மைந்துபட் டன்றே;
நோயிலன் ஆகிப் பெயர்கதில் அம்ம,
பழன மஞ்ஞை உகுத்த பீலி
கழனி உழவர் சூட்டொடு தொகுக்கும்
கொழுமீன் விளைந்த கள்ளின்
விழுநீர் வேலி நாடுகிழ வோனே.

”இவன் யார்” என்று கேட்கிறாயா?
இவன் அம்புகளால் துளைக்கப்பட்ட புள்ளிகளுடன் சிதைந்து காணப்படும் புலித்தோலாலாகிய கவசத்தைத் தன் வலிய அழகிய மார்பில் அணிந்து கூற்றுவன் போல் யானைமீது வருகிறான்.
அந்த யானை வருவது கடலில் ஒருமரக்கலம் வருவதைப்போலவும்
பல விண்மீன்களுக்கு நடுவே விளங்கும் திங்களைப்போலவும் காட்சி அளிக்கிறது.
அந்த யானையைச் சுற்றிலும் சுறாமீன்களின் கூட்டம் போல் வாளேந்திய வீரர்கள் சூழ்ந்துள்ளனர்.
அவர்களிடையே உள்ள பாகர்கள் அறியாமலேயே அந்த யானை மதம் கொண்டது.
இவன் நாட்டில் வயல்களில் மயில்கள் உதிர்த்த தோகையை உழவர்கள் நெற்கதிர்களோடு சேர்த்து அள்ளிச் செல்வார்கள்.
இவன் கொழுத்த மீனையும் முதிர்ந்த கள்ளையும்,
நீரை வேலியாகவும் உள்ள வளமான நாட்டுக்குத் தலைவன்.
இவன் இன்னலின்றித் திரும்பிச் செல்வானாக.

நன்றி: https:// ta.m.wikipedia. org/wiki/சேரமான்_அந்துவஞ்சேரல்_இரும்பொறை
நன்றி: தமிழ் வளர்ப்போம் (முகநூல்)

பறிபோகும் நெய்வேலி மின்சாரம்

பறிபோகும் நெய்வேலி மின்சாரம்
.......................................................

நெய்வேலியை நடுவண் அரசுக்கு தாரைவார்த்து கொடுத்துட்டு அங்கு உற்பத்தியாகும் மின்சாரத்தில்,
30% விழுக்காடே தமிழகம் பிச்சை வாங்குகிறது
அதுவும் யூனிட்டுக்கு 1.82 பைசா கொடுத்தே நடுவண் அரசிடமிருந்து வாங்குகிறது.

மீதி 70% விழுகாட்டை நடுவண் அரசு என்ன செய்கிறது???

பாலாற்றின் உரிமையை தடுக்கும் ஆந்திராவுக்கு 19% விழுக்காடும்,

காவிரியில் இருந்து இனி தண்ணீர் தரமாட்டோம் என்கும் கருநாடகத்திற்கு 14% விழுக்காடும்,

முல்லைப் பெரியாறு அணையில் மல்லுக்கட்டி கடப்பாறை கொண்டு அணையை உடைக்க வந்த கேரளாவுக்கு 10% விழுக்காடும்,

நடுவண் மின் தொகுப்பிற்கு 15%

புதுச்சேரிக்கு 5%,என்.எல்.சிக்கு 7%,

என பங்கீட்டுக் கொள்கிறது, தமிழர்களை சாதீய மோதல்,பார்ப்பனீய எதிர்ப்புனு அதள பாதாளத்தில் தள்ளிவிட்டுட்டு,
தமிழகத்தின் கனிம வளங்களை நடுவண் அரசு திருட தீராவிட அரசுகள் துணைப்போயின, போகின்றன.

நெய்வேலியிலிருந்து உற்பத்தியாகும் மின்சாரத்தை நேரடியாக தமிழகத்திற்கு கொடுக்காமல்,

நடுவண் மின் தொகுப்பிற்குச் சென்று அங்கிருந்து தென்னிந்தியப் பகுதிக்கான மின் தொகுப்பிற்கு வழங்கப்படுகிறது,
அதிலிருந்தே 30% விழுக்காட்டை தமிழகத்திற்கு வழங்குகிறது.
இது எப்படி இருக்குனா நம்ம வீட்டு சோத்தை எடுத்து, அதிலிருந்து நமக்கு ஒரு கவளையை உருட்டி தூக்கிப்போடுவது போல இருக்கு.

சரி வெட்டியெடுக்கும் நிலக்கரிக்கு காப்புரிமை என்ற பெயரில் டன்னுக்கு எவ்வளவு கொடுக்கிறது என்று பார்த்தால் வெறும் 45 ரூபாய் மட்டுமே,

ஒரு டன் நிலக்கரியில் ஒரு மெகாவாட்(1000 யூனிட்) உற்பத்தி செய்கிறது அப்படியானால் 1820 ரூபாய் லாபம் பார்க்கிறது நடுவண் அரசு (1.82×1000=1820).

4 டன் நிலக்கரியை எரிக்கும்போது ஒரு டன் சாம்பல் கிடைக்கிறது அதையும் விற்று காசு பார்க்கிறது என்.எல்.சி நிறுவனம்.

தமிழகத்தில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் வங்கி கடனுதவியுடன் ஹாலோ பிரிக்ஸ் என்று அழைக்கப்படும் நிலக்கரி, சாம்பலாலான கற்களைச் செய்து பிழைத்து வந்தனர்.

ஆனால் அதிலும் மண்ணை அள்ளிப்போட்டு அந்த சாம்பலை சிமெண்ட் ஆலைகளுக்கு மொத்தமாக விற்பனை செய்யப்படுகிறது.

செயல்படாத நிறுவனங்கள் கூட செயல்படுவதாக கூறி போலிச் சான்றிதழ் பெற்று சாம்பலை வாங்கி கூடுதல் லாபம் வைத்து, உள்ளீடற்ற நிலக்கரி சாம்பற் கல் (ஹாலோ பிரிக்ஸ்) நிறுவனத்திற்கு விற்பனை செய்கின்றனர்.

அடுப்புக்கரியை விட குறைவாக ஒரு டன் நிலக்கரிக்கு பணத்தை தமிழக அரசுக்கு கொடுத்துவிட்டு,
பல்லாயிரம் கோடிக்கு மின் உற்பத்தி செய்வதோடு மட்டுமல்லாமல் சாம்பலையும் பல நூறு கோடி ரூபாய்க்கு விற்று காசு பார்க்கிறது நடுவண் அரசு,
தானே புயல் காரணமாக ரூ 2000கோடி ரூபாய் தமிழக அரசு நடுவண் அரசிடம் கேட்டபோது வாயே திறக்கவில்லை,

ஆனா நம் கனிம வளத்தை கொள்ளையடித்து கொழுத்து திங்குது, தமிழகத்தில் உற்பத்தியாகும் மின்சாரத்தை நடுவண் அரசிடம் கையேந்தி வாங்கி அதை தமிழகத்தில் கடைவிரித்துள்ள,
பன்னாட்டு வடநாட்டு தொழிற் நிறுவனங்களுக்கு மானீயத்துடன் தடையற்ற மின்சாரத்தை வழங்கிவிட்டு,
சிறு,குறு தொழில் செய்யும் நம் பிழைப்பில் மண்ணை அள்ளிப்போட்டு சிம்னி விளக்கை கொளுத்த விட்டுள்ளனர் தீராவிட ஆட்சியாளர்கள்.

இது யோக்கியதைல பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பாம் தமிழக மின்வாரிய துறைக்கு.

இப்படி தமிழகத்தில் உற்பத்தியாகும் மின்சாரத்தை கண்டவனுக்கும் தாரைவார்த்து கொடுத்துட்டு மின்பற்றாக்குறை மாநிலம்னு பட்டம் வேற.
இதுல கூடங்குளம் அணு உலையை எதிர்த்தால் மின்சார பற்றாக்குறையை எப்படி தீர்ப்பதுனு சப்பைக்கட்டு வேற.

மின்சார பற்றாக்குறை காரணமாக தமிழகத்தில் உற்பத்தி ஆகும் மின்சாரத்தை நடுவண் அரசிடமிருந்து விலைக்கொடுத்து வாங்கும்,
ஆந்திராவோ கர்நாடகவோ கேரளாவோ அங்கு அணு உலையை நிறுவ முட்டுக்கால் போட்டது ஏனோ???
தமிழகத்தின் மின்பற்றாகுறையை தீர்க்க கல்பாக்கம், கூடங்குளம், அதானி சோலார் ஒப்பந்தம், புதிதாக எந்த அணுமின் நிலையங்களும் வேண்டாம் நெய்வேலியில் உற்பத்தியாகும் மின்சாரம் போதுமே???

இதுபோக நெய்வேலி நடுவண் அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இருப்பதால் அங்கு அயலவர் ஆதிக்கத்திற்கு குறைவில்லை.

நெய்வேலியை தமிழக அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தால் தண்ணீர் தரமாட்டேன் என்கும் ஆந்திர,கர்நாடக, கேரள அரசுகளின் கொட்டம் அடங்கும்.

இது நிறைவேற வேண்டுமெனில் இதுவரை தாங்கள் செய்த தில்லுமுல்லு தகிடுதத்தம் ஊழலிருந்து தப்பிக்க,
மாநில சுயாட்சி கொள்கையை நடுவண் அரசிடம் அடகு வைத்துள்ள தீராவிட அரசுகளை அகற்றியாலே சாத்தியம்.

தமிழ்நாடு இந்தியாவிலிருந்து பிரிந்தால் இந்தியாதான் பிச்சையெடுக்கும்

நன்றி: desiyamunnetrasangam007. blogspot. in/2015/10/ blog-post_74.html?m=1
நன்றி : Velmurugan Ramalingam

Tuesday 29 March 2016

ஈழத்தில் ஒரு வடுகர்

ஈழத்தில் ஒரு வடுகர்
----------------------------------

ஈழத்தில் சிங்களவர் இசுலாமியத்தமிழர் மீது நடத்திய (1915) கலவரத்தின் போது கைதுசெய்யப்பட்ட சிங்களவரை
(முதல் உலகப் போர் நடந்துகொண்டிருந்தபோதே)
இங்கிலாந்து வரை சென்று வாதாடி விடுதலை செய்தவர் சர்.பொன்னம்பலம் இராமநாதன்.

இதில் விடுதலை ஆனவர்தான் 'சிங்களவரின் தந்தை' என்றழைக்கப்படும் டி.எஸ்.சேனநாயக.

இவ்வெற்றிக்குப் பிறகு நாடு திரும்பிய இவரை குதிரைவண்டியில் உட்காரவைத்து சிங்களவரே குதிரைகளாக அவ்வண்டியை ஊர்வலமாக இழுத்துவந்தனர்.

இதன் மூலம் இசுலாமியத்தமிழர் இசுலாமியரல்லாத தமிழரை வெறுக்கும் சூழலுக்கு அடித்தளமிட்டவர் இவரே.

அதிர்ச்சியான விடயம் என்னவெனில் இவர் ஒரு பொட்டுகட்டித்  தெலுங்கர் என்பதுதான்.

ஈழத்தில் வெள்ளாள முதலியார் அனைவரும் தெலுங்கு தேவதாசி மரபினர்.
அதாவது வெள்ளாளர் வேறு வெள்ளாளமுதலிகள் வேறு.

தமிழர் பிரதிநிதியாகத் தன்னைக் காட்டிக்கொண்டே தியோஸோபிஸிகல் சொசைட்டி மூலம் பள்ளிகளில் புத்தமதக் கல்வியை வலியுறுத்தியவர் இவரே.
வேசாக் எனும் புத்த பண்டிகைக்கு விடுமுறை கிடைக்கச் செய்தவரும் இவரே.

ஆங்கில அடிவருடியும் கூட.
பேரரசி விக்டோரியா கையால் தங்கப்பதக்கமும் வாங்கியுள்ளார்.
பேரரசர் ஐந்தாம் ஜார்ஜ் பிறந்தநாளின் போது அவர் கையாலும் விருது வாங்கியுள்ளார்.
ஆங்கில விளையாட்டான கிரிக்கெட்டை இலங்கை முழுவதும் வளர்த்தவர் இவரே.

இவர் யாழ்ப்பாணத்தில் நிறுவிய  கல்லூரிதான்  பல்கலைக்கழகமாக உருப்பெற்றது.

ஈழத்துத் தமிழர் தலைவராகக் கருதப்படும் இவரின் உண்மை அடையாளம் முதலியார் என்ற பட்டத்தில் மறைக்கப்பட்டுள்ளது.

டி.எஸ்.சேனநாயக கூட ஆங்கிலேயரால் முதலியார் பட்டம் பெற்றவர் ஆவார்.

இலங்கையில் தெலுங்கு மரபினர்

இலங்கையில் தெலுங்கு மரபினர்

தமிழகத்தை நாயக்க மன்னர்களும், தொடர்ந்து கிழக்கிந்தியக் கம்பெனியினரும் வழித்தெடுத்து நக்கியதால் ஏற்பட்ட பஞ்சத்தையடுத்து மலையகத்திற்குப் பிழைக்கப்போன தமிழர்களைச் சந்தித்திருக்கிறீர்களா?
எங்கள் பகுதியில் நிறைய உன்டு.
பால்யவயதில் மின்சாரமற்ற நிலவொளி வேளைகளில் கையகல உரலிலிட்ட 'மட்டைக்குச்சி' புகையிலைத் துண்டுகளை இடித்துக் கொண்டே தாங்கள் வாழ்ந்த கதை சொல்வார்கள்.
வெற்றிலையின் ரத்தச்சிவப்பாய் வழியும் துன்பம்.

இது உழைக்கப் போனவர்கள் தங்கள் வாழ்க்கையை வீனாக்கி கண்டியில் குடியுரிமை மறுக்கப்பட்டுத் திரும்பிய கதை.

அக்காவைக் கொடுத்து நாட்டைப் பிடித்த வடுக வீரபாகுகள் கதை தெரியுமா?
படியுங்கள்..
1605 முதல் 1635வரை இலங்கையின் 'கண்டி'யை ஆன்ட சிங்கள மன்னன் செனரதன்.
இக்காலத்தில் போர்த்துக்கீசியரும், ஒல்லாந்தரும் கொடுத்த இம்சையால் துறைமுகப் போக்குவரத்துக்கள் முடக்கப்பட்டிருந்தன.
கண்டி மன்னர்களுக்குத் தேவையான பொருட்கள் அனைத்தும் யாழ்ப்பாண மன்னன் வழி மட்டுமே கிடைத்து வந்தது.
அவ்வாறு கிடைத்த மற்றுமொரு உதவி மதுரை நாயக்க மன்னர்களின் இரு அரசிளங்குமாரிகள்.
கண்டிமீதான தென்னிந்திய நாயக்கர்களின் படையெடுப்பு இவ்விதம்தான் துவங்கி வைக்கப்பட்டது.
அந்தோ பரிதாபம்.. செனரத்தனுக்கு பின்பு அவனது இளையமகன் இராசிங்கன் ஆட்சியைக் கைப்பற்றிக்கொண்டான்.
இவர்களை மணந்த மன்னனின் முதல் இரு புதல்வர்கள் ஊவா, மாத்தளைப் பிரதேசங்களுக்கான இளவரசர்களாக மட்டுமே நியமிக்கப்பட்டனர்.
இப்படியாக பேக்கரி டீலிங்கின் முதல் அத்தியாயம் பிசுபிசுத்துப் போனது.
செனரதனுக்குப் பின்பு கண்டியின் ஆட்சிக்கு வந்த ராசசிங்கன் தொடர்ச்சியாக 52ஆண்டுகள் (1635-1687) கண்டியை ஆண்டிருக்கிறான்.
இவன் தொடர்ச்சியாக டச்சுக்காரர்களிடம் போர்நடத்திக் கொண்டிருந்ததால் வடுக பேக்கரியின் ஷட்டர் இழுத்து மூடப்பட்டே இருந்தது.
ராசசிங்கன் மண்டையைப் போட்டபின்பு ஆட்சிக்கு வந்தவன் அவனது இரண்டாவது மகன் விமலதர்ம சூரியன் (1687-1706).
இவனது காலத்தில்தான் வடுக வியாபாரம் சூடு பிடித்தது.
முப்பது ஆண்டுகாலம் அமைதிவழியிலும், பின்பு ஒரு முப்பதாண்டுகாலம் ஆயுத வழியிலும் போராடி நாம் வெல்லமுடியாத சிங்களத்தை வீரபாகு பாணி வியாபாரத் தந்திரத்தால் வீழ்தினார்கள்.
டச்சுக்காரர்கள் மற்றும் உள்நாட்டுக் குழப்பங்களால் டரியலாகிக் கிடந்த விமலதர்மனிடம் தஞ்சைநாயக்கர்கள் புது வகை வெண்ணை தடவிய ரொட்டியை விற்றனர்.
அதாவது, தஞ்சை நாயக்க இளவரசியை விமலதர்மன் மணந்து கொள்வது.
வரதட்சனையாக ஆயிரக்கணக்கான நாயக்கப் போர்வீரர்களை அளிப்பது.
டீலிங் வெற்றி பெற்று பின்பு போர்வீரர்களுடன் கொசுராக தஞ்சை நகர நாயக்கப் பிரதிநிதிகளும் அனுப்பி வைக்கப் பட்டனர்.
இக்குடியேற்றத்தின் பலனாக கண்டி நகரின் ஒரு பகுதியே நாயக்கப் பிரதேசமானது.
அரசகுடும்பத்தைச் சேர்ந்தவர்கள் குமார ரூப வீதியில் வாழ்ந்தனர்.
இது பிற்காலத்தில் மலபார்வீதி என அழைக்கப்பட்டது.
இப்போதைய யட்டிநுவர வீதி இரு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு ஒருபகுதி யட்டிநுவரையெனவும் மறுபகுதி தஸ்கராவீதி எனவும் அழைக்கப்பட்டது.
படிப்படியாக சேர்பெணற்செய்சா வீதி, கொடு கொடல்ல, ஹன்ன பெரன என கண்டியின் அனைத்து வீதிகளும் ஒரிஜினல் சிங்களனுக்கே இருட்டுக்கடை அல்வா கொடுத்து ஆக்கிரமிக்கப்பட்டது.
இதுவே பிற்காலத்தில் கண்டிநகரம் முழுவதும் தஞ்சாவூர் நாயக்கர் மயமாக்கப்பட்டதற்கும், தொடர்ச்சியான பேக்கரி டீலிங்க்களுக்கும் இடப்பட்ட வலுவான அடித்தளம்.
விமலதர்மன் 1706ல் இறந்தபின்பு அவனது தஞ்சாவூர் நாயக்க அரசிக்குப் பிறந்த சிறீநரேந்திரசிங்கன் கண்டியின் ஆட்சிக்கு வருகிறான்(1706-1739).
வடுகம் கிட்டத்தட்ட பாதிக்கினறு தாண்டியாகி விட்டது.
இவனது காலத்தில்தான் வடுகர்கள் கண்டியின் தலையெழுத்தை திசைதிருப்பி எழுதினர்.
சுதேசிகளான உள்ளூர் சிங்களவாசிகளுக்கும் கண்டிக்கு வந்தேறிய நாயக்க அரசியல் பிரதிநிதிகளுக்கும் அடிக்கடி முறுகல் ஏற்பட்டது.
அந்தச் சிக்கலையும் நரேந்திரசிங்கனை வைத்தே திடீர்ச் சட்டதிருத்தம் கொண்டுவரச் செய்து சரிக்கட்டினர்.
அதாவது, அரசவாரிசாக தனது நெருங்கிய உறவினரை தேர்ந்தெடுக்கும் அதிகாரம் அரசனுக்கே உரியது.
இந்தச் சட்டமே பின்னாளில் சுதேசிச் சிங்களவர்கள் குழப்பம் விளைவித்த போதும் வடுகர்கள் தற்காத்துக்கொள்ள கேடயமானது.
(இந்தக் காலகட்டத்திலெல்லாம்  வடுகம் வடுகமாகவே இருந்தது. சிங்களமாக உருமாறவில்லை)
தொலைநோக்குப் பார்வையாக நாயக்க பார்வையாக நாயக்க இளவரசியை மணம்முடித்துக் கொடுக்கப்பட்ட போதே அவளின் தம்பியும் கண்டிக்கு அனுப்பப்பட்டு அரண்மனையிலேயே வளர்க்கப்பட்டு வந்தான்.
இவ்வாறு அனைத்து வழியும் செப்பனிடப்பட்ட பின்புதான் வடுக பேக்கரியின் ஷட்டர் திறக்கப்பட்டது.
13-5-1739ல் நரேந்திர சிங்கன் இறந்தபின்பு,
அவனால் தேர்ந்தெடுக்கப் பட்ட அல்லது தேர்ந்தெடுக்கப்பட வைக்கப்பட்ட அவனது தஞ்சாவூர் நாயக்க இளவரசியின் தம்பி பாலவிஜயன் தனது நாயக்க பெயரைத் துறந்து விஜயராஜசிங்கம் எனும் சிங்களப் பெயரோடு அரியனை ஏறுகின்றான்.
(பெயர் மாற்றி வைத்து குரளிவித்தை காட்டுவது வடுகத்தில் இன்று வரை தொடர்கிறது.
தெட்சினாமூர்த்தி -கருணாநிதி,
கோபால்சாமி-வைகோ,
விசயராஜுலு- விஜயக்காந்த்,
கோமளவள்ளி-ஜெயலலிதா,
சிவாஜிராவ் - ரஜினிக்காந்த்)
கண்டியை ஆண்ட வடுகத்தை உள்நோக்கிப் போனால் கடலளவு பேக்கரிடீலிங் தெறித்து நிற்கிறது.
முழுவதும் எழுதுவதென்றால் தலைசுத்தி மயக்கம் வருகிறது.
அதனால் முந்தையப்பதிவுகளின் தொடர்ச்சிக் கச்சேரியைப் பிரிதொருமுறை வைத்துக் கொள்வோம்.
இப்போ ஹைலைட் மேட்டர்.
கண்டியை வடுகம் ஆண்டபோது சுதேசிச் சிங்களர்களால் பிரச்சினை வந்ததல்லவா?
அதனை அவர்கள் எதிர்கொள்ள கையாண்டமுறை மிகவும் எளிது.
தமிழகத்தில் கையாண்ட அதே உருமாற்ற முறை.
மொத்தமாக புத்தமதத்தைத் தழுவுவது.
பெயரும் சிங்களத்தில்.
சிங்களத்தின் கொடி, உடை அனைத்திலும் வடுகக்கலப்பு.
நிலங்களை சிங்களர்களுக்குப் பகிர்ந்தளித்து புத்தவிகாரைகளை  எழுப்பினார்கள்.
சிங்களத்தையும் வடுகத்தையும் எளிதில் கண்டுபிடிக்க இயலா உருமாற்றம்.
கண்டி நாயக்க மரபு 1739 ஆம் ஆண்டில் தொடங்கியது. இம்மரபில் வந்த கண்டியரசர்களில் பட்டியலைக் கீழே காணலாம்.
ஸ்ரீ விஜய ராஜசிங்கன் (1739 - 1747)
கீர்த்தி ஸ்ரீ ராஜசிங்கன் (1747 - 1782)
ஸ்ரீ ராஜாதி ராஜசிங்கன் (1782 -1798)
ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் (1798 -1815)
இதில் கடைசி வடுக சிங்கள மன்னன் விக்கிரமராச சிங்கன் மற்றும் அவன் குடும்பத்தினர் மட்டும் ஆங்கிலேயர்களால் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் 18ஆண்டுகள் அடைபட்டு உயிரிழந்திருக்கிறார்கள்.
அப்படியென்றால், காலகாலமாக அங்கு குடியேற்றப்பட்ட ஆயிரக் கணக்கான வடுகர்கள்??????
அந்தக் கேள்வியின் பதிலில் தேங்கிநிற்கிறது தமிழர் இனப்போராட்டத்தை திராவிடம் வீழ்த்தத் துடிப்பதன் மர்மம்.
சிங்களத்தின் பெயரில் சமீபம்வரை ஆண்டு தமிழர் குருதியைச் சுவைத்து நிற்கிறது!

நன்றி: இசைப்பிரியா தம்பி

Monday 28 March 2016

முத்தெலுங்கு அறிஞர்

இந்த படத்தில் தமிழ்தேசியம் பேசுபவர்
வீரகங்கணம்
ஆடஜென்மா
ஸ்ரீஜென்மா
அம்மாயுடு மொகுடு மாமகு யமுடு ( :D )
ஆகிய தெலுங்கு படங்களுக்குத் திரைக்கதை, வசனம் எழுதிய
முத்தெலுங்கு அறிஞர்
டாக்டர் கொலைஞர் கருணாநிதி அவர்கள்.

Sunday 27 March 2016

பா.ம.க - சில மறைக்கப்பட்ட தகவல்கள்

பா.ம.க - சில மறைக்கப்பட்ட தகவல்கள்

*துணைராணுவம் வந்து 21 பேரைச் சுட்டுக்கொல்லும் அளவுக்கு தீவிரமாக நடந்த இடவொதுக்கீடு போராட்டம்

* பிரபாகரன் என்ற பெயரைச் சொன்னாலே சிறை என்ற நிலையில் 1992 ஈழத் தமிழர் ஆதரவு மாநாடு.

*பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில இளைஞர் அணி செயலாளர் பொறுப்பில் ஜான் பாண்டியனை (பள்ளர்) வைத்து அழகு பார்த்தார் இராமதாஸ்.

* பசுபதி பாண்டியனுக்கு(பள்ளர்)  பொருளாளர் பதவியை கொடுத்தார் இராமதாஸ் ஐயா.

*1998 ஆம் ஆண்டு பா.ம.க விற்கு கிடைத்த நடுவண் அமைச்சர் பதவியை எழில்மலை (பறையர்) அவர்களுக்கு கொடுத்து பட்டியல் சாதி மக்களை (SC/ST) பெருமை படுத்தினார் இராமதாஸ் ஐயா.
பொன்னுசாமி என்ற பறையரையும் அமைச்சராக்கியுள்ளார்.

*முருகவேல்ராஜன், சிவகாமி வின்சென்ட், கிருஷ்ணன், போன்ற பட்டியல் சாதியினரை
MLA ஆக்கியுள்ளார் இராமதாஸ் ஐயா.

*தென் மாவட்டங்களில் ஒரேநாளில் 9 அம்பேத்கர் சிலைகள் வைத்தவர் இராமதாஸ் ஐயா.

*கொடியன்குளம் (பள்ளர் பெரும்பான்மை) ஊரில் 1995 ல் ஜெயலலிதா ஏவிவிட்ட காவல்துறை வன்முறைச் சம்பவம் நடந்தபோது,
அரசு தடையை மீறி பாதிக்கபட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல்கூறி ஆயிரக்கணக்கான பா.ம.க வினருடன் சென்று கவர்னரிடம் கொடியன்குளம் பிரச்னையை தீர்க்க மனு கொடுத்தார் ராமதாஸ் ஐயா.
இழப்பீடும் தரச்செய்தார்.

*வடிவேல் இராவணன் (பள்ளர்) அவர்களுக்கு பொதுச்செயலாளர் பதவி கொடுத்துள்ளார்கள்.
பொதுச்செயலாளர் பதவி பட்டியல் சாதியினருக்கே தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.

*கவனிப்பின்றி இருந்த இமானுவேல் சேகரன் (பள்ளர்) கல்லறையை தூய்மை படுத்தி 47 லட்சம் செலவு செய்து மணிமண்டபம் கட்டினார் ராமதாஸ் ஐயா

*தமிழகத்தில் மீனவர் மக்கள் திருவள்ளுர் முதல் கன்னியாகுமரி வரை இருந்தாலும்,
அவர்களில் ஒருவர் கூட M.P ஆனதில்லை.
முதல் முறையாக பா.ம.க தான் மீனவர் சமுகத்தை சேர்ந்த பேராசிரியர் ராமதாஸ் என்பவரை புதுச்சேரியில் வேட்பாளரை நிறுத்தி வெற்றி பெற செய்தார் ராமதாசு ஐயா

*அருந்ததியர் (தெலுங்கு சக்கிலியர்) சமூகத்தை சேர்ந்தவர்கள் எந்த கட்சியிலும் மாவட்ட செயலாளர் கிடையாது,
நாமக்கல் மாவட்ட செயலாளராய் முதன்முதலாக ஒரு அருந்ததியரை நியமித்தார் இராமதாசு ஐயா

*M.P தேர்தலில் அருந்ததியினரை வேட்பாளாராக கூட எந்த கட்சியும் நிறுத்தியது இல்லை.
இராமதாஸ் ஐயா முதன்முதலாக அச்சமூகத்து பெண் ஒருவரை ராசிபுரம் தொகுதியில் வேட்பாளாராய் நிறத்தினார்.

*பல சாதிகளைச் சேர்ந்த மாவட்ட செயலாளர்கள் உள்ளனர்.

#பாமக வின் விழுப்புரம் மாவட்டத் தலைமை வானூர் சங்கர் (பறையர்)

# பாமக வின் பொருளாளர் அக்பர் அலி சையத்

#திருப்பூர் மாவட்ட செயலாளர் ஒரு அருந்ததியர் (சக்கிலியர்)

#குடந்தை நால்ரோடு செயலாளர் பன்னீர் (பறையர்)

#மாநில இளைஞர் சங்க துணை பொது செயலாளர் விடியல் ஜகந்நாதன் உப்பிலிய நாயக்கர்.

#ஈரோடு மாநில துணை தலைவர் வடிவேல் ராமன் (அருந்ததியர்)

#தெலுங்கு கன்னட சாதிகள் உட்பட பலரும் மாவட்டசெயலாளராக உள்ளனர்

*AIMS மருத்துவமனையில் SC/ST இடஒதுக்கீட்டை உறுதி செய்தவர் முன்னாள் நடுவண் அமைச்சர் அன்புமணி இராமதாசு அவர்கள்.

*சென்னையில் உள்ள சித்தமருத்துவ ஆராய்ச்சி கல்லூரியில் பண்டிதர் அயோத்தி  தாசர் (பறையர்) சிலையை திறந்தார் அன்புமணி.
இதற்காக பட்டியலின தலைவர் ராம்விலாஸ் பாஸ்வான் அவர்களை அழைத்துவந்தார் அன்புமணி இராமதாசு.

*பசுமைதாயகம் அமைப்பு சார்பில் ஐ.நா மன்றத்தில் அன்புமனி அவர்கள் கலந்துகொண்டு இலங்கையில் நடந்தது இனப்படுகொலையே என ஆணித்தரமாக வாதிட்டார்.

*தொலைக்காட்சி மூலம் செய்து வரும் தமிழ்த் தொண்டு

*பொறியியல் படிப்பு நுழைவுத்தேர்வு இரத்து போராட்டம்

* இலாட்டரி சீட்டு ஒழிப்பு போராட்டம்

* மது ஒழிப்பு போராட்டம்

* சமச்சீர் கல்விக்கான போராட்டம்

* தமிழகம் முழுவதும் அகல இரயில்பாதை கொண்டுவரப் போராட்டம்

* மத்திய மருத்துவ நுழைவுத்தேர்வில் பட்டியல் சாதியினருக்கு இடஒதுக்கீடு

*தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின மாணவருக்கு அகில இந்திய அளவிலான நுழைவுத்தேர்வுகளில் இடவொதுக்கீடு கொண்டுவந்தது

*அரியலூரில் இரட்டைக்குவளை முறை ஒழிப்பு

*70 இருளர் இன மக்கள் குடும்பங்பளுக்கு போராடி வீட்டுமனை பட்டா வாங்கி கொடுத்தது

* 108 அவசர ஊர்தி சேவை திட்டம் அமலாக்கம்

* பொது இடங்களில் புகைப்பிடித்தல் தடைச்சட்டம் ஏற்படுத்தியது

* புகை, மது போன்ற பொருட்களில் எச்சரிக்கை வாசகம் இடம்பெற செய்தது

* தமிழக்த்தில் 2000 அரசு மதுபான கடைகளை மூட நீதிமன்றம் வரை போராடி வென்றது.

*இசுலாமியருக்காக கோவை கோட்டை மேடு செக் போஸ்ட் எதிர்ப்பு போராட்டம்.

*இஸ்லாமியர்களுக்கு எதிரான.தடா சட்டத்தை எதிர்த்து போராடி சிறை சென்றது.
இஸ்லாமியர்கள் கூட்டம் நடத்த பரவலாக தடை விதிக்கப்பட்ட சூழலில் தடையை மீறி கூட்டங்கள் நடத்தி இஸ்லாமியர்கள் மீதான தடாவை விலக்கிக்கொள்ள வைத்தது.

*குறிஞ்சாகுளம் காந்தாரி அம்மன் கோயில் (பறையர்) போராட்டத்தை முதன்முதலில் முன்னெடுத்தது,
அப்போராட்டத்தில் ஈடுபட்ட கிருஷ்ணசாமியின் (பள்ளர்) மீது தாக்குதல் நடந்த பொழுது சம்பவ இடத்திற்கே சென்று போராட்டத்தை வீரியமாக்கினார் இராமதாஸ் ஐயா.

*குடிதாங்கி என்ற ஊரில் பறையர் பிணத்தை எடுத்துச்செல்ல மறுப்பு தெரிவித்த வன்னியரை அடக்கி தாமே அதை எடுத்துச் சென்றார் இராமதாசு ஐயா.
(தமிழ்க் குடிதாங்கி என்ற பட்டம் திருமாவளவனால் (பறையர்) வழங்கப்பட்டது)

*வீரப்பனார் (படையாச்சி) பற்றிய தொடர்

*காவிரி கலவரத்தின்போது துணிச்சலான அறிக்கை

இதுபோக
ரஜினியை (மராத்தியர்) கதறவிட்டது, கருணாநிதியைக் (தெலுங்கர்) கதறவிட்டது, ஸ்டாலினை (தெலுங்கர்) தெறிக்கவிட்டது என மேலும் பல