Tuesday 30 September 2014

மூன்றாம் தலைவர்

மூன்றாம் தலைவர்
#=-=#=-=#=-=#=-=#=
ஒரு மரபினத்தை பல இனங்கள்
கூட்டுசேர்ந்து வீழ்த்தியிருந்த காலகட்டம்;
எவரும் அழிக்கமுற்படாவிட்டால் தாமே அழிந்துவிட
தமிழினம் முடிவுகட்டியிருந்த சோர்வான நேரம்;
முதல் தலைவர் ஈழத்தில் இருநூறு ஆண்டுகள்
முன்பு உலகநாடுகளால் வீழ்த்தப்பட்டார்; இரண்டாம்
தலைவர் தமிழகத்தில் நூறு ஆண்டுகள்
முன்பு குறுக்குவழியில் வீழ்த்தப்பட்டார்;
இரண்டுமுறை இருமுனைகளிலும் தோற்று அழிவைச்
சந்தித்த இனத்தில்தான் தலைவனுக்கெல்லாம் தலைவனாக,
வல்லானுக்கெல்லாம் வல்லானாக எம் மூன்றாம் தலைவர்
தோன்றினார்;
அவர் பெயர் சொன்னாலே கேட்டவர் இதயமும் சொன்னவர்
இதயமும் அதிரும்; அவர் வாழ்நாளில் ஒருவருக்கேனும்
நன்மை செய்தாரா என்றால் செய்ததேயில்லை.
என்னை நோக்கி வரும் குண்டுகளை என் தாய்நிலம் ஈன்ற
காட்டுமரங்கள் தாங்கிக்கொண்டு வீழும்
என்மக்கள் புதிதாய்த் தூவும் விதைகள் நான்
கொன்றுபுதைத்த பகைவர்
பிணங்களே உரமாகக்கொண்டு வளரும்.
இதுபோன்ற வன்முறை நிரம்பிய கவிதைகள்,
குருதி வழியும் வரலாறு, ஈவிரக்கமே இல்லாத
அரக்கத்தனம், மூன்றாம் தலைவரின் பெயரைக்
கேட்டாலே புன்னகை காணாமல்போகும்;
தான் பிறந்த இனத்திற்கு மாறாக்
கலங்கத்தை ஏற்படுத்தியவர்; உலகக் கொடுங்கோலர்
பட்டியலில் இடம்பிடித்துவிட்டவர்; ஆனாலும், அவர்
ஒரு தலைவர்; எப்படி என்றால் தமிழ்மக்கள்
வெறுக்கமுடியுமேயன்றி தவிர்க்கமுடியாத
ஒரு அடையாளம் எம் மூன்றாம் தலைவர்; உலகில்
தமிழருக்கான அடையாளமாக மாறியவர்; அவர்
பெயரன்றி தமிழ் வரலாற்றில்
நான்குவரிகள் கூட எழுதமுடியாது; தமிழன்
நெறிதவறமாட்டான் என்று வரம்புமீறியே பழகிப்போன
பகைவர்களுக்கு உள்மூளையில் பட்ட காயம்போல
ஆழமாகதொரு பாடம் புகட்டிய விதிவிலக்கு;
எம் மூன்றாம் தலைவர் ஒரு சராசரியான குடும்பத்தில்
பிறந்தார்; அவர் இனரீதியாக எந்தவகையிலும்
பாதிக்கப்படவில்லை; அவர் பிறந்த பகுதியிலும்
இனவழி எந்த இடர்ப்பாடும் இல்லை; அவர்
அமைதியானவராக, மாந்தநேயராக,
உயர்கல்வி கற்றவராக, வாழ்க்கையில் அனைத்தும்
கிடைக்கப்பெற்றவராக இருந்தார்; அவர்
தமது முப்பது வயதுவரை ஒரு வம்புச்சண்டைக்கேனும்
போனவரில்லை; அந்த சராசரி இளைஞன்தான்
மிகக்குறுகிய காலத்தில் கொலைகாரனாக,
வன்முறையாளனாக, தீவிரவாதியாக, கிளர்ச்சியாளனாக,
ஒரு இனத்தின் எதிரிகளையெல்லாம் ஒற்றை ஆளாக
பந்தாடிய தலைவனாக உருவெடுத்தார்; அவர் குடித்த
உயிர்கள் கணக்கிலடங்காதவை; கசாப்புக்கடையில்
வளர்ந்த சிறுவனால்கூட இத்தனை அசட்டையாக
வன்முறை செய்யமுடியாது; இனரீதியாக
பாதிக்கப்பட்டவனால்கூட அத்தனைத் தீவிரமாக
இயங்கியிருக்க முடியாது; உயிர்வாழ்ந்த
காலம்வரை அவரை யாராலும் வீழ்த்தமுடியவில்லை; அவர்
குறுக்குவழிக்கே குறுக்குவழி காட்டுபவராக
இருந்தார்.
இருந்தும் அவர் தமிழ்மக்கள் உள்மனதில் யாருக்கும்
வெளிப்படையாகத் தெரியாமல் வீற்றிருக்கும் தலைவர்;
ஏன் அவரைத் தலைவராக ஏற்பதைத் தவிர்க்கமுடியாத
ு என்றால், தமிழினம்
அழிவிலிருந்து மீண்டு அரசாளும் வழியை அவர்தான்
காட்டினார்; அவருடைய கருத்தியலும் கோட்பாடும்
இனவழி அழிவுக்கு முற்றுப்புள்ளி வைத்து என்றென்றும்
வழிநடத்தும் பாதையாக இருக்கும்;
அவர் எழுத்தும் பேச்சும் மாந்த நேயத்தையும்
இயற்கை காப்பையும் நேர்மையையும் வீரத்தையும்
ஒற்றுமையையும் எந்தவொரு சிந்தனையாளரையும் விட
சிறப்பாக சொல்கின்றன; ஒரு இனத்திற்கு தக்கவழியைக்
காட்டிய எம் தலைவர் நடைமுறையில் அதைக்
கிஞ்சித்தும் செயல்படுத்தவில்லை; அவர் செய்ததெல்லாம்
அடிக்கு அடி, உதைக்கு உதை, உயிருக்கு உயிர் என்ற
பழிவாங்கல் நடவடிக்கைதான்; "புரட்சி,விடுதல
ை இதற்கெல்லாம் நான் போராடவில்லை, என் மக்கள்
மீது வன்முறையை ஏவினால்
பதிலடி கொடுப்பது மட்டும்தான் என் வேலை, பழிக்குப்
பழி செய்வது தீவிரவாதம் என்றால் நான்தான்
முழுமையான தீவிரவாதி" என்று வெளிப்படையாக
சொன்னவர் எம் தலைவர்;
ஒரு முறை அவரைப் பேட்டி கண்டவர் கேட்டார்,
"உங்கள் செயல்பாடுகள் என்னென்ன?" என்று.
தலைவர் சொன்னார் "என் செயல்பாடு உயிரை எடுப்பது,
எந்த இனத்தவனோ அவன் நோக்கம் என்னவோ இருந்துவிட்டுப்
போகட்டும்; என்னைப்போன்ற ஒரு மாந்தனை நான்
கொல்கிறேன்; இதுதான் நான் செய்வது; பல
உயிர்களை வாழவைக்க சில உயிர்களை நான் கொல்கிறேன்;
இதுதான் என் செயல்பாடு".
இந்த பதிலை பலகோணங்களில் ஆராய்ந்தால் எம் தலைவரின்
மாந்தநேயத்தையும்,வீரத்தையும், திமிரையும்,
அறிவாற்றலையும் அறியலாம்;
இப்படி ஒரு காட்டுமிராண்டித்தனமான வழியைக்
கடைப்பிடித்தவர் அருமையான கோட்பாடுகளையும்
கருத்தியல்களையும் எப்படி வழிவகுத்தார்
என்று எவருக்கும் புரியாது; எம் மூன்றாம் தலைவரைப்
புரிந்துகொள்ள அவரது தனிப்பட்ட வாழ்க்கையையும்
அவர் காலத்து அரசியல் சூழலையும் உணர்ச்சியுடன்
கூடிய அறிவால் ஆராய்வது தேவை;
அவர் நேர்மையான, குறையில்லாத, அறிவார்ந்த மக்கள்
மத்தியில் பிறந்தவர்; அவர் வரலாற்றையும்
அரசியலையும்
நன்கு கற்றார்;இது அவரது சிந்தனைக்கு செறிவூட்டி கொள்கைகளை ஆராய்ந்து குறைநீக்கி நடைமுறைக்கேற்ப
வளைத்து புதிய கருத்துகளை அவர் உருவாக்க
உதவியது; மக்களுக்கு எதாவது செய்யவேண்டும் என்ற
தீவிரமான எண்ணம் இருந்தது;
ஏற்கனவே இரண்டு பேரழிவினைச் சந்தித்தித்திருந்த
மக்கள்; சுற்றிலும் பகைவர்கள்; சிறிய
எழுச்சி தெரிந்தாலும் ஒரு இனவழிப்பை நடத்த
கண்கொத்திப்பாம்பாகக் காத்திருந்தனர்; தலைவர் எண்ணம்
உண்மையில் புரட்சியும் விடுதலையும்தான்;
அதை நேர்வழி சாதிக்க ஏற்றசூழல் இல்லை;
ஒரு தலைமுறையில் சாதிக்க விடுதலை ஒன்றும்
அத்தனை எளிதான காரியமில்லை;
அப்போது புரட்சி,விடுதலை
,எழுச்சி என்று தொடங்கியிருந்தால்
தீவிரவாதி என்று முத்திரைகுத்தி படையெடுத்து வந்திருப்பார்கள
்; விடுதலைகூட கிடைத்திருக்கலாம் ஆனால், சேதம்
அதிகம் இருந்திருக்கும்; அதனால்தான் தலைவர்
வன்முறையைக் கையிலெடுத்தார்; மற்றவர்கள் அவரைத்
தீவிரவாதி என்று முத்திரை குத்தவில்லை; ஏனென்றால்
அவரே தன்னைத் தீவிரவாதி என்று அறிவித்துவிட்டார்;
வல்லாதிக்ககங்கள் சிதைந்துபோன இனத்தை மேலும்
சிதைக்கவந்த கோடாரிக்காம்பு என்றுதான்
தலைவரை நினைத்தனர்; தலைவர் முதலில் இரண்டகம்
செய்தவர்களை துடைத்தெறிந்தார்; விடுதலைப்போரில்
தோற்றாலும் வென்றாலும் சேதம் என்னவோ போராடும்
மக்களுக்குத்தான்; இந்த விதியை மாற்றியமைத்தவர்
தலைவர்; வன்முறை எந்த முறையில்
நடந்ததோ அதை அப்படியே திருப்பிக்கொடுப்பபதுதான்
அவர் பாணி; தமிழ்நிலத்துக்கு உள்ளே யார்
வந்து வன்முறையை நடத்தினாலும் அவர்கள்
தாய்நிலத்திற்குள் சென்று ஈடான
அளவு வன்முறையை நிகழ்த்துவார்; தலைவர்
பிறக்குமுன் ஒரு கொடூரமான கற்பழிப்பு நடந்தது;
அதன் குற்றவாளிகள் தண்டனை என்ற பெயரில் நன்றாக
கவனிக்கப்பட்டு விருந்தினர்போல சிறையில்
இருந்தார்கள்; இனவெறிக் கொலைகாரர்களுக்க
ு அப்படி ஒரு கவனிப்பு நடப்பது செய்தியாக
வெளிவந்தது; அடுத்து சில நாட்களுக்குள் அந்த
குற்றவாளிகளின் வீட்டுப்பெண்களில் ஒருவர்வீதம்
ஒவ்வொருவராக கற்பழித்துக் கொலை செய்யப்பட்டனர்;
இப்படியான ஒரு செயலை பலரும் கண்டித்தனர்; ஆனால்,
போற்றுவோர் போற்ற தூற்றுவோர் தூற்ற தம்
மனச்சான்றே நீதிபதியாகத் தலைவர் தம் பணியைத்
தொடர்ந்தார்; அரசியல் கயவர்களை மேலுலகம்
அனுப்பினார்; அட்டூழியம் செய்துவந்த
வன்முறை வெறியர்களை வன்முறைக்கே பலியெடுத்தார்;
மறைமுக வல்லாதிக்கங்களின்
ஒடுக்குமுறையை அறிந்திருந்தார் அவற்றிற்கெதிரான
கோட்பாடுகளை உருவாக்கி வைத்தார்; ஆனால்
அடிபொடி ஆதிக்கங்களின் நேரடி ஒடுக்குமுறையோடு
மோதினார்; இனத்தின் சிறிய எதிரி முதல் பெரிய
எதிரிவரை கண்ணுக்குத்
தெரிந்தவர்களை ஒழித்துக்கட்டினார்; தாம் ஏன்
இப்படி செய்கிறோம் என்று புரிந்த
ஒரு படையை உருவாக்கினார்; ஒரே இனத்திற்குள்
ஒரு குறிப்பிட்ட பிரிவை தனியாக கூறுபோட
நினைத்த ஒருவரை, தமது படையில் அதே குறிப்பிட்ட
பிரிவைச்சேர்ந்த ஆட்களை அனுப்பி தீர்த்துக்கட்டினார்;
குறுக்குவழிகள் எதுவும் அவரிடம் எடுபடவில்லை;
அவர் தமது நிழலைக்கூட நம்பியதில்லை; அதனால்தான்
இறுதிவரை அவர் வீழாமல் இருந்தார்; அவர் செய்த
நன்மையெல்லாம் வன்முறைக்குப் பதில் வன்முறை,
அதற்குப் பதிலடியாக வரும் வன்முறைக்கு மேலும்
பதிலாக வன்முறை என மோதலைக் கொஞ்சம் கொஞ்சமாகப்
பெரிதாக்கி எதிரிக்கும் மக்களுக்கும்
இடையே தெளிவான கோட்டினை வரைந்ததுதான்; இன்றைய
தமிழர்கள் அவர் பெயரைச்சொல்லவும் தயங்குகிறார்கள்;
ஆனால், அன்றைய தமிழர்கள்
முழு ஆதரவு வழங்கினார்கள்;
அவர்களுக்கு விடுதலை பிறக்கும்
என்று நம்பிக்கை வருமுன் திருப்பியடிக்கமுடியும்
என்ற நம்பிக்கையை அவர் உருவாக்கியிருந்தார்;
வெறுமனே பொதுமக்களைக் கொல்லும்
வன்முறைக்குழு என்று பெயரெடுத்தாலும் வீரம்செறிந்த
மோதல்களும் அவர்தம் வரலாற்றில் இடம்பெற
வைத்திருந்தார்;
ஒருமுறை அவரது படைகள் தம்மைப்போல
இருமடங்கு எண்ணிக்கையுள்ள படைகளை சரணடைய
வைத்தது; யாரையும் அவர் துன்புறுத்துவதி
ல்லை ஒரே தோட்டாவில் தீர்த்துவிடுவார்; யாரையும்
மன்னிப்பதும் இல்லை;
எதிரிக்கு இரண்டாவது வாய்ப்பு கொடுப்பதை விரும்பாதவர்;
எதிரிகள் மட்டுமன்றி எதிரிகளின் தலையெடுக்க
வாய்ப்புள்ள இடங்களை துடைத்தெறிந்தார்;
அவர்களுக்கு தாங்குதளமாக இருப்பவைகளை ஒழித்தார்;
அப்பாவி மக்கள் எதிர்ப்பக்கமும்
உண்டு என்று நினைவுபடுத்தினார்; அவரை பிடிக்க
வல்லாதிக்கங்கள் மக்களுக்கு ஏற்படுத்திய சேதம்
ஏராளம்; அதற்கு விலையாக வல்லாதிக்கங்கள்
காலூன்றி நிற்கத் தோள்கொடுக்கும் அதன்
மக்களை சரியானபடி கவனித்தார்; அவர் பழியைத் தாம்
ஏற்றுக்கொண்டு மக்களிடமிருந்து விலகிக்கொண்டார்;
மக்கள் ஆதரவிருப்பதாக அவர் காட்டிக்கொண்டதே இல்லை;
இன்று அவர்காட்டிய பாதையில் அவர் ஏற்படுத்தித் தந்த
அடித்தளத்தில் எம் நான்காம் தலைவர் ஆட்சிசெலுத்துகி
றார்;
ஆனால், அவரால்கூட மூன்றாம்
தலைவரை மேற்கோள்காட்டிக்கூடப் பேசமுடியாது;
உலகையே எதிர்த்துக்கொண்டு இன்று நாங்கள் வல்லரசாக
ஆகியிருக்கிறோம்; எம் மூன்றாம் தலைவர் வழிநடக்கும்
பதிலடிக் குழு ஒன்று இன்றும் எம்நாட்டில்
பதுங்கியிருப்பதே எமது முப்படைகளையும் விட
எமக்கு பாதுகாப்பளிக்கிறது; நான்காம் தலைவர்
அடிக்கடி சொல்வார் "பழியை ஏற்கத் தயங்காதவன்தான்
தலைவன்" என்று; அப்படிப் பார்த்தால் எம் மூன்றாம்
தலைவர் வேறு எவரும் கேள்விப்பட்டிராத
ஒரு புதுவிதமானத் தனிப்பெரும் தலைவர்.
https://m.facebook.com/photo.php?fbid=498313006939024&id=100002809860739&set=a.108935022543493.9865.100002809860739&_rdr

அடையாளம்-தொடர்

தோட்டாவோ..... துப்பாக்கியோ...அத நான்
பாத்துகிறேன்....அழகாக முடித்தார்...பெயருக்கேற்ற
சாயலில். ஒரு பெரிய சிரிப்புடன்
தாமரைக்கண்ணன் தொடர்ந்தார்... என்னடா
குட்டிப்பையா.. நீ ஈக்கிமதிரி இருக்க ஒங்க
அப்பாதுப்பாக்கி.. தோட்டான்னு பேசுறாரு.
கத்தி செய்யாததை புத்தி செய்யும்.
அதற்காககத்தி எடுத்த நம் முன்னவர்களை
நான் பலிக்கவில்லை. அந்த நாட்டுக்கு,
அந்தநேரத்தில் அது சரியாக இருந்தது.. நாம்
புத்தியில் ஆரம்பிப்போம்... காலமும், களமும்
முடியு செய்யட்டும் எதை
பயன்படுத்தவேண்டும் என்பதை. அன்று
வெற்றிமாறனுக்கு முதல் பாடம்
கற்றுத்தரப்பட்டது "பிரபாகரனின் வாழ்க்கை
வரலாறு". அவன் அங்கேயே ஒரு மாணவர்
விடுதியில் தங்கினான் என்பதைவிடஅன்று
முதல் தாரைக்கண்ணன் வீட்டிலேயே
பெரும்பாலும் கழித்தான்.
(முகம்தெரியாத ஒரு தமிழ்குடியரசுப்
போராளி எழுதிவரும் விடுதலைத் தொடர்)
http://tamiladaiyalam.blogspot.in/2011/02/
1.html?m=0
மொபைல் பதிவேற்றங்கள் · 11 பிப்ரவரி ·
https://m.facebook.com/photo.php?fbid=415343721902620&id=100002809860739&set=a.108935022543493.9865.100002809860739

புலித்தொற்று

புலித்தொற்று
-+-+-+-+-+-+-+
தற்போது தமிழர்களிடம் முக்கியமாக இளைஞர்களிடம்
பரவி வரும் ஒரு மோசமான தொற்றுநோய்தான்
'புலித்தொற்று'; இந்த நோய் ஏற்படுவதால்
வருங்காலத்தில் பெரிய அளவு போரும்,
அடிதடி மோதலும் உயிர்ச்சேதமும் ஏற்பட
வாய்ப்பு உள்ளது; இதிலிருந்து தங்களைக்
காத்துக்கொள்ள ஏற்கனவே இந்த
நோய்த்தொற்று உள்ளவர்களிடமிரு
ந்து விலகி இருக்கவும்; தப்பித் தவறிகூட
விடுதலைப் புலிகளைப் பற்றியோ அல்லது ஒழுங்காக
வேலைக்குப் போய் சம்பாதித்து குடும்பத்தைக்
காப்பாற்றாமல் வீட்டைவிட்டு ஓடிப்போய் ஆயுதம்
தூக்கி முழுவாழ்க்கையையும் குடும்பத்தையும்
தொலைத்த பிரபாகரன் என்ற உலகநாடுகளால்
தடைசெய்யப்பட்டத் தீவிரவாதியைப்
பற்றியோ அறிந்துகொள்ள முனையக் கூடாது;
ஏற்கனவே தங்களுக்கு கொஞ்சம் தெரியும் என்றால்
அங்கேயே நின்றுவிடுங்கள்; மேற்கொண்டு அறிய
முற்படவேண்டாம்; தொடக்கத்தில் வியப்பாகவும்,
மகிழ்ச்சியாகவும் இருக்கும் இருக்கும், ஆனால்
காலப்போக்கில் அதற்கு அடிமையாக நேரிடலாம்;
அதன்பிறகு ஒரு சராசரி மனிதனாக அல்லாமல்
காட்டு விலங்கான ஒரு புலியைப் போலச்
செயல்படுவீர்கள்;அதாவது சின்ன சின்ன
விசயங்களுக்கு சிரிப்பு வராது, பெரிய
அதிர்ச்சிக்கும் அழுகை வராது,
நினைத்தது உடனே நடக்கவேண்டும் எனத் தோன்றும்
அது நடக்காதபோது ஆத்திரம் வரும்;
மனஅமைதி போய்விடும்; எதையும் சகித்துக்கொண்டு
போகமுடியாது; எல்லாமே தவறாக இருப்பதாகவும்
சரிசெய்யவேண்டுமென்றும் தோன்றும்; அதைவிடக்
கொடுமை என்னவென்றால் அடுத்தவர்
பிரச்சனைகளை நமக்கென்ன என்று விடமுடியாது;
உங்கள் நடை பழையநடையாக இருக்காது; உங்கள்
பேச்சு பழையபேச்சாக இருக்காது; நீங்களே வாள்
சுழற்றுவதுபோலவும், உரைநிகழ்த்துவது போலவும்,
கொலைசெய்வதுபோலவும் கற்பனைகள் தோன்றும்;
சுற்றியிருப்பவர்களுடன் ஒட்டமுடியாது; நீங்கள்
பேசும்மொழி உங்களுக்கே அதிக இனிமையாகத்
தோன்றும்; தன்மீதான நம்பிக்கை அதிகமாகிவிடும்
அதனால் யாரையும் முழுமையாக நம்பமுடியாது;
எல்லோரும் முட்டாள்களாகத் தோன்றுவர், யாரையும்
சரியாக மதிக்கமுடியாது; உலகத்தில் தன்வேலையைப்
போட்டுவிட்டு சம்பந்தமே இல்லாத மக்களுக்காக
உயிர்விட்டவர்களைத் தேடித் தேடி அறியும் விருப்பம்
வரும்; ஆயிரம்வருடங்களு
க்கு முன்பு நடந்துமுடிந்ததை அறியவேண்டும்
என்று தேவையற்ற விருப்பம் உண்டாகும்; மாற்றான்
என்று நினைத்தவர் நம்மவர் என்றும் நம்மவர்
என்று நினைத்தவர் மாற்றானாகவும் தோன்றும்; குழப்பம்
அதிகமாகும் அது தெளிய மேலும் அறியமுற்படுவீர்
கள்; பிறகு வேறொரு குழப்பம் வரும்; அவர்கள்
பாட்டுக்கு வாழும் மக்களை ஒன்று திரட்டி உங்கள்
பின்னால் வரச்செய்யவேண்டும் என்று தோன்றும்; பலர்
மத்தியில் உங்களைப் புதிதாய்ப் பார்ப்பவர்கள்
கூர்ந்து பார்ப்பார்கள், உங்களுடைய சிந்தனையும்
மற்றவரைவிட மாறுபட்டுவிடும்; முன்பின் பார்க்காத
சில அரசியல்வாதிகள் எதிரி என்று எண்ணத்தோன்றும்;
எதை எடுத்தாலும் கேள்வி கேட்பீர்கள்; அதுவரை நீங்கள்
ரசித்த நடிகர்களும், நாயகர்களும்
திடீரென்று சலித்துவிடுவார்கள்; உங்கள் பேசியில்
துப்பாக்கி சத்தம் அழைப்பு ஒலியாக்கப்படும்;
நடுஇரவில் திடீரென்று விழிப்பு வரும்
பிறகு தூக்கம் வராது; படிப்பிலோ வேலையிலோ உங்கள்
மனம் செல்லாது; ஊர்,பெயர் மட்டும் தெரிந்த
யாரோ ஒருவன் உங்கள் தலைவனாவான்; எதிர்ப்பாலினரைக்
கண்டால் ஆசை வராது மதிப்புதான் வரும்;
வாழ்க்கைக்கு அவசியமான பணத்தின் முக்கியத்துவம்
தெரியாது; எப்போதும் சிறிய ஆயுதம்
வைத்துக்கொள்ளத் தூண்டும்;
என்னவெல்லாமோ எழுதத்தோன்றும்; முன்புபோல
உங்களுக்காக நீங்கள் அழமுடியாது ஆனால்,
தொடர்பேயில்லாத தொலைதூர மக்களுக்காக
அழத்தோன்றும்; 24மணிநேரமும்
மற்றவர்களுக்கு வருங்காலத்தில் என்ன நடக்கும் என்ற
தேவையற்ற சிந்தனையே இருக்கும்; ஆகவேதான்
கூறுகிறேன்; நன்றாகப் படிப்போம்;
அம்மா அப்பா மீது பாசமாக இருப்போம்; வேலைக்குப்
போய் சம்பாதித்து நம்
பிள்ளைகளுக்கு சேர்த்துவைத்துவ
ிட்டு செத்துவிடுவோம்;
அதுதானே சாதனை?!?!?!????????

https://m.facebook.com/photo.php?fbid=415463378557321&id=100002809860739&set=a.108935022543493.9865.100002809860739

மூவேந்தர் ஓரினமே

இராசேந்திர சோழன் வெளியிட்ட தங்க காசு; இந்த நாணயத்தில் சேர,சோழ,பாண்டிய சின்னங்களான மீன்,வில்,புலி மூன்றும் உள்ளன.
இது அகமதாபாத் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது;
அந்நாட்களில் தமிழ்நாட்டாண்மை(தமிழ் தேசிய) சிந்தனைக்கு எடுத்துக்காட்டு;

என்னதான் அடித்துக்கொண்டாலும் அவர்கள் தமிழனாகத்தான் இருந்தார்கள்.

புலிகளின் ஐந்து நாள்ப் பாய்ச்சல்

2 1/2 வருடம் பதுங்கி
5 நாட்களில் பாய்ந்த புலிகள்
iiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiii
புலிகளின் பல்வேறு சாதனைகளில் மிகமுக்கியமானது
.'ஓயாத அலைகள்-3' ஆகும்; இதை சுருக்கமாக
அறிந்துகொள்வோம்; மேலேயுள்ள படத்தில்
குத்துமதிப்பாக வரைந்துள்ளேன்; எளிமையாக
புரிந்துகொள்ள படங்கள் உதவும்; புலிகள்
யாழ்ப்பாணத்திலிருந்து 1996ல் ஐநூறு ஆயிரம்
(5லட்சம்) மக்களுடன் யாழ்ப்பாணத்தில்
இருந்து தெற்கே வன்னிப்
பகுதிக்கு (கிளிநொச்சி மற்றும்
முல்லைத்தீவு மாவட்டங்கள் சேர்ந்தது) இடம்பெயர்கிறார்
கள்; 1996 ல் 'ஓயாத அலைகள்' என்ற பெயரில்
பெண்புலிகளை அனுப்பி முல்லைத்தீவு படைமுகாமைத்
தாக்கி கைப்பற்றுகின்றனர்; இந்த அவமானத்தைத்
தாங்கமுடியாது சிறிலங்கா 'ஜெயசிக்குறு' (வெற்றி உறுதி)
என்ற பெயரில் வன்னிக்குப் போர்தொடுக்கிறது;
வடக்கே யாழ்ப்பாணம் அரசகட்டுப்பாட்டில்,
நடுவே வன்னி புலிகள் கட்டுப்பாட்டில்
தெற்கே அரசு நடக்கும்பகுதி; இப்படி இருப்பதால்
யாழில் இருக்கும் 30,000 சிங்கள படையினருடன்
கொடுக்கல் வாங்கல் பெரும் சிரமமாக இருப்பதால்
வன்னியின் நட்டநடுவில் யாழில்
இருந்து வவுனியா வரை இருக்கும் கண்டிவீதியை(ஏ9
சாலை) கைப்பற்ற ஜெயசிக்குறு நடவடிக்கை 1997ல்
தொடங்குகிறது; புலிகளின் பலத்த எதிர்ப்புடன்
இது புளியங்குளம்
வரை சென்று பிறகு ஏ9க்கு போகமுடியாமல்
விலகி ஒட்டுசுட்டான் வரை முன்னேறுகிறது;
அதற்குமேல் முடியாமல்
ஜயசிக்குறு கைவிடப்படுகிறது; இந்நிலையில்
கீழே மறுபக்கம் மன்னாரிலிருந்து ரணகோச
நடவடிக்கை தொடங்கப்பட்டு பள்ளமடு வரை முன்னேறுகிறது;
இந்நிலையில் புலிகளின் பகுதி மிகவும்
சுருங்கி நாலாபக்கமும் முற்றுகையிடப்பட
்டுவிட்டது; முல்லைத்தீவோ புதுக்குடியிருப
்போ விரைவில் அரசால் கைப்பற்றப்படும் என்றும்
அதன்பிறகு புலிகள் எழமுடியாது என்றும் பலர்
எதிர்பார்த்தனர்; ஈழமக்களும் நம்பிக்கை இழந்துவந்தனர்;
புலிகள் அப்போது 2,000 பேர்;
சுற்றி நிற்பதோ 45,000 சிங்கள வீரர்கள் படை; சிங்கள
அரசு ஒரு சாலையைக் கைப்பற்றப்போய் இத்தனை பெரிய
வெற்றி கிடைக்கப்போகிறதே என்று கூத்தாடியது;
ஆனால், புலிகளின் கட்டுப்பாட்டுக்கு உள்ளேயிருந்த
மக்கள் நம்பிக்கை இழக்கவில்லை; அவர்கள் தமக்கேயுரிய
வீரத்துடன் புலிகள் அளித்த
பயிற்சிகளை பெற்று படையில் இணைந்தனர்; இந்த
நிலையில் 1998ல் 'ஓயாத அலைகள்2' நடவடிக்கை மூலம்
புலிகள் கிளிநொச்சியைக் கைப்பற்றுகின்றனர்;
சிங்களப் படை பள்ளமடுவிலிருந்து 'வாட்டர் ஷாட்' என்ற
பெயரில் எடுத்த நடவடிக்கைகளும் மேலே பூநகரியில்
படையை இறக்கும் நடவடிக்கையும் புலிகளால்
தடுக்கப்படுகிறது; 1999ல் புலிகளின்
வரலாற்று சிறப்பு மிக்க "ஓயாத அலைகள் -3"
நடவடிக்கை ஒட்டுசுட்டானை நோக்கி தொடங்குகிறது;
புலிகள் அப்போது என்ன மாயம்
செய்தார்களோ தெரியாது இரண்டரை வருடமாக
முக்கி முக்கி முன்னேறிய சிங்களப்படை வெறும்
ஐந்தே நாட்களில் தொடங்கிய இடத்தைவிடவும்
பின்னுக்குத் தள்ளப்பட்டது; புலிகள் மிகக்குறைந்த
இழப்புடன்
அதிகளவு சேதமளித்து கற்பனை செய்யமுடியாத
வேகத்துடன் முன்னேறிவிட்டனர்; பலரால்
இதை நம்பமுடியவில்லை; இந்த அதிர்ச்சி தெளியுமுன்
புலிகள் வடக்கே 30,000 படையினரைக் கொண்ட
இலங்கையிலேயே பெரிய படைமுகாமான
ஆனையிறவை அடித்து நொறுக்கினர்; அதை அடுத்த
பதிவில் பார்ப்போம்.
http://thesakkaatu.com/doc3509.html